நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி! 70

”ஆ..! பொடவைக்கு பொடவை.. விட்டுத்தர மாட்டிங்களே..?”

உமா சிரித்தாள். ”பொடவைன்னா அத்தனை எளக்காரமா..?”
”யாரு சொன்னது.. எங்க போனாலும்.. பொடவைக்குத்தான் மவுசு..! வேட்டிய எல்லாம் யாரு மதிக்கறாங்க..?”
” சும்மாவா…ஆம்பளைக உலகமே… பொடவைக்குள்ளதான மறஞ்சிருக்கு..”
” ஹா…ஹா.. ரொம்ப சரியா சொன்ன..” என்றவன் கொஞ்சம் நெருங்கி நின்று சொன்னான்.”உன்னோட உலகத்த.. சுத்திப்பாக்கனும்னு.. எனக்கும் ரொம்ப நாளா.. ஒரு ஆசை..!”

உமா ஒன்றும் பேசவில்லை.

”என்ன உமா.. சினிமா போலாமா..?” குரு கேட்டான்.

”மஞ்சுளாக்காவ.. ஒரு வார்த்தைக் கேட்டுச் சொல்லட்டுமா…?”
” ஆஹா. .. வெச்சியே.. ஆப்பு..!” எனச் சிரித்தான்.

”என்ன படத்துக்கு. .?” உமா கேட்டாள்.
” ஏதோ ஒரு படம்..! நமக்கு அதுவா முக்கியம். .?”

உமா பேசவில்லை. புன்னகைக்க மட்டும் செய்தாள்.

அவனே கேட்டான் ”ஓகே வா.. உமா..?”
” படத்துக்கு மட்டும்னா வரேன்..” என்றாள்.
”என்ன உமா இது..? படத்துக்கு மட்டும்னா.. என் பொண்டாட்டியவே கூட்டிட்டு போயிறுவேனே..!”

அவனது வீட்டைப் பார்த்தாள் உமா. மஞ்சுளா வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனாள்.

” இதுக்கும் அந்தக்காவோடயே நிறுத்திக்க வேண்டியது தானே?”
” அது கெணத்து தண்ணி உமா. .! உப்புத் தண்ணியக் குடிச்சு… குடிச்சு.. நாக்கு செத்துப்போச்சு..! ஆத்து தண்ணினா… கொஞ்சம் சுவையாவும் இருக்கும்..தாகமும் தணியும். .!!”

மவுனமாகக் குடத்தை எடுத்தாள் உமா.

”அதிகமா.. வேனாலும் தரேன் உமா. .?” என்றான்.
”அதிகம்னா…?”

” நீ.. என்ன எதிர் பாக்ற..?”
”என்னோட உலகம் புதுசு..!” என்றாள் ”இளமையானது..!’
” அதுலென்ன சந்தேகம்…?”
”என்னோட சுற்றுப் புறத்தையும் நான் பாதுகாக்கனும். .! கண்டவங்க எல்லாம் வந்து… குப்பை போட முடியாது..!”
” சரி.. நீயே சொல்லு..!”
” நா ஒன்னும்..கடைச்சரக்கு இல்ல. .!”
” இல்ல.. இல்ல. . அப்படி இல்ல. .! நா கேட்டது…”
”ரேட் பேசறது.. எனக்கு புடிக்கல…!”
”சரி…சரி.. அன்பளிப்பு..மாதிரி. .”
”அன்பளிப்பா…?”
” ம்…ம்…! இந்த விலையில்லா பொருள் மாதிரி… விலையில்லா… பணம்…???”

‘ஹ்ஹா…ஹா..!’ வாய்விட்டுச் சிரித்தாள்.
”விலையில்லா பணமா…?”
” ம்..ம்..! என்ன சொல்ற..?”
” இப்ப இல்ல… இன்னொரு நாள். . பாக்கலாம்…!”
” ஏன் உமா…?”

எதுவும் சொல்லாமல்.. சிரித்துக் கொண்டே.. குடத்துடன் போய்விட்டாள்..!!

மறுநாள்…!!
பேருந்து நிறுத்தம் கொஞ்சம் கூட்டமாக இருந்தது.
உமா வேலைக்குப் போவதற்காக நின்றிருந்த போது.. சந்தியா வந்தாள்.

