உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Climax 139

மீண்டும் என்னை வெற்றிக் கொண்ட பெருமையில் அவள் சிரித்தாள். எப்படி என் சாமர்த்தியம் என்று அவளது புன்னகை சொல்லியது.

அதைப் புரிந்தவன் மெல்ல அவள் முன் நெற்றியில், விரல் வைத்திருந்த இடத்தில், ஒரு முத்தத்தை வைத்தேன்.

பின் மீண்டும் அவளைப்பார்த்து சொன்னேன்.

கில்லாடிடி நீ! என் மேல எவ்ளோ ஆசையிருந்தா, ரெண்டு கையையும் வெவ்வேற இடத்துல வெச்சிருப்ப? எனக்கு ஒரு முத்தம் பத்தாது, ரெண்டாக் கொடுன்னு சொல்லாமச் சொல்றியா? என் பொண்டாட்டி ஆசையை நிறைவேத்திடலாமா? என்று அவளது முலைகளை நோக்கி நகர்ந்த என் முகத்தை, அவள் தடுத்தாள்.

மாமா, இது கள்ளாட்டம்!

ஹா ஹா! களவணிப்பையன், கள்ளாட்டம் ஆடாம, வேற என்ன ஆட்டம் ஆடுவான்? ம்ம்??

சரி நானே விட்டுக் கொடுக்குறேன். நான் திருப்பி வேணா கண்ணை மூடிக்கிறேன். ஓகே? மறுபடி சொல்றேன், நீ ரெண்டு இடத்துல வெச்சிருந்தீன்னா, நான் ரெண்டு முத்தம் தருவேன்! கண்ணை மூடட்டா!

அதற்கு மேல் மைதிலியால் தாங்க முடியவில்லை! என் முகத்தை இழுத்து அணைத்துக் கொண்டாள். கைகளால் மறைக்க முடியாததை, என்னைத் தன் மேல் போர்த்தி அதன் மூலம் மறைத்தாள்.

போடா, நீயும் உன் ஆட்டமும்!

முன்பெல்லாம், அவளது வெட்கங்களை மறைக்க, எனது மார்பில் புதைந்து கொண்டவள், இப்பொழுது, அவள் வெட்கம் துறக்க, என்னை, அவள் மார்பினுள் புதைத்துக் கொண்டாள்!

எவ்வளவு நேரம் என்னை ஏமாற்ற முடியும்? முழு அன்பினைத் தராத ப்ரியாவிற்கே இன்பத்தை அள்ளி அள்ளி கொடுத்தவன், தன்னையே உயிராகக் கருதும் மைதிலியை சும்மா விட்டுவிடுவேனா என்ன?

புலி பதுங்குவது பாய்வதற்கு என்பது போல் அமைதியாக அவளது இஷ்டப்படி அவளது மார்புக்குள் புதைந்தவன், புத்திசாலித்தனமாகச் செய்வதாக எண்ணிக் கொண்டு அவள் திரும்பத் திரும்ப என்னிடம் மாட்டிக் கொள்வதை எண்ணி சிரித்தவாறே, அப்படியே எனது சேட்டையை ஆரம்பித்தேன்.

மெல்ல முத்தங்களை அதே இடத்தில் அள்ளி வழங்க ஆரம்பித்தேன்.

அவளோ திடுக்கிட்டுப் போனாள். எனது சூடான மூச்சுக்காற்றே, அவளை உஷ்ணமூட்டுகையில், அள்ளி வழங்கும் முத்தங்கள் ஏற்படுத்தும் மாற்றங்களை சொல்லவா வேண்டும்?

அவள் குழப்பத்தில் பிடி தளர்ந்த சமயத்தில், முத்தங்களை கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொண்டு வந்தவன், இறுதியில் அவளது உதடுகளை வந்தடைந்தேன்.
அவள் உதடினை அடைந்ததும், சின்ன இடைவெளி விட்டவன், அவள் கண்களையே பார்த்தேன். தவித்த அவள் கண்களையே பார்த்தவன், பின் மெல்ல மெல்ல அவள் உதடுகளை சுவைக்க ஆரம்பித்தேன், தொடர்ந்து. ஒரு கட்டத்தில் அவளால் தாங்க முடியவில்லை.

என் செய்கைகளின் சுகம் தாங்காமல், கைகள் தொய்ந்து போய், தன் உடலையே என் ஆதிக்கத்தில் எடுத்துக் கொள்ளட்டும் என்பது போல், கண்கள் மயங்கிய நிலையில் முகத்தை சற்றே திருப்பிக் கொண்டாள்!

மைதிலி!

ம்ம்ம்

ஏய்… என்னைப் பாரு!

3 Comments

  1. இந்த எழுதியவரின் அனுபவமாக இருக்கலாம் அனுபவிச்சி எழுதிய கதை போல இப்படி ஒரு அருமையான கதை தந்தற்க்கு நன்றிகள் வேறும் காமம் அல்லாமல் சமூக சிந்தனை இன்றைய இளம் பெண்கள் ஆண்கள் நாகரீகம் என்ற பெயரி ஐடி கம்பெனியில் நடப்பதை
    எழுதி இருக்கிறார் கதாசிரியர்

  2. Excellent!

Comments are closed.