”அவன் சேர்க்கை..செரியில்ல..! அந்த சரவணன்கூட சேந்துட்டு…கண்டபடி சுத்தறான்..!” என்றாள்.
தாமுவும் சிரித்தான். உமாவைப் பார்த்து..
”காபி வேனுமா..?” என்று கேட்டான்.
”ம்..! வெச்சுருக்கியா..?”
”இல்ல..! வெச்சா…கீர்த்தனாவும் குடிப்பா..”
”சரி.. வெய்…!!”
”பேசிட்டிருங்க..! பால் வாங்கிட்டு வந்தர்றேன்..!” என்று உடனே.. பால் வாங்கப் போனான்.
கீர்த்தனாவிடம் ”உக்காருப்பா..” என்றாள் உமா.
”பரவால்லிங்க்கா…” என்று விட்டுத் தயங்கி…உட்கார்ந்தாள்.
”அப்பறம்… டிபன் ஸ்டால் எப்படி போகுது..?”
”ம்ம்..! நல்லா போகுதுங்க்கா..!!”
”அப்பா… அம்மா… ரெண்டு பேரும் பாத்துக்கறாங்களா..?”
”ஆமாங்க்கா..! அப்பா.. காலைல நாலு மணிக்கே போயிருவாரு..! அம்மாவும் ஏழு..எட்டு மணிக்கு போயிரும்..! ஒரொரு நாளைக்கு அம்மா நேரத்துலயே வந்துரும்… நல்லா வேவாரமாச்சுன்னா… இருந்து..முடிச்சுட்டு… நைட்டு பதினொரு மணிக்கு… அப்பா கூடத்தான் வரும்… லீவ் நாள்ள.. நாங்களும் கடைக்குப் போயிருவோம்..!!”
”உன் தங்கச்சி… படிக்கறாளா..?”
”ஆமாங்க்கா…”
”என்ன படிக்கறா…?”
”டென்த்துங்க்கா…!!”
தாமு பாலும்..பிஸ்கெட்டும் வாங்கி வந்தான். நேராகப் போய்… அவனே அடுப்பைப் பற்ற வைத்தான்
உமா ”நீ… எப்பருந்து வேலைக்கு போற..?” என கீர்த்தனாவைக் கேட்டான்.
”இப்பத்தான்க்கா… ஒரு வருசமா..!!”
”உக்காரு… வந்தர்றேன்..” என்று விட்டு எழுந்து பாத்ரூம் போனாள் உமா.
கீர்த்தனாவைப் பார்த்து…ரகசியமாகப் புன்னகைத்தான்.. தாமு..!!
அவன் காபி வைத்துக் கொடுக்க… குடித்தபின்தான் வீட்டுக்குப் போனாள் கீர்த்தனா..!!
கீர்த்தனா போனபின் தாமுவிடம் கேட்டாள் உமா.
”என்னடா… ரொம்ப முன்னேறிட்ட போலருக்கு..?”
” எ..என்ன சொல்ற..?”
” ம்.. லவ்வெல்லாம் பண்ற..? எப்பருந்து..?”
இளித்தான் ”அதெல்லாம்..ஒன்னும்.. இல்ல..”
”ஓ..! ஒன்னுல்லாமயே… கிஸ்ஸெல்லாம் அடிச்சுக்கறீங்களா..?” என்று.. எழுந்து அவன் பக்கத்தில் போய் நின்றாள்.
திடுக்கிட்டான். பேச வார்த்தை வரவில்லை. கண்களில்.. ஒரு பயம் தெரிந்தது..!
அவன் காதைப் பிடித்து..திருகினாள்.
”எப்பருந்து..?”
”அய்யோ… இல்ல..!”
”பொய் சொன்னேனா… கொன்றுவேன்..!!”
சிரித்தான் ”இ..இபபத்தான்…”
”ம்..! மீசை மொளச்சுருச்சில்ல.? சரி… அவ என்ன ஆனா..?”
”எ.. எவ…?”
”சரண்யா…? சரவணனோட தங்கச்சி…?”
”அய்ய.. அவள.. எல்லாம்.. லவ் பண்ணவே இல்ல..?”
”ஓ..! அப்ப… ஒரு டைம்ல.. நோட்டு பூரா…சரண்யா.. ஐ லவ் யூனு எழுதி வெச்சிருந்த..? அது.. ஒன் சைடா..?”
” போக்கா…!!” என்று சிரித்து விலகிப் போனான்.
உமா அவனைத் திட்டக்கூட செய்யாதது… அவனுக்கு பெரிதும் உவகையைக் கொடுத்தது..!
இரவு படுக்கும் போதுதான் உமா சொன்னாள்
”தம்பு… அக்கா.. கல்யாணம் பண்ணிக்கப் போறேன்டா..”
திகைத்துப் பார்த்தான் தாமு.
”எப்ப..?”
”நாளான்னிக்கு…” என்றாள்.
”நாளான்னிக்கா..? இப்படி சொல்ற..?”
”வேற.. எப்படிடா சொல்றது..?”