நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 5 40

” சும்மாதான.. பெட் வெச்சு வெளையாடினாதான் கேம் இண்ட்ரெஸ்ட்டா இருக்கும்..”

மெதுவாக தலையை அசைத்தான்.
”ம். .”

அவசரமாக எழுந்து கேரம்போர்டை எடுத்து வைத்தாள் சரண்யா. காயின்களை அடுக்கினாள்.
எதிரெதிரே உட்கார்ந்து விளையாடத் தொடங்கினார்கள்.
முதல் சுற்றில் சரண்யாதான் வென்றாள். பந்தயப் பணமான பத்து ரூபாயை அவளிடம் கொடுத்தான் தாமு.
வாங்கும் போது சொன்னாள்.
”என்ன ஜெயிக்க… நீ இன்னொருக்கா பொறக்கனும்..”

”அதெல்லாம் இல்ல.. பாவம்னுதான் விட்டுக்குடுத்தேன்..”

”ஆ…ஆ..” என்று சிரித்தாள்.

மறுபடி காயின்களை அடுக்கி.. விளையாடினார்கள்.
அவள் குணிந்து விளையாடும்போது… புடைப்பும் விடைப்புமான அவளது மார்பு.. அவனை வெகுவாகக் கவர்ந்தது.
அவன் பார்வை தன் மார்பில் படிவதை உணர்ந்தவள்..
”இங்க என்ன பாக்ற…?” என்றாள்.

அவன் சிரித்து ‘இல்லை’ யென தலையாட்டினான். ஆனாலும் மறுபடி… மறுபடி அவனது பார்வை அவன் மார்பின் மீதே விழுந்து கொண்டிருந்தது.

அவனைப் பார்த்து ”சைட்டடிக்கறியா..?” என்று கேட்டாள்.

”சே… இல்ல..”

கண்ணடித்துக் கேட்டாள் ”டிஸ்டர்ப் பண்ணுதா..?”

”என்னது..?”

தன் மார்பைச் சுட்டிக்காட்டி…
”ம்ம். ..” என்றாள்.

”ஏய்…?”

”சும்மா சொல்லு மச்சான்..! அழகா இருக்கனா..?”

”ம்ம்…”

”என்ன ம்ம்..?”

”சூப்பரா இருக்க…”

”அப்பறம்.. சைட்டடிக்கலேன்னு சொன்ன..?”

சிரித்தான் ”சும்மா…”

மூக்கை ஒரு மாதிரி சுளித்து.. பழிப்புக்காட்டியவாறு சொன்னாள்.
”சரவணன் வரட்டும் சொல்றேன்..”

அதேநேரம் அவளது அம்மா வந்தாள.
”நீ எப்படா… வந்த..?”

”இப்பதான்க்கா…” என்றான்.

” இல்லமா.. பொய் சொல்றான்… வந்து கால்மணி நேரத்துக்கு மேலாகுது..!” என்றாள் சரண்யா.

” ஏன்டா… பொய் சொல்ற..?” என்றாள் அவளது அம்மா.

”அதெப்படி… உண்மையை சொல்லுவான்..! என்னை சைட்டடிச்சிட்டு இல்ல இருந்தான்…” சரண்யா சொல்ல..
திடுக்கிட்டான் தாமு…..!!!!

– நீளும்…..!!!!