நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி! 70

” காத்தாட போய்.. நிக்கலாமே.? ஏன் அதுல ஏதாவது பிரச்சினையா..?”
”அப்படியெல்லாம் எதுவும் இல்ல.. வா. ” என மொட்டை மாடிக்கு அழைத்துப் போனான்.

மழையின் ஈரக்காற்று சிலீரென்று வீசியது. மேற்கில் வேறெங்கோ மழை பெய்துகொண்டிருக்க.. வேண்டும்.. வானில் அடர்த்தியான கருமை நிற மேகங்கள்… மறுபடியும் மழை வரலாம் என உணரச்செய்தது..!

” நீ… உங்கம்மா கிட்ட என்ன சொல்லிட்டு வந்தே உமா. .?” கார்த்திக் கேட்டான்.
” வெளில போறேனு சொல்லிட்டு வந்தேன்..”
”வேற எதுமே கேக்கலையா..?”

மெலிதாகச் சிரித்தாள் ”என்னையெல்லாம் ஏன்னு கேள்வி கேக்க.. ஆளில்லை கார்த்தி.. அதான் உண்மை. .”
”ஓ.. அப்ப உன் வீட்ல நீதான் மகாராணி..?”

அவனுக்கு முதுகு காட்டியவாறு. . அருகில் இருந்த வீடுகளை… வேடிக்கை பார்த்தாள் உமா.
”மகாராணி. .. பட்டத்து அரசி.. ராஜகுமாரி… எல்லாமே நான்தான்..”
”அதிர்ஷ்டக்காரி..” என அவள் பக்கத்தில் வந்து நின்றான்.
” யாரு நானா…?”
” ம்..ம்…”
கேலியாக நகைத்தாள் ”அப்படித்தான் நம்பிக்கறேன்..”
”உன்னக் கல்யாணம் பண்ணிக்கறவன்… குடுத்து வெச்சவன்…”
” ம்கூம். ..? எப்படி சொல்ற..?”
”அசத்தற நீ… கொள்ளை அழகு.”
”ஏய். …!”
” நெஜமா…!”
”சும்மா ஒளறாத..”
”ஒளறல… அரைலூசு..”
”பின்ன…” என மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு சொன்னாள் ”வானத்த.. அன்னாந்து பாக்கறதுனாலதான்… நிலா அழகா தெரியுது கார்த்தி. .! அதுவே நம்ம காலுக்கு கீழ… வேண்டாம்… கைக்கெட்ற தூரத்துல இருந்தாக்கூட.. அதுக்கு இத்தனை கவர்ச்சி.. இருக்காது..”
”எதுக்காக இந்த உதாரணம். .?” எனப் புரியாமல் கேட்டான் கார்த்திக்.
”நாலு நாள். .. என்னை நீ ருசி பாத்துட்டேனு வெய்யேன்.. உனக்கு என்மேல இருக்கற.. கவர்ச்சி போயிறும். . அப்ப நீ.. என்னை இப்படி. . அழகினு புகழ மாட்ட..”
” சே.. என்ன நீ..? இல்ல உமா நீ ஒரு புடவை கட்ன நிலா..!” என்றான்.

சிறிது மௌனித்துவிட்டுச் சொன்னாள்.
” ஒரு கசப்பான. .. உண்மையைச் சொல்லட்டுமா..கார்த்தி..?”
” உண்மை எப்பவுமே கசப்பானதுதான்.. சொல்லு..”
”உண்மையைச் சொன்னா.. நீ எப்படி எடுத்துப்பேனு தெரியல ஆனாலும் உன்கிட்ட நான் மறைக்க விரும்பல..”
”என்னது..?”
”நான் ஒரு. . பிராஸ் ஆகிட்டேன்..” என்றாள். வெகு இயல்பாக..!
”என்ன. ..?”
” உம்… ”
”உமா. .” என்றான் அதிர்ந்து போய்..!
”தமிழ்ல சொன்னா.. நான் ஒரு தேவடியா.. ஆகிட்டேன்..!!”
”ஓ…நோ…உமா. .! ஷிட்… என்ன சொல்ற.. நீ..?” சட்டென அவளைப் பிடித்தான்.

