நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 5 40

”இ..இல்ல..! இப்படி… திடுதிப்புனு…வந்து…சொல்ற..?”

” நாங்களே… இன்னிக்குத்தான்டா.. முடிவு பண்ணோம்…! சிம்பிளாதான்..! யாரையுமே கூப்பிடