நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி! 70

காபியை சுவைத்துப் பருகினாள் உமா.
மழையின் ஈரத்தாலோ..அல்லது கார்த்திக்குடன் குடிப்பதாலோ தெரியவில்லை. காபி மிகவும் சுவையாக இருந்தது.

”நீ என்ன சொல்ற.. உமா. .” எனக் குழப்பத்துடன் கேட்ட கார்த்திக்கைப் பார்த்து…
மோகனமாகச் சிரித்தாள். அவள் முகம் சந்தோசத்தில் பூத்திருப்பதை.. அவளாலேயே உணர முடிந்தது.
”நா சொன்னது புரியலியா..என்ன. .?” எனக் கேட்டாள்.
”ரெண்டாவதா…?”

”என்ன தப்பு. .? நான் ஒன்னும் சொல்லப் போறதில்ல..”

ஒருசில கணங்கள் திணறிப் போனான் கார்த்திக். வாயடைத்துப் போய்… அவளையே பார்த்தான்.

”என்ன கார்த்தி… பதிலே..இல்ல. ..?” என அமைதியாகவே கேட்டாள் உமா. ..!!!!

கார்த்திக்கை.. குறுகுறுவெனப் பார்த்தாள் உமா.
”என்ன சொல்ற…கார்த்தி..”

திகைப்பிலிருந்து மீளாத கார்த்திக் ”அது.. அத்தனை சுலபமா.. என்ன. .?” எனக்கேட்டான்.

உமா ”அது அத்தனை கஷ்டமா என்ன..? இப்ப மழைக்கு சூடா.. இந்த ஓட்டல்ல வந்து காபி குடிக்கறதில்ல..? அந்த மாதிரிதான். ..” என்றாள்.
” இது… இது காபி உமா. .! ஆனா… அது…?”
” ம்…?”
”என்ன. .. உம்…?”

அவனையே பார்த்தாள். பின் மெல்லிய குரலில் சொன்னாள்.
”கீப்பா.. வெச்சுக்கோ..! ”

திகைத்துப் போய்… அவளைப் பார்த்தான் கார்த்திக்.
”சே… என்ன உமா. . பேசற..?”
”ஏன்.. கார்த்தி.. இதுலென்ன தப்பு…?”
”ச்ச… அது.. எப்படி உமா..? உன்னப் போய்… நீ எப்படி. . இப்படிலாம் பேசற…?”
”காதல். .” என்றாள் ” பதினாலு வயசுல.. எதைப் பாத்து. . உனக்கு நான். .. என்னைக் குடுத்தேன்னு நெனைக்கற… காதல்தான் கார்த்தி..”
”ஐயோ. ..அத நான் மறுக்கல உமா. .! ஆனா.. நீ சொல்றது.. ச்ச.. ரெண்டாவதா… ம்கூம்… அதெல்லாம் வேண்டாம்..!”
”ஏன் கார்த்தி…? அதுலென்ன.. தப்பு. .?
”ஐயோ… ஏன் உமா. . நீ வேற..”
”உன் பொண்டாட்டி அழகா கார்த்தி..?”
”உம்… அழகுதான்…!” என.. வேறொங்கோ பார்த்தவாறு சைன்னான்.

சட்டெனச் சிரித்தாள் ” ஏய்… நா சும்மா உன்னைச் சீண்டிப் பாத்தேன்.. என்ன சொல்றேனு.! தப்பா நெனச்சுக்காத… உண்மைலயே.. நீ ரொம்ப நல்லவன்..” என்றாள்.

சிறிது நேரம் கழித்துக் கேட்டான் கார்த்திக்.
”நா வேனா.. பாக்கட்டுமா.. உமா. .?”

அடுத்த டேபிள் இளம் ஜோடிகளை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்த உமா. . அவன் பக்கம் திரும்பினாள்.
” என்னது…?”
”பையன்…?”
” பையனா..?”
” ம்..ம்… உனக்கு ஏத்த மாதிரி. .. மாப்பிள்ளை..?”
”மாப்பிள்ளையா..?” சிரித்தாள் ”நீ அந்த வேலைகூட பாக்கறியா.. என்ன. .?”
” அப்படி இல்ல… உமா. ..”
”நீயே எனக்கு புரோக்கரா..?”
”ச்ச… மாப்பிள்ளை பாக்கறவங்க எல்லாரும் புரோக்கர் இல்ல. . உன்ன இப்படி பாக்க.. எனக்கு கஷ்டமா இருக்கு..! உனக்கும் இளமயும். .வயசும் இருக்கு.. பின்ன ஏன் பண்ணிக்கக்கூடாது…?”

