உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Climax 139

எ…. என்னை எடுத்துக்கோ மாமா! அவள் தவித்து, என்னிடம், அவளை ஆள அனுமதி கொடுத்தாள்.

இதுவும் ஒரு வித சப்மிசிவ்தான். ஆனால் ப்ரியாவின் சப்மிசிவ் நேச்சருக்கும், இதற்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. முன்னதில் வெறி மட்டுமே இருந்தது. பின்னதில், காமம், வெறி எல்லாமே இருந்தாலும், எல்லாவற்றையும் தாண்டி எல்லையற்றக் காதல் இருந்தது.

அவளால் முழுதும் நிற்கக் கூட முடியவில்லை. மெல்ல படுக்கையில், அவள் கொட்டி வைத்திருந்த மலர்களுக்கு மேலே, அவளையும் படுக்க வைத்தவன், அவளருகே நானும் சாய்ந்தேன்.

என் நெருக்கத்தில், என் வார்த்தைகளில், இதுவரை எனது செயல்களில் எல்லாவற்றுக்கும் மேலாக, இதுவரைக்கும் அவள் வாழ்வில், அவளுக்காக எத்தனையோ செய்த என்னுடன்தான், இனி அவளது மொத்த வாழ்க்கையும் என்ற சந்தோஷத்தில் அவள் திளைத்திருந்தாள். கிளர்ச்சியுற்றிருந்தாள்.

கண் மூடி, என் மார்பில் சாய்ந்து கிடந்த அவள் முகத்தில், அப்படி ஒரு நிம்மதியும், மகிழ்ச்சியும்.

நானோ, திருமண வாழ்வில் இருந்த அனைத்துப் பிரசினைகளும் நீங்கி, எந்த மாதிரியான வாழ்க்கைத் துணை வேண்டும் என்று விரும்பினேனோ அப்படி ஒரு பெண், என்னை உயிராய் காதலிக்கும் பெருமிதத்தில், என் மேல் அவள் வைத்திருக்கும் நம்பிக்கையின் சந்தோஷத்தில், என்னிடம் அவள் தோற்க விரும்பும் ஆணவத்தில், எல்லாவற்றுக்கும் மேலாக, இப்பொழுது எனக்காக அவள் செய்யத் துணிந்திருக்கும் காரியத்தில், தன்னை, என்னிடம் ஆளக் கொடுத்துவிட்டு, அதனை கண்மூடி மெல்ல ரசித்துக் கிடக்கும் அவளது லயிப்பில் திளைத்துக் கிடந்தேன்.

அணைப்பில் இருந்த இருவரது மனமும், அந்த கணத்தை அப்படியே ரசித்துக் கிடந்தது!

அவளையேப் பார்த்துக் (ரசித்துக்) கொண்டிருந்தேன். லயித்து கண் மூடிக் கிடந்தவள், நான் எதுவும் செய்யாமல் இருந்ததை உணர்ந்தவள் மெல்லக் கண் திறந்தாள். அவளையேப் பார்ப்பதை உணர்ந்தவள், மெல்லிய வெட்கத்துடன் கேட்டாள்.

என்ன மாமா அப்பிடி பாக்குறீங்க?

இப்பொழுது என்னிடம் குறும்பு வந்திருந்தது. இல்லை, படுத்து கண்ணை மூடிட்டு இருந்தியா, அதான் தூங்கிட்டியோன்னு நினைச்சேன்?

அவள் முறைத்தாள். ம்ம் நினைப்பீங்க, நினைப்பீங்க. இந்த நேரத்துல யாராவது தூங்குவாங்களா?

நான் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டேன்.

அப்படியா? அப்ப, வேற என்ன பண்ணுவாங்க மைதிலி ம்ம்?

இப்பொழுது என் திட்டத்தை உணர்ந்து கொண்டாள்…

ஏய்.. களவாணிப் பயலே…

எனக்கு உண்மையாலுமே தெரியாது மைதிலி! உனக்கு என்ன தெரியும்னாச்சும் சொல்லலாம்ல!

போடா பொறுக்கி!

ஏய், என்னடி? ஆரம்பத்துல என்னமோ மாமான்னு ஆரம்பிச்ச. அப்புறம் பேர் சொன்ன. இப்ப என்னான்னா, போடா வாடாங்கிற, பொறுக்கிங்கிற, திருடாங்கிற, திட்டுற, என்ன நினைச்சிட்டிருக்க? என் வார்த்தையில் துளியும் கோபமில்லை. மாறாக எல்லையில்லா ஆசையிருந்தது.

படுக்கையில், பெண் திட்டினால், அவள் மிகவும் கொஞ்சுகிறாள் என்று அர்த்தம். அவள் மறைமுகமாக அவனுக்கு தன் ஆசையைத் தெரிவிக்கிறாள் என்று அர்த்தம். முழுக்க ஆணாதிக்கமாக இருக்கும் கிராமங்களில் கூட பெண் ஆசையில், போய்யா, வாயா என்று கொஞ்சுவர். அதை, இது வரை அனுபவிக்காதவர்கள்………. (நோ கமெண்ட்ஸ்!)

எனது கன்னங்களை அவள் கையில் ஏந்தினாள். என் மாமா, என் புருஷன்! நான் அவரைக் கொஞ்சுவேன், திட்டுவேன், அடிப்பேன், கடிப்பேன். உனக்கென்ன வந்தது? அதைக் கேட்க நீ யாரு? ம்ம்?

அவள் கேள்வியில், அவனை என்னமோ வாதத்தில் வென்றுவிட்ட பெருமிதம் இருந்தது. அவளுக்குத் தெரியாது, நான் விரித்த வலையில், அவள் வசமாகச் சிக்கியிருக்கிறாள் என்று! விஷமமாகச் சிரித்தான்.

சரி, நான் இனி கேட்கலை!

ம்ம்… அது! என்று வெற்றிக் களிப்பில் சிரித்தவள், போனா போகிறதென்று என் கன்னங்களை வருடினாள்.

ஃபீல் பண்ணாத மாமா! என்று என்னை மேலும் சீண்டினாள்.

அவளை மீண்டும் விஷமமாகப் பார்த்தவன், அவள் சீண்டல்களை ரசித்தவன், அவளது தற்காலிக வெற்றியை அனுமதித்தவன், திடீரென்று பொங்கினேன்.

3 Comments

  1. இந்த எழுதியவரின் அனுபவமாக இருக்கலாம் அனுபவிச்சி எழுதிய கதை போல இப்படி ஒரு அருமையான கதை தந்தற்க்கு நன்றிகள் வேறும் காமம் அல்லாமல் சமூக சிந்தனை இன்றைய இளம் பெண்கள் ஆண்கள் நாகரீகம் என்ற பெயரி ஐடி கம்பெனியில் நடப்பதை
    எழுதி இருக்கிறார் கதாசிரியர்

  2. Excellent!

Comments are closed.