வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் எட்டு 47

தாத்தாவும் யோசிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் என் அக்கா கோபமாக கேட்டாள்.

இப்ப உன் பிரச்சினை என்னடி? என்னத்தை எங்ககிட்ட இருந்து மறைக்கிற?

அக்காவின் கேள்வியில் எனக்கே வருத்தமாயிருந்தது. என் அக்கா, லாவண்யாவை சந்தேகப்படுகிறாளா? எனக்கே, அவள் கேள்வியில் ஒரு லாஜிக் இருப்பது தெரியும் போது, அக்கா எப்படி அவளைச் சந்தேகப்படுகின்றாள்?!

அடிபட்ட பார்வையுடன், சற்றே கலங்கிய விழிகளுடன், லாவண்யாவும் கேட்டாள்.

நான், உனக்கு கெட்டது நினைப்பேனாடி?

லூசு மாதிரி பேசாத! எனக்கு உன்னைப் பத்தி தெரியும். நீ கண்டிப்பா, எனக்கோ, இல்லை வேற யாருக்குமோ கூட கெட்டது நினைக்க மாட்ட! ஆனா, நீ ஏதையோ மனசுல வெச்சுகிட்டு குழம்புற. எங்களுக்குத் தெரியாத ஏதோ ஒரு விஷயம் உனக்கு தெரிஞ்சிருக்கு. அதுனாலத்தான் இப்படி பேசுற. அது என்னான்னு தெளிவாச் சொன்னாதான், தாத்தாவுக்கும், மதனுக்கும் முழுசா புரியும். ஏன்னா, அவிங்களுக்கு உன்னை ஒன்றரை வருஷமாத்தான் தெரியும். அதான் கேக்குறேன், நீ ஏதாச்சும் மறைக்கிறியா?

லாவண்யா, ஆமாம் என்று தலையாட்டினாள்.

எனக்கு மட்டுமல்ல தாத்தாவிற்கும் அவர்கள் நட்பு, ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை, புரிதல் எல்லாம் ஆச்சரியமாக இருந்தது. பெற்ற அம்மா அப்பாவைப் பற்றி அவள் குற்றம் சொல்லுகிறாள். ஆனால், இவளோ, நீ ஏதையோ மறைக்கிற என்று சரியாகக் கண்டு பிடிக்கிறாள்!

என்னன்னு சொல்லு.

வந்து, மதன் ரெண்டு நாள் முன்னாடி, நான் +2 முடிச்சு என்ன செய்யப் போறேன், IIM ல சேரப்போறேன்னு சொன்னது எல்லாத்தையும், உங்க அம்மா மறைஞ்சு நின்னு கேட்டுகிட்டு இருந்தாங்க.

அது எல்லாத்துக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும், தாத்தாதான் கேள்வி கேட்டார்.

சரிம்மா, யதேச்சையாக் கூட கேட்டிருக்கலாம். கேட்டதுக்கு அப்புறமும் கூட மதனோட ஆசையை நிறைவேத்த தானே இப்பியும் ஸ்டெப்ஸ் எடுக்குறாங்க?! இதுல என்ன தப்பு?

மேலோட்டமா பாத்தா சரிதான் தாத்தா. சரி நான் சில கேள்விகள் கேக்குறேன். அதுக்கு பதில் சொல்லுங்க.

அன்பு, பாசம்ங்கிறது என்ன அக்ரிமெண்ட்டா? திடீர்ன்னு, இன்ன தேதியில இருந்து இது செல்லும், இது செல்லாதுன்னு பேசுறதுக்கு? மதனுக்கும், பெத்த பொண்ணுக்கும் தப்பு பண்ணதை ஒத்துக்குறவிங்க, அந்தத் தப்பை மறக்கடிக்க என்ன செஞ்சிருக்காங்க? ஏன் இது நாள் வரைக்கும், இது சம்பந்தம்மா இவிங்ககிட்ட பேசவே இல்லை.

