மதன மோக ரூப சுந்தரி – இறுதி 22

“ம்ஹூம்..!! அதுலாம் சாப்பிடுற நெலமைலயா நான் இருந்தேன்..??”

“ஹ்ம்ம்ம்ம்.. ஓகே ஓகே..!! இனிமே எதை மறந்தாலும் மெடிசின்ஸ் மறக்கக்கூடாது.. சரியா..??”

“சரித்தான்..!!”

சிபியே அங்கிருந்து நகர்ந்து சென்று.. அலமாரியில் இருந்த பேக் திறந்து.. மாத்திரைப் பட்டைகளை கிழித்து.. ஆதிராவுக்கான அதிகாலை மருந்தினை எடுத்து வந்தான்.. கூடவே தண்ணீர் ஜாடியும்..!!

“ம்ம்.. சாப்பிடு..!!”

என்று உள்ளங்கையை விரித்தான்.. சின்ன சின்னதாய் ஏழெட்டு மாத்திரைகள்..!!

“எனக்கு ரொம்பநாளா ஒரு சந்தேகம் அத்தான்..!!”

“என்ன..??”

“முன்னாடியே உங்ககிட்ட கேக்கனும்னு நெனைப்பேன்.. ஆனா கேக்கல..!! இப்போ என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கிட்டே கேக்குறேன்..!!”

“எ..என்னன்னு சொல்லு..!!”

“கால்ல இருக்குற அந்த சின்ன வெட்டுக்காயத்துக்கா இத்தனை மாத்திரை..??” ஆதிரா கேட்டுவிட்டு புன்னகைக்க, சிபி பட்டென்று அமைதியானான். அவனது அமைதியை பார்த்து அவளே மீண்டும்,

“காயத்துக்கு எத்தனை மாத்திரை அத்தான்..??” என்று கேட்க,

“ஒ..ஒன்னு..!!” பதில் சொன்னான் சிபி.

“மிச்ச மாத்திரைலாம் அந்த மென்ட்டல் இன்ஸ்டிட்யூஷன்ல ப்ரிஸ்க்ரைப் பண்ணினதா..??”

“ம்ம்..!!” அமைதியாக சொன்ன சிபி, இப்போது மனைவியை ஏறிட்டு பார்த்து,

“உ..உனக்கு ஒன்னும் இல்லடா.. இது சும்மா.. டாக்டர்ஸ் சொல்றதுக்காக.. இதுவும் இன்னும் கொஞ்சநாளைக்குத்தான்..!!” என்று தடுமாறினான்.

“ஹஹா.. பரவாலத்தான்.. எத்தனை வருஷம்னாலும் பரவால.. நீங்க என்கூட இருக்கிங்கல்ள்ல.. எனக்கு அது போதும்..!!”

அமர்த்தலாக சொல்லிவிட்டு மாத்திரைகளை விழுங்க ஆரம்பித்தாள் ஆதிரா.. அவளை அன்பும், ஆதரவுமாக அணைத்துக் கொண்டான் சிபி..!!

89

வேறு உடைக்கு மாறிய சிபியும் ஆதிராவும்.. ஆளுக்கொரு பேகை தூக்கிக்கொண்டு படியிறங்கி கீழே வந்தார்கள்..!! ஹாலில் அவர்களுக்காக நிறைய பேர் காத்திருந்தனர்.. திரவியம், வனக்கொடி, கதிர், தென்றல் ஒருபுறம்.. முகிலன், நிலவன், அங்கையற்கண்ணி, யாழினி மறுபுறம்..!! எல்லோரிடமும் நின்று சிறிதுநேரம் பேசிவிட்டு.. மேற்கொள்ளப்போகிற பயணத்துக்கு ஆசிவாங்கிவிட்டு.. வீட்டைவிட்டு வெளியே வந்தனர் இருவரும்..!!

டிக்கியில் பேகை திணிப்பதற்கென சிபி காருக்கு பின்புறம் செல்ல.. ஆதிராதான் முதலில் சென்று கார்க்கதவை திறந்தாள்.. கதவை திறந்ததுமே நாசிக்கருகில் அந்த வாசனை மாற்றத்தை உணர்ந்தாள்.. காரின் உட்புறத்தை குப்பென நிறைந்திருந்தது மகிழம்பூ வாசனை..!! உடனே ஆதிராவின் கண்களில் ஒரு பரவசம் பிறக்க..

“தாமிரா..” என்று மெலிதாக முனுமுனுத்தாள்.

கார் முன்சீட்டின் மையமாக வைக்கப்பட்டிருந்த அந்த மோதிரம் இப்போது அவளது பார்வையில் பட்டது.. மெலிதான ஒரு புன்னகையுடனும், சிறு தயக்கத்துடனும் அந்த மோதிரத்தை கையில் எடுத்தாள்..!!

