தாமுவை நிமிர்ந்து பார்த்தாள் கீர்த்தனா. காதில் இருந்த.. தொங்கட்டான்கள்.. தூரி ஆட.. தலையைக் குறுக்காக ஆட்டினாள்.
”இல்ல…”
”ஏன்…?” அவன் குரல் தொண்டைக்குள்ளேயே… அமுங்கியது.! ”அவங்கம்மா இருந்தாங்க.. அதான் சரியா… பேசிக்க முடியல..! நான் லெட்டர மட்டும்.. அவகிட்ட.. குடுத்துட்டு வந்துட்டேன்..!!”
தயங்கி ”மறுபடி…எப்ப…?” என்று கேட்டான்.
” இன்னிக்கு வேண்டாம்..! நாளைக்கு சொல்றேன்..!!”
”நாளைக்கு எப்படி..?” என்று கவலையோடு கேட்டான்.
தலையை ஆட்டிச்சிரித்தாள். ”நான்தான் இருக்கேனே…?”
”தேங்க்ஸ் கீர்த்தனா..”என்றான்.
”கடைசில என்னை மாட்டி விட்றாத.. அவ்வளவுதான் சொல்லுவேன்..!!”
” சத்தியமா உனக்கு எந்த பிரச்னையும் வராது..கீர்த்தனா..”
” ம்..! உன்ன நம்பித்தான்..உனக்கு ஹெல்ப் பண்றேன்..! தெரிஞ்சுக்கோ..!!”
பெருமூச்சு விட்டு… எழுந்தான். ”நா..கெளம்பறேன்..”
அவன் முகத்தைப் பார்த்தாள். ”ஏன்.. ஏதாவது வேலை இருக்கா..?”
”இல்ல…”
”பின்ன.. என்ன..? இரேன் போவியாம்..!!”
”உன்னை.. தொந்தரவு பண்றதுக்கு ஸாரி…! ஆனா அதுக்காக… ரொம்ப பண்ண முடியாதே..?”
” பரவால்ல..! உக்காரு போவியாம்..!!” என்று அவளும் எழுந்து.. அவன் கையைப் பிடித்தாள் ”உனக்காகத்தான்.. நான் இந்த மாதிரி… அத்தை வேலையெல்லாம் பண்றேன்..!”
”அத்தை வேலையா..?”
” ம்ம்..! இதே வேலைய.. நீ பண்ணிருந்தா.. என்ன சொல்லுவ..? மாமா வேலைனுதான…?”
”ம்ம்..!!” சிரித்தான்.
” நான் பொண்ணாச்சே… அதான் அத்தை…”
”ஓகோ..! ஸாரி..!!”