நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 5 40

”இதுல.. ஒரு விசயம் என்னன்னா…நீ குடுத்த லெட்டர.. அவகிட்ட குடுக்கறதுக்குள்ள.. நான் பட்ட பாடு இருக்கே..! அப்பப்பா…!! பாரு… இன்னும் கூட.. என் நெஞ்சு… படபடனு அடிச்சுக்குது..!!” என்று அவன் கையை எடுத்து… அவளது நெஞ்சில் வைத்தாள். அதை..அவள்.. வேண்டுமென்றே செய்தாளா.. இல்லை… இயல்பாக நடந்ததா என்று தெரியவில்லை..!
ஆனால் அவன் கை… அவளது இடது மார்பின் மேல் அழுந்த.. அவளின் பருவப் பூப்பந்து… மெது மெதுவென்றிருந்தது..!! மெத்தென்ற அந்தப் பெண்மைச் சுகம்… உடனடியாக அவனது… நரம்பு மண்டலங்களைத் தாக்கியது..!
ஜிவ்வென… அவன் உடம்பில் மின்னதிர்வு.. பாய்ந்த.. அதேநேரம்….
”கீர்த்தி…!” என்று வெளியிலிருந்து குரல் கேட்க… அவன் கையை விட்டு… விலகி…ஜன்னலில் பார்த்தாள் கீர்த்தனா.

வஞ்சனா..!!

”இரு..!” என்றுவிட்டு…கீர்த்தனா உடனே வெளியே போனாள்..!

பதைபதைத்து நின்றான் தாமு..!! அவனது இதயம் ‘பக்… பக் ‘ என அதிர்ந்தது..! என்ன சொல்லப் போகிறாளோ…?

சிறிது நேரத்தில்.. திரும்பி உள்ளே… வந்தாள் கீர்த்தனா.! அவள் முகத்தில் ஆர்வமில்லை.!

” எ…என்ன..கீர்த்தி..?” என்று ஆவலோடு கேட்டான்.

அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள். பின் அவளது மார்புகள் விடைக்க… ஆழமாக.. ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள்..!
மெதுவாக… அவளது உள்ளங்கையில் சுருட்டி வைத்திருந்த.. அவனது கடிதத்தை.. அவனிடமே கொடுத்தாள்..!!

”எ… என்னது..?” தடுமாறியவாறு கேட்டான்.

”திருப்பி குடுத்துட்டா..” என்றாள். சுரத்தற்ற குரலில்.

”ஏன்…ஏ…ஏதாவது…சொ.. சொன்னாளா..?” அவன் குரல் தழதழத்தது..!

”ம்கூம்…!”

”………..”

”ஸாரி…”

உடைந்தான்..தாமு..!! அவன் மனக்கோட்டை தகர்ந்தது..!! அவன் தொண்டை அடைத்தது..! அவளைப் பார்க்கப்… பார்க்க… கண்களில் நீர் திரண்டு… அழுகை முட்டியது..!! மூக்கு விடைக்க… கண்களிலிருந்து மளுக்கென கண்ணீர் வந்தது…!!

திகைத்தவளாக.. அவன் தோளைத் தோட்டாள் கீர்த்தனா.

5

”ஏய்.. தாமு…! என்ன இது..?”

அவன் மெல்ல விசும்ப…
”அட.. பைத்தியக்காரா..” என்று அவன் தோளில் கை போட்டு… அவனைத் தட்டிக்கொடுத்தாள். ”இதுக்கெல்லாம் எதுக்கு அழற..? பொம்பள.. புள்ள மாதிரி..?”

ஆனாலும்.. அவன் கண்கள் கண்ணீரைச் சிந்தவே செய்தன..!!

சிறகொடிந்த பறவை போலானான் தாமு. மிகவும் சோகம் கொண்டாடினான். சாப்பிடப் பிடிக்கவில்லை. தூக்கம் வரவில்லை..! சரவணனுடன் சேர்ந்து.. தண்ணியடித்தான்..!!

இரண்டு வார நாட்கள் எப்படிக் கழிந்தன என்பது அவனுக்கே புரியவில்லை.
அவனது மனநிலை மெள்ள… மெள்ள மாறி வந்து கொண்டிருந்தது..! வஞ்சனா பற்றின நினைப்பைக்கட்டாயமாகத் தவிர்த்து வந்தான்..!
அந்த விசயத்தில் கீர்த்தனா.. அவனுக்கு.. மிகவும் துணை புரிந்தாள்..!!

இரண்டு வாரங்கள் கழித்து…
விடுமுறை நாளில்… கீர்த்தனாவின் விருப்பத்திற்கு இணங்கி… அவளுடன்.. காலைக் காட்சி சினிமா போனான்..!
அவள்தான் டிக்கெட் எடுத்தாள். பால்கனி டிக்கெட்..!!

”படம் சூப்பரா இருக்குனு..என் பிரெண்டு சொன்னா..” என்றவாறு இருக்கையில் உட்கார்ந்தாள் கீர்த்தனா.

அவளருகில் உட்கார்ந்தான் தாமு..”லவ் ஸ்டோரியா..?”

”சுத்தமான லவ்..!!” என்றாள் ”பாட்டெல்லாம் செம ஹிட்..!!”

லவ் என்றாலே… பயங்கர வெறுப்பாக இருந்தது..! கீர்த்தனாவுக்காகப் படம் பார்த்தான்..!

கதை ஆரம்பமாகியதும்… அவன் கையைக் கோர்த்துக்கொண்டு… கதையோடு ஒன்றிப்போனாள் கீர்த்தனா..!

ஆனால் அவனுக்கு அப்படி ஒன்றும் உற்சாகம் தரவில்லை.

கீர்த்தனா பெரிதும் உற்சாகம் காட்டினாள். காதல் காட்சிகளை மிகவும் ரசித்தாள். அவ்வப்போது அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..!! கதாநாயகன்… பைக் ஆக்ஸிடென்ட்டில் சிக்கிக்கொள்ள.. அதைப் பார்த்து.. கீர்த்தனா கண்கள் கலங்கினாள்.!

”சினிமாக்கெல்லாமா… அழுவ..?” என்றான் தாமு.