அமைதியாகி… அவனையே பார்த்தாள் உமா.

கார்த்திக் ”என்ன சொல்ற. ?” எனக் கேட்டான்.

பெருமூச்சு விட்டு ”சரி..” எனக் கண்களை மூடித்திறந்தாள்.”உன் விருப்பம் அதான்னா…பாரு..! ஆனா ஒருவிசயம் கார்த்தி… நான் இன்னும் அன்னக்காவடிதான். நையா பைசா சேப்டி கெடையாது..! நகை.. நட்டுன்னும்.. எதுவும் கெடையாது..! எனக்கு முன்வந்து… இதெல்லாம் பண்றதுக்கும் ஆள் கெடையாது..! அம்மா. .தம்பி. . அதான் தாமு. .. அவங்களுக்கும்.. என்னைவிட்டா…வேற போக்கிடம் இல்லை. .!”
”இதெல்லாம் ஏத்துக்கக் கூடியவனா இருந்தா..?”
”அப்படி… ஒருத்தன் இருப்பான்னு.. நம்பறியா..நீ..?”
” உனக்குன்னு ஒருத்தன் நிச்சயம் இருப்பான் உமா. . ட்ரை பண்றேன்..!” என்றான்.

மாப்பிள்ளை கிடைக்கிறானோ.. இல்லையோ.. ஆனால் கார்த்திக் பேசியது மனதுக்கு இதமாக இருந்தது.

” அப்பறம்… ரெண்டாந்தாரமா கேப்பாங்க…” ‘பக் ‘ கெனச் சிரித்த.. பக்கத்து டேபிள் இளம்பெண்ணைப் பார்த்தாள் உமா. ”அதுக்கும் நான் தயார்தான். ஆனா அம்மாவும். . தம்பியும் என்கூடத்தான் இருப்பாங்க… இதுக்கு ஒத்துகிட்டா… யாராருந்தாலும் நான் கல்யாணம் பண்ணிக்கறேன்.. கார்த்தி..!!”

அவள் மனதில் உள்ள. . துக்கங்களை எல்லாம். . மனம் திறந்து கொட்டத்தான் நினைத்தாள்..உமா. .!
ஆனால் இது அதற்கேற்ற இடம் அல்ல.. என்பதால். . மனதில் பொங்கின துக்கங்களை எல்லாம் உள்ளேயே அடக்கினாள்.!

அவன் அமைதியாக யோசிக்க.. பேச்சை மாற்றினாள் உமா.
”உன் குழந்தை… யாரு மாதிரி கார்த்தி… உன்ன மாதிரியா… அம்மா மாதிரியா..?”
”அம்மா ஜாடை…” எனச் சிரித்தான்.
” எப்ப நான். . பாக்கலாம்..?”
”இப்ப முடியாது. ..”
” ஏன். ..?”
”ஊர்ல.. இருக்காங்க. ..”
”ஓ…! எப்ப வருவாங்க…?”
” அத.. இப்ப சொல்ல முடியாது”
”ஏன் கார்த்தி…?”
”பிரசவத்துக்காகப் போயிருக்கா…உமா..! ரெண்டாவது…!!”
”ஹேய்..” சந்தோசமாகக் கூவினாள். ”செகண்ட் ரிலீஸா.? சொவ்லவே இல்ல. .. உம். .?”

சிரித்தான் ”அதான் சொல்லிட்டேனே…”
”தடியா… எத்தனை சந்தோசமான விசயம்..?”
”கல்யாணமானா போதும் உமா. .. அது பாட்டுக்கு ரிலீஸாகிட்டே இருக்கும்..”
” ஓ…ஓ…!!” எனச் சிரித்தாள்.
அவனும் சிரித்தான்.

உமா ”அப்ப நீ… தனியாவா இருக்க. .?”
”அப்ப இல்ல… இப்ப. ..!”
”ஓ…! சரி… இப்ப. ..?”
”உம்…!”