”ஹேய்… உமா. . வேலைக்கா..?” எனக் கேட்டாள் சந்தியா.
” ஆமா ”என்றாள் உமா ”நீ எங்க..?”
”ஹாஸ்பிடல் போறேன். .?”
”ஏன்..என்னாச்சு..?”
”எங்கம்மாக்கு ஒடம்பு செரியில்லாம.. அட்மிட் பண்ணியிருக்கு..”
” ஓ..! என்ன ஒடம்புக்கு..?”
” வயசாய்ருச்சு இல்ல… அதான் மத்தபடி.. வேற எந்த நோயும் இல்ல. .!”
” ஆமா நேத்து. . எங்க போயிருந்த…?”
”நேத்தும் ஆஸ்பத்ரிதான். . ஏன்..?”
” உன்னப் பாக்கலாம்னு..வந்துருந்தேன்..! நீ இல்ல. . உன் வீட்டுக்காரருதான் இருந்தாரு..”
”எப்போ..?” சந்தியாவின் கண்கள் விரிந்தன.
”நேத்து காலைல.. ஒரு பத்து. .மணிக்கு மேல.. இருக்கும்.! ”
”என்ன உமா சொல்ற.. நீ..?” என வியப்புடன் கேட்டாள் சந்தியா ”காலைல பத்து மணிக்கு மேல… என் புருஷன பாத்தியா..?”
” ஆமா சந்தியா. ..”
” எங்க. ..?”
”வேறெங்க… உன் வீட்லதான்.”
”பேசினியா…?”

சிரித்து விட்டாள் உமா ”பேசினியாவா. .?” பைத்தியக்காரி… உன் கட்டிலைக் கேட்டுப் பார்…கூடப் படுத்ததையே சொல்லும்.”ஆமா. . நீ ஏன் இவ்ளோ… இதா கேக்ற…?”
” இல்ல… காலைல எட்டு மணிக்கு. . என்கூடத்தான் வெளில கெளம்பினாரு..! போய்ட்டு மத்யாணம்தான் வீட்டுக்கு வந்ததா சொன்னாரு.”
சிரித்தாள் பாக்யா ” நா.. அங்கருக்கப்பத்தான்.. நீ போன்கூட பண்ணியே..?”
”போனா…? நானா…? ஏய்… நேத்தெல்லாம் அவருக்கு நான் போன் பண்ணவே இல்ல..!”
” ஓ…! அப்ப வண்டி.. வேற ஏதோ ரூட்ல… போகுது போலருக்கே…! கொஞ்சம் கவனி..! அதுசரி… தலைவலியா இருக்குன்னாரு..! காபியெல்லாம் போட்டுக்குடுத்துட்டுத்தான் வந்தேன்.. அதெல்லாம் சொல்லலையா உன்கிட்ட. .?” பணம் கொடுப்பதாகச் சொல்லி..அவன் செய்த.. ஏமாற்று வேலைக்கு… இதுதான் நல்ல பரிசு..!

சந்தியாவின் முகம் மாறியது.
” நீ காபி போட்டுத்தந்தியா..?”
”உம்..! தலைவலிக்கு காபி குடிக்கனும் போலருக்குன்னாரு..! பாவம் காபி போட்டுக்குடுத்தேன்..!”
”ஐயோ… இன்னும் வேற என்னெல்லாம் சொன்னாரு..?”
” ஏன் சந்தியா. ..?”
”ஐயோ. .. அவருக்கு நல்லாவே சமைக்கத் தெரியும்… அந்த மனுசனுக்கு காபியா போடத்தெரியாது. .?”
”என்ன சொல்ற நீ..? அப்பறம் ஏன். . என்கிட்ட அப்படி சொல்லி.. காபி வாங்கிக்குடிக்கனும். ..?”
”அதான் உமா. . எனக்கும் புரியல…? இன்னும் என்னென்ன சொன்னாரு..?”
”உம்.. நீ பீரோவ பூட்டி சாவிய எடுத்துட்டு போய்ட்டியா..?”

”இல்லையே ஏன். ..?”
” கைச்செலவுக்குக்கூட கைல காசில்லேன்னாரு..! நீதான் பீரோவ பூட்டி சாவிய எடுத்துட்டு போய்ட்டியாம்..!”