“என்னாச்சு ஆதிரா..??” அந்தப்பக்கம் காருக்குள் வந்தமர்ந்த சிபி ஆதிராவிடம் கேட்டான்.

“தா..தாமிரா.. தாமிரா வந்துட்டு போயிருக்கா அத்தான்..!!”

“என்னது..??”

“அ..அவ.. அவதான் அன்னைக்கு ஆத்துக்குள்ள.. இந்த மோதிரத்தை எங்கிட்ட இருந்து எடுத்துட்டு போனது.. இப்போ அவளே வந்து வச்சுட்டு போயிருக்கா..!!”

சொல்லிக்கொண்டே ஆதிரா அந்த மோதிரத்தை கணவனிடம் நீட்ட.. அதைப்பார்த்த சிபிக்கு இப்போது பட்டென முகம் மாறியது.. என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்ச்சி அழுத்தத்துக்கு உட்பட்டவனாய் அந்த மோதிரத்தையே இமைக்காமல் பார்த்தான்..!!

“என்னாச்சு அத்தான்..??”

“ஒ..ஒன்னுல்ல ஆதிரா..!! இ..இது.. இந்த மோதிரம்.. தாமிராவை நான் ப்ரொபோஸ் பண்ணினப்போ அவகிட்ட கொடுத்தது.. அப்போ அதை வாங்கிக்காம விட்டெரிஞ்சுட்டு போய்ட்டா..!!”

“ஓ..!!”

“நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் இதை நீ போட்டுக்கணும்னு நான் ஆசைப்பட்டேன்..!!”

சொல்லிவிட்டு ஆதிராவின் முகத்தை ஏக்கமாக பார்த்தான் சிபி.. அவனுடைய மனதை புரிந்துகொண்ட ஆதிரா, முகத்தில் ஒரு புன்னகையுடன் அவனுக்கு முன்பாக தனது விரல்களை நீட்டினாள்..!! உடனடியாக உற்சாகமுற்ற சிபியும் ஆதிராவின் விரலில் அந்த மோதிரத்தை அணிவித்தான்..!!

“லவ் யூ ஆதிரா..!!” என்றான் உணர்ச்சிப் பெருக்கோடு.

எல்லோரும் வாசலில் நின்று கையசைக்க, கார் மெல்ல கிளம்பியது.. வீட்டை விட்டு வெளியேறி பிரதான சாலையை அடைந்ததும் வேகமெடுத்து விரைந்தது.. அடுத்த பத்து நிமிடங்களில் எல்லாம் அகழியைத்தாண்டி பறந்து கொண்டிருந்தது..!! சலசலத்து ஓடுகிற குழலாற்றையே பார்த்துக்கொண்டு வந்த ஆதிரா, ஒருவித அயர்ச்சியுடன் காணப்பட்டாள்.. இரண்டு மூன்று நாட்களாக தூக்கமின்மை.. இப்போது சற்று நேரத்துக்கு முன்பாக உட்கொண்ட மாத்திரைகள்.. நீண்ட நாட்களுக்கு பிறகு நெஞ்சில் பரவியிருந்த நிம்மதி.. எல்லாமுமாக சேர்ந்து அவளது இமைகளை மெல்ல செருகச்செய்தன..!!

“என்னாச்சு ஆதிரா.. ஒரு மாதிரி இருக்குற..??”

“தூக்கம் வர்ற மாதிரி இருக்கு அத்தான்..!!”

“ஹஹா.. அவ்ளோதானா.. தூக்கம் வந்தா தூங்க வேண்டியதான..?? தூங்கு ஆதிரா.. எந்தக்கவலையும் இல்லாம கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கு..!!”

“ம்ம்.. சரித்தான்..!!”

புன்னகையுடன் சொன்ன ஆதிரா, சிபியின் பக்கமாக நகர்ந்தாள்.. அவன்மீது சாய்ந்து தோள்மீது முகத்தை பதித்துக்கொண்டாள்.. கணவன் காரோட்டுவதை பார்த்துக்கொண்டே, கொஞ்சம் கொஞ்சமாய் கண்ணுறங்கிப் போனாள்.. நிம்மதியாக..!!

(இங்கதான் கதையை முடிக்கலாம்னு நெனச்சேன்.. ஆனா..)

90

ஆதிராவுக்கு விழிப்பு வந்தபோது.. சிலவினாடிகள் அவளுக்கு எதுவுமே புரியவில்லை.. எங்கிருக்கிறோம் என்றுகூட அவளது புத்திக்கு விளங்கவில்லை..!! இமைகளை மெல்ல பிரித்து விழிகளை கசக்கி பார்த்தாள்.. அவள் படுத்திருந்த இடத்தை சுற்றிலும் வெள்ளையாய் பனிமண்டலம்.. அருகில் இருக்கிற பொருட்கள் கூட கண்ணுக்கு புலப்படவில்லை..!!