ஏம்மா, இவிங்க சின்னப் புள்ளைங்கம்மா! இவிங்ககிட்ட என்னத்தைப் பேசச் சொல்லுற?

தாத்தா, மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க. இவிங்களா சின்னவங்க? வயசுல வேணா சின்னவங்களா இருக்கலாம். மெச்சூரிட்டில, சின்னவிங்களா?

என் ஃபிரண்டு மேல, எனக்கு இவ்ளோ அன்பு வந்ததே, பெத்த அப்பா, அம்மா தப்பு பண்ணாங்கன்னு தெரிஞ்சவுடனே அவிங்ககிட்ட சண்டை போட்டு, திருத்த முயற்சி பண்ணி, கடைசில எதுக்கும் அவிங்க கேட்கலைன்னு தெரிஞ்ச பின்னாடி, அப்படிப்பட்ட உறவே வேணாம்னு தள்ளி நிக்குறா பாத்தீங்களா, அப்ப இருந்துதான்.

அவ ஒண்ணும் இந்த வீட்டுக்கு வந்த பின்னாடி, ஏன் என்கிட்ட சொல்லலைன்னு சண்டை போடலை.

இங்க வர்றதுக்கு முன்னாடியே, நீங்க பண்ணது தப்பு, அதுக்கு பரிகாரமா, அந்த காசு பணம் வேணாம்னு சொல்லிட்டு, மதனை மட்டும் நல்ல படியா வளர்த்துக் கொடுக்கனும், அதான் நியாயம்னு அவிங்க அம்மாகிட்டயே சண்டைக்குப் போயிருக்கா. அப்படிப்பட்டவ இவ! இவளா, சின்னப் பொண்ணு?

என் அக்கா, அவள் அப்பா, அம்மாவிடம் சண்டை போட்டது, இந்த வீட்டுக்கும் வருவதற்க்கு முன்பிருந்தே என்ற விஷயம் எனக்கு புதிதாக இருந்தது. அதே சமயம், அவள் மேலான நம்பிக்கை அதிகரிக்கவும் செய்தது. என் யோசனைகளை, அவளுடைய பேச்சு கலைத்தது.

மதன் இடத்துல வேற யாரு இருந்திருந்தாலும், இதே மாதிரி நடந்திருப்பாங்களான்னு எனக்கு தெரியலை. அவன் வயசுக்கு, அவன் ஃபேஸ் பண்ண அதிர்ச்சிகளும் சரி, அதை அவன் எதிர் கொண்ட விதமும் சரி, ஒண்ணும் சாதாரணமானது இல்ல. அப்படிப்பட்ட மதன், தான் அடுத்து MBA எங்க படிக்கனும், எப்படி படிக்கனும், ஏன் படிக்கனும்னு இப்பவே இவ்ளோ தெளிவா இருக்குற மதன் மட்டுன் சின்னப் பையனா என்ன?

சரி இதைப் பத்தி பேச வேணாம். ஆனா, அன்பு காட்டுற மாதிரி ஒரு இடத்துல கூட நடந்துக்கலியே?! முத வருஷம், மதன் அம்மாவுக்கு நீங்க திதி கொடுக்க நினைச்சப்ப கூட, கட்டின கணவரா, அவரு ஒண்ணும் செய்யாமத்தானே இருந்தாரு?! இன்னிக்கு இவ்ளோ முக்கியமான விஷயத்தை நீங்க பேசுறப்ப கூட, அவிங்க உங்க கூட இல்லியே?

எனக்கு என்னமோ, இவிங்க சின்னப்பசங்கன்னு நினைச்சு இவிங்ககிட்ட பேசாம இருக்கலை. அவிங்க காரணமாத்தான், உங்ககிட்ட பேசியிருப்பாங்கன்னு தோணுது!

அப்படி என்னம்மா காரணம்?

அவள் சொன்ன பதில் எல்லாரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அது,

Updated: April 2, 2023 — 7:38 am

2 Comments

  1. Raji un mail ku wait maa

  2. Nice going. Waiting for next part

Comments are closed.