வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் எட்டு 47

அதன் பின் அக்காவிடம் கேட்டேன்.

ஏன், முன்ன பாத்துட்டு இருந்த வேலை என்னாச்சு?

நடந்த பிரச்சினைல, அவிங்க சித்தி, ஆஃபிஸ்க்கே போய் ஏதோ அசிங்கமா பேசியிருக்காங்க. பெர்சனல் விஷயத்தை ஆஃபிஸுக்கு கொண்டு வராதீங்கன்னு, ஆஃபிஸ்ல வேலைக்கு வர வேணாம்னு சொல்லியிருக்காங்க. இப்பியும் அப்பப்ப, ஹாஸ்டல்ல லைட்டா பிரச்சினை பண்றாங்க போல!

அவனுக்கு ஆக்சிடெண்ட் ஆனதுக்கப்புறம், இவ கேசை வாபஸ் வாங்கிட்டா. அதான்… புடிச்சு ஜெயில்ல போட்டிருந்தா தெரிஞ்சிருக்கும் அவிங்களுக்கு.

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, அவளுக்கு உதவ முடியவில்லையே என்ற கோபமும், அதை அனுமதிக்காத அவள் மேல் கோபமும் வந்தது.

அதன் பின் அடுத்த 3 நாட்களில் அக்கா, நான் ஹரீஸ் கூட, அவர் வீட்டுக்கு போறேன் என்று என்னிடம் சொன்னாள்.
என்னால், லாவண்யா விஷயமாக என்ன முடிவெடுத்துருக்க, அவளும் வராளா என்று கேட்க முடியவில்லை.

அதனால் அமைதியாக, சரி, நான் சொன்ன மாதிரியே அங்க நடந்துக்க. அந்த வீட்டுக்கு நீதான் ராணி. நீ எவ்வளவுக்கெவ்ளோ கம்பீரமா நடந்துக்கறியோ, அவ்ளோ நல்லது. அந்தாள் எங்கியாவுது வெளிய கெளம்புறேன்னு சொன்னா விட்டுடு என்று மட்டும் சொன்னேன். அவளும் சென்று விட்டாள்.

அடுத்த வாரம் திங்கட் கிழமை காலை, அலுவலகத்தில் இருக்கும் பொழுது அக்கா கூப்பிட்டாள்!

சொல்லு, எப்டி இருக்க?

அதெல்லாம் இருக்கட்டும், உனக்குத் தெரிஞ்சு, ஏதாச்சும் நல்ல லேடீஸ் ஹாஸ்டல் பெங்களூர்ல தெரியுமா?

எனக்கு, அவள் லாவண்யாவிற்காகத்தான் கேட்கிறாள் என்று புரிந்தது. கடுப்பானேன்.

எனக்கு எப்டி தெரியும்? மாமாவுக்கு தெரியாதா?

இல்லை அவரை விட, உன் லாவண்யாவுக்கு எப்டி இருந்தா நல்லதுன்னு, உனக்குதானே தெரியும்?

நான் கடுப்பில், இதுக்குதான் காலைல கூப்பிட்டியா என்று திட்டினேன்.

பேசாத? அன்னிக்கு உன் முன்னாடியே ஹாரீஸ்கிட்ட பெங்களூர் வர்றேன்னு சொல்றா? நீ வாய் மூடிட்டு இருக்க? நாங்க, ஊருக்கு போறோம்னு சொல்றேன், அப்பியும் லாவண்யா விஷயம் என்ன பண்றதுன்னு என்கிட்ட கேட்டியா? இல்ல நீயா, ஏதாச்சும் ஸ்டெப் எடுத்தியா? அதான், பேசாம நானே அவளுக்கு ஹெல்ப் பண்ணி, நல்ல வேலை வாங்கிக் கொடுக்கலாம்னு நினைக்கிறேன்…

முன்னதான் மனசுல இருக்குறதை சொல்ல மாட்ட? இப்ப என்ன வந்தது? அவதான் உன் கூட பேசலை! ஆனா, என்கிட்ட, நீ ஏதாவது பேசுனியா? இன்னும் மாற மாட்டியா நீ?

