நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி! 72

”நிச்சயமா.. இதை நான். . எதிர் பாக்கல.. உமா..” பெருமூச்சு விட்டான்.
” நா…போகட்டுமா..?”
”நோ…!”
”…….”
”எனக்கு ஷாக்காத்தான் இருக்கு..! ஆனாலும் நீ போகக்கூடாது. .”
” இப்ப நான்.. உன் பழைய.. அரை லூசு இல்ல. .”
”அதான் சொல்லிட்டியே..”
”என்மேல.. உனக்கு. .ஒரு. . அசூசை.. வல்ல…?”

அவன் பேசவில்லை.

”நான் ஒரு அற்பமா… கேவலமான ஜந்துவா தெரியலை உனக்கு. .?”

அப்போதும் அவன் பேசவில்லை.

”பலபேர்… என்னை பதம் பாத்துட்டாங்க… கார்த்தி..”

”ஷட் அப்..” என்றான் ” நீயே. . இப்படியெல்லாம் பேசக்கூடாது..வாயை மூடு..”

”இல்ல கார்த்தி… எனக்கு கஷ்டமா இருக்கு..! இப்ப என்னை நானே…கேவலமா உணர்றேன்..! என் ஒடம்பு பல பேரால.. பதம் பாக்கப்பட்டாச்சு.. அதைத் தொட்டு. . நீயும் பாவத்தை சம்பாரிச்சுக்க வேண்டாம். .”

”கீழ்… போலாம்.. வா..!” என்று விட்டு… உடனே கீழே இறங்கிப் போனான்.!!

மவுனமாக நின்றாள் உமா.
இதெல்லாம் அவனிடம் ஏன் சொன்னாள் என்று அவளுக்கும் புரியவில்லை. ஆனாலும் மனம் திறந்து. ..சொல்லிவிட்டாள்.
இப்படித்துணிந்து… யாரிடமும் அவள்.. இதுவரை சுய விமர்சனம் செய்ததிலலை.!!

நீண்ட… இடைவெளிவிட்டுக் கீழே போனாள் உமா.
பெட்ரூமில் இருந்தான் கார்த்திக்.!
டீ பாயில்.. பிராண்டி.. கூல்ட்ரிங்க்ஸ்.. சில்லி… கண்ணாடி டம்ளர்… சிகரெட் பாக்கெட்டெல்லாம் இருந்தது. அவன் விரலிடுக்கில் ஒரு சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.

அவளைப் பார்த்துவிட்டு. .. டம்ளரில் கலந்து வைத்திருந்ததை எடுத்துக் குடித்தான்.
டம்ளரை வைத்துவிட்டு. .. சிகரெட்டை ஆழமாக இழுத்தான்.

”ஸாரி. . உமா. .” என்றான் ”உக்காரு. .”
”பரவால்ல. ..கார்த்தி..”
”சத்தியமா சொல்றேன் உமா. . உன்ன அந்த மாதிரி ஒரு பொண்ணா.. என்னால நெனச்சுக்கூட பாக்க முடியல..! என்ன கொடுமை.. இது… சிட்..!”
அவன் மனசு மிகவும் துடித்தது அவளை நினைத்து. .!

மறுபடி… பிராண்டியை.. டம்ளரில் ஊற்றிக் கலந்தான்.

அவனையே வெறித்தாள் உமா.

”நான் ஒன்னு சொல்லட்டுமா.. உமா. .?” என அவளைப் பார்த்தான்.

எதுவும் பேசாமல்… அவனையே பார்த்தாள்.

”உக்காரு. ..” என்றான்.
” பரவால்ல…”
”நோ… கூடாது. .உக்காரு. ..கமான்..” என எழுந்து.. அவள் கையைப் பிடித்து. .. உட்கார வைத்தான்.
அவள் அருகில் உட்கார்ந்து. .. அவளது தோளில் கை போட்டு..
”இந்த நிமிசம்கூட… உன்னை நான். . லவ் பண்றேன்டி.. அரைலூசு..!” என்றான்.

அவளை ஒரு அசிங்கமான பிறவியாக…. அவளே உணர்ந்தாள்..!!
ஆனாலும் மௌனமாகவே இருந்தாள். அவள் மனசு… மரத்துவிட்டது போலிருந்தது.

திடுமெனக் கேட்டான் கார்த்திக்.
” நீ குடிப்பியா..உமா. .?”
”இல்ல. ..” என்றாள்.
”பொய் சொல்லாத…”
” உனக்காகக் குடிக்கறேன்..”
” குட்…! கமான்… சியர் அப்..!!” எனக் கலக்கி வைத்திருந்ததை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

தயக்கத்துடன்தான் வாங்கினாள்.

”இரு..” என்றுவிட்டு… கூல்ட்ரிங்கஸை எடுத்து… அவள் கையிலிருந்த டம்ளரில் ஊற்றினான். ” இப்ப குடி..!”

”அதுக்கு முன்னால… ஒன்னு சொல்லிரு கார்த்தி..” என்றாள்.
”என்ன. ..?”
”இந்த ராத்திரி… என் துணை வேனுமா..உனக்கு. .?”
” என்ன கேள்வி.. இது..?” என்றான் ” என் இரவை… அலங்கரிக்க வந்த. .. இன்ப தேவதை…நீ….!!”

உமாவின் உதடுகள் துடித்தன..நெஞ்சகம் விம்மியெழுந்தது…!!!!

கார்த்திக் கொடுத்த… பிராண்டி டம்ளரை.. உதட்டில் வைத்தாள் உமா. மெதுவாக உறிஞ்சினாள்.
கசப்பாய்… தொண்டையில் இறங்கியது. முகத்தைக் கொஞ்சம். .. அஷ்டகோணலாக்கிக் குடித்தாள். அதில் கொஞ்சம் கீழே சிந்தியது. உடனே சிக்கன் சில்லியை எடுத்துக்கடித்தாள்..!!

”என்னை மன்னிச்சிரு கார்த்தி..” என்றாள்.