உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Climax 139

அவனது அறை முழுக்க அலங்கரிக்கப்பட்டிருந்தது!

அறையின் மத்தியில் ஒரு சின்ன ஸ்டூல் இருந்தது. அதில் ஒரு கேக், எரியும் ஒற்றை மெழுகுவர்த்தியுடன் இருந்தது! அதில், HAPPY BIRTHDAY MAMA என்றிருந்தது!

அவனை முற்றிலும் பேச்சிழக்க வைத்த காட்சி, அறையின் ஓரத்திலிருந்த அவனது கட்டில் கூட கொஞ்சம் அலங்கரிக்கப்பட்டிருந்தது! அதன் மத்தியில் மலர்களோடு மலராக மைதிலியும் அமர்ந்திருந்தாள். தலை ஓரளவு குனிந்திருந்தாலும், என்றுமில்லாத அழகு அவள் முகத்தில் இருந்தது!

பேச்சற்றுக் கிடந்தவனைப் பார்த்து அவள் சொன்னாள்!

ஹேப்பி பர்த்டே, என் செல்ல மாமா!

மைதிலி! பேச்சற்று அதே இடத்தில் இருந்தான் ராஜா!

மெல்ல எழுந்து, அவன் அருகே வந்தவள், அவன் கையைப் பிடித்து கேக் இருக்கும் இடத்திற்க்கு அழைத்துச் சென்றாள்.

ம்ம்ம்.. கேக் வெட்டுங்க!

வெட்டிய கேக்கை அவனுக்கு ஊட்டினாள். அவனும், அவளுக்கு ஊட்டினான்!

இந்தாங்க மாமா, உங்க பர்த்டேக்கு, என்னுடைய கிஃப்ட்! பிரிச்சுப் பாருங்க!

பிரித்தான். உள்ளே ஐ ஃபோனும், இன்னொரு செட் டிரஸ்ஸூம் இருந்தது!

அதிலும் ஹேப்பி பர்த்டே மாமா என்று இருந்தது!

என்ன மைதிலி இதெல்லாம்?

ம்ம்… நீங்கதான் சர்ப்ரைஸ் கொடுப்பீங்களா? எப்பிடி இருக்கு எங்க சர்ப்ரைஸ்?

நான் வர்றேன்னு உனக்கு முன்னமே தெரியுமா?

ம்க்கும், உங்களை எனக்குத் தெரியாதா?

எப்பிடியும் முக்கியமான நாளெல்லாம் ஃபாமிலி கூடத்தான் ஸ்பெண்ட் பண்ண விரும்புவீங்க! அதுவும் நான் வேற, அப்ப பர்த்டேக்கு, இங்க இருக்க மாட்டீங்களான்னு ரெண்டு மூணு தடவை கேட்டிருக்கேன். நீங்க எப்பிடியாவுது வந்துடுவீங்கன்னு நினைச்சேன்! அதான் இந்தப் ப்ளான்! எப்பிடி? நாங்கல்லாம் உங்களை மாதிரி சொதப்ப மாட்டோமில்ல! சிரித்துக் கொண்டே கேட்டாள் மைதிலி!

அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ராஜா! இவள், புது மைதிலியாகத் தெரிந்தாள்!

முன்பு போல் அவனிடம் மட்டும் எப்போதாவது வெளிப்படுத்தும் அவளது இயல்புகளை, உணர்வுகளை இப்போதெல்லாம் மிக உரிமையாக, எப்போதும் வெளிப்படுத்துகிறாள்! பொங்கிய உணர்வுகளுடன் கேட்டான்.

ஏய் வாலு, இதெல்லாம் எப்ப ப்ளான் பண்ண? நீ எப்ப இங்க வந்த?

ம்ம்.. ப்ளான்லாம் எப்பியோ ரெடி மாமா. நான் ஊருக்கே போகலை. நீங்க ஈவ்னிங் ஃபோன் பண்ணப்ப ரெடியா இருந்தேன். நீங்க வந்துட்டேன்னு கன்ஃபர்ம் பண்ணவுடனே, இங்க வந்து, உள்ள லாக் போட்டு, எல்லாம் ரெடி பண்ணேன்!

அடிப்பாவி, இவ்ளோ நேரம் உள்ள இருந்துகிட்டே என்னை விரட்டிகிட்டு இருந்தியா? உன்னை, என்று அவள் கையைப் பிடித்து அருகில் இழுத்தான்!

அதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோவும் பண்ணியிருக்கேன். பர்த்டேக்கு நீங்களே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் கொடுத்திருக்கேன்! எனக்கு, ட்ரீட் எங்க மாமா?

ஆச்சரியமடைந்தான் ராஜா!

ஏய், என்ன வார்த்தைக்கு வார்த்தை மாமாங்கிற? நான் மாமான்னு கூப்பிடுன்னு சொன்னப்ப கூப்பிடலை. ப்ரேம் முன்னாடி மட்டும் அவனை வெறுப்பேத்த கூப்பிட்ட. அப்புறம் ப்ரியாவை வெறுப்பேத்த அண்ணானு கூப்பிட்ட. அதுக்கப்புறம் கூட மாமான்னு கூப்பிடாதவ, இன்னிக்கு வார்த்தைக்கு வார்த்தை கூப்பிடுற? என்ன விஷயம்?

3 Comments

  1. இந்த எழுதியவரின் அனுபவமாக இருக்கலாம் அனுபவிச்சி எழுதிய கதை போல இப்படி ஒரு அருமையான கதை தந்தற்க்கு நன்றிகள் வேறும் காமம் அல்லாமல் சமூக சிந்தனை இன்றைய இளம் பெண்கள் ஆண்கள் நாகரீகம் என்ற பெயரி ஐடி கம்பெனியில் நடப்பதை
    எழுதி இருக்கிறார் கதாசிரியர்

  2. Excellent!

Comments are closed.