அவளது கோபம் நியாயம் என்று எனக்கும் தெரிந்தது. இன்னும் சொல்லப் போனால், இப்படி இவள் திட்டுவது எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது!

என்ன பண்ணச் சொல்ற? என்னைப் பாக்குற பார்வையிலியே எரிக்கிறா? பக்கத்துல போயி பேசவே விட மாட்டேங்குறா? சரி கோபம் கொறையட்டும்னு வெயிட் பன்றேன். அதுக்காக சும்மாலாம் இல்லை. இனி அவங்க சித்தி, அவகிட்ட பிரச்சினை பண்ண மாட்டாங்க. அவ எந்த ஹாஸ்டல்ல இருக்கா, இப்ப சப்போர்ட்க்கு யாரு இருக்க, எங்க வேலைக்கு ட்ரை பண்றாங்கிற வரைக்கும் தெரியும். போதுமா?

ம்ம்… பராவாயில்லை. இதைனாச்சும் தெரிஞ்சு வெச்சிருக்கியே. அப்புறம், உங்கிட்ட இன்னொரு விஷயம் கேட்கனும்.

என்ன சொல்லு?

இல்ல, நீ எனக்கு, உங்க கம்பெனி க்ரூப்ல ஷேர் கொடுத்தீங்களே, அது உண்மைதானே, ஜோக் இல்லியே?

ஏய், விளையாடாமச் சொல்லு! அதுவா முக்கியம் இப்ப?!

ஆமா! என்னா, இன்னிக்கு உன்னைத் தேடி ஒருத்தர் வருவாங்க! அவிங்களுக்கு நீ, உன் செக்ரட்டரி போஸ்ட் தரணும்! அதுக்கு, அவிங்களே ஒத்துக்காட்டாலும், நீ அதைச் செய்யனும்! நீ எனக்கு ப்ராஃபிட்ல ஷேர் கொடுக்காட்டியும் பராவாயில்லை. இவிங்களுக்கு வேலை மட்டும் கொடு.

ஏய் என்ன விளையாடுற? யாரு அது? எனக்கு ஏற்கனவே செக்ரட்டரி இருக்குல்ல! இவிங்களுக்கு ஏன்? அதுவும் ஒத்துக்காதவங்களை எதுக்கு வற்புறுத்தனும்?

டேய், சொல்றதைச் செய்! இப்ப ஃபோனை வை!!

அப்ப்பொழுதுதான் லாவண்யா என் நிறுவனத்திற்கு வந்தாள்!

அவளை நான் எதிர்பார்த்திருக்கவில்லை! அன்று என்னிடம் சண்டை போட்டவள், வீட்டில் என்னைக் கண்டு கொள்ளாதவள், இன்று என்னைத் தேடி வந்திருக்கிறாள்!

இப்பொழுது என் அக்காவின் பேச்சு புரிந்தது! அவள் ஏதோ செய்திருக்கிறாள், பேசியிருக்கிறாள்.

எனக்கு இன்னொரு விஷயமும் தெரியும். அவளுக்கு, இப்பொழுது வேலை மிகவும் அவசியம்!

எனக்கு அவளைப் பார்க்கப் பார்க்க கோவமாகவும் இருந்தது, பாவமாகவும் இருந்தது! எப்படி இருக்க வேண்டியவ?!

மெல்ல பெரு மூச்சு விட்டவன், உட்காரு என்றேன்!

உட்கார்ந்தவள், என்னையே பார்த்தாள்! எனக்கு வேலை வேணும்! அவ, உன்கிட்ட பேசிட்டேன்னு சொன்னா!

ஏன் பெங்களூர் போல?

Updated: April 2, 2023 — 7:38 am

2 Comments

  1. Raji un mail ku wait maa

  2. Nice going. Waiting for next part

Comments are closed.