“விஷ்ஷ்ஷ்ஷ்க்க்க்..!!!”

திடீரென அவளது காதுக்குள் அந்த சப்தம்.. அதைத்தொடர்ந்து அவளது முகத்தில் மிருதுவாய் எதுவோ அறைந்தது.. ஆதிரா திகைத்துப்போய் பார்க்க, அடர்பனிக்குள் அந்த சிவப்புத்துணி படபடத்து மறைந்தது..!!

“ஹ்ஹக்க்க்..!!”

விருட்டென எழுந்து அமர்ந்தாள் ஆதிரா.. மிரட்சியாக பார்த்துக்கொண்டே பனியை விலக்கி மெல்ல நடந்தாள்..!! நெருக்கமாய் அடர்த்தியாய் வளர்ந்திருந்த மரங்களுக்குள் நடப்பது கொஞ்சம் கொஞ்சமாய் அவளது புத்திக்கு புலப்பட்டது..!!

“அத்தான்.. அத்தான்..!!” சிபியை ஒருமுறை அழைத்து பார்த்தாள்.

சூழ்ந்திருந்த பனிமூட்டம் இப்போது மெல்ல விலக.. அவள் நின்றிருந்த இடத்தில் இருந்து நீளமாக ஓடிய அந்த குறுகலான பாதை தெளிவாக தெரிந்தது.. பாதையின் இருபுறமும் பழுப்புநிற மரங்கள், பச்சைநிற செடிகொடிகள்..!! பாதை பார்வைக்கு புலப்பட்டதுமே.. ஆதிரா மெல்ல மெல்ல வேகமெடுத்தாள்.. அவளது நடை கொஞ்சம் கொஞ்சமாய் ஓட்டமாக மாறியது..!!

“அத்தான்.. அத்தான்..!!”

அப்படியும் இப்படியுமாய் பார்வையை அலைபாயவிட்டு அலறிக்கொண்டே ஓடினாள்..!! கொஞ்ச தூரம் ஓடியதும் அப்படியே ப்ரேக் போட்டது மாதிரி நின்றாள்.. கண்முன்னே அவள் கண்ட காட்சியை நம்பமுடியாமல் அப்படியே திகைத்துப்போய் பார்த்தாள்..!!

அவளுக்கு முன்பாக நீளமாகவும், அகலமாகவும் விரிந்து கிடந்தது அந்த நீலக்கடல்.. கடற்கரை மணலை அதிக சப்தமில்லாமல் வந்து, கொஞ்சி கொஞ்சி சென்றுகொண்டிருந்தன கடலலைகள்.. கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தவகை உயிரினமும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை..!! ஆளில்லாத் தீவொன்றில் தனித்து விடப்பட்டிருந்தாள் ஆதிரா..!!

என்ன நடக்கிறது என்று எதுவும் புரியாமல்.. நுரைநுரையாய் பொங்கி வந்த அலைகளையே ஆதிரா மிரட்சியாக பார்த்துக்கொண்டிருக்க.. அவளது காதோரமாய் அந்தக்குரல் ஒலித்தது.. சற்றே கிசுகிசுப்பாக.. அவளது தங்கை தாமிராவின் குரல்..!!

“GGGGGame or SSSSShame..??”

(கதை மட்டும் முடிஞ்சது.. கண்ணாமூச்சி ஆட்டம் தொடரும்..!!)

கதையை முடிக்கிறப்போ எப்போவும் எனக்கு கெடைக்கிற அதே ஃபீலிங்தான்.. ரொம்பவே நிம்மதியா ஃபீல் பண்றேன்..!! இந்த லாஸ்ட் அப்டேட்ல எனக்கு பிடிச்சது.. ஆதிரா-தாமிரா மோதலும்.. அந்த ட்ரஷர் ஹண்ட்-உம் தான்..!! நான் நெனச்ச மாதிரி எனக்கு ரொம்ப திருப்தியாத்தான் இந்த க்ளைமாக்ஸ் வந்திருக்கு..!! இனி நீங்கதான் உங்களோட கருத்தை கமெண்ட்ல சொல்லணும்..!! இந்த கடைசி அப்டேட் பத்தியும், ஒட்டுமொத்த கதை பத்தியும்.. உங்களால முடிஞ்ச அளவுக்கு உங்க கருத்தை கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்.. ப்ளீஸ்.. உங்க கமெண்ட்ஸ் தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா வெய்ட் பண்றேன்..!!

தேங்க்ஸ்..!!