”இதான் கார்த்தி.. உண்மை. இதை நான். . ஓட்டல்ல.. காபி குடிக்கறப்பவே.. உன்கிட்ட சொல்ல நெனைச்சேன். ஆனா அது.. சரியான எடமா தோணல..! இந்த நெலமைக்கு நான் வேனும்னே.. வரலை கார்த்தி.. என் குடும்பச் சூழ்நிலை அப்படி மாத்திருச்சு..! என் ஒருத்தி வருமானத்துலதான் நாங்க… மூணு பேர் வாழ்ந்தாகனும்… அதும் அம்மா ஆஸ்துமா பேசண்ட்..! நான் என்ன பண்ணுவேன். .? எனக்கு எப்படி கல்யாணம் நடக்கும். .?” எனக் குரலடைக்க… அவனைக் கேட்டாள்.

”உமா. .. உமா. .” என்று கத்தினான் கார்த்திக் ”ஷிட்..ஷிட்..!” அவளை உதறிவிட்டு. . அங்கும்.. இங்கும் நடந்தான்.
மொட்டை மாடிச் சுவற்றில்… கையை மடக்கிக் குத்தினான்.
”நான் கொஞ்சம் கூட நெனைக்கல உமா… நீ இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுவேனு..! மை…காட்…! ஏன் உமா. . நீ.. போயி…இப்படி..? ச்ச..!”

”விதி..கார்த்தி..!”
” நீ… நீ… நல்ல பொண்ணாத்தான இருந்த..?”
”அதுலென்ன சந்தேகம் கார்த்தி..? இப்பக்கூட நான்… நல்ல பொண்ணுதான்..அதனாலதான். . உன்கிட்ட. . உண்மையை மறைக்காம சொல்லிட்டிருக்கேன்..”
”ஓ.. நோ..! எப்பருந்து இப்படி..?”
” பதினேழு.. பதினெட்டு வயசுதான்.. என்னோட ஜாலியான வயசு கார்த்தி..! அதுவரைக்கும்.. அம்மாவும் வேலைக்குப் போய்ட்டிருந்தா.. அவளுக்கும் நோய்.. நொடினு எதுவுமில்லை..! நானும் அப்ப எல்லா பொண்ணுக மாதிரி.. ஜாலியாதான் இருந்தேன்..! விதம்.. விதமான கனவுகளோடதான் இருந்தேன். ஆனா என்னோட.. இருபதாவது வயசுல… என் கனவுகள் எல்லாம் உடைய ஆரம்பிச்சிருச்சு..கார்த்தி..! இன்னிக்கு கனவுன்னு..ஒன்னு இருக்கறதையே மறந்துட்டேன்..”

அவன் பேசவே இல்லை. நிம்மதியிழந்தவன் போலத் தவித்தான்.

நீண்ட நேரத்துக்குப் பின்னால்.. துக்கத்தை விழுங்கிக்கொண்டு. . பெருமூச்சு விட்டாள் உமா.
”கார்த்தி..”

அவளைப் பார்த்தான். பேசவில்லை.

” நான் போகட்டுமா..?”
”ஏ… ஏன்… ஏன்..?”
”உன் மனச.. கஷ்டப் படுத்திட்டேன்..”

அவன் பதில் சொல்லவில்லை.

வானத்தில் கருக்கொண்ட மேகம்.. இப்போது அவள் மனதில் புகுந்து கொண்டது போலக் கணத்தது.
மவுனத்தை நீட்டிக்க விரும்பாமல்..
”ஸாரி… கார்த்தி..” என அவன் கையைப் பிடித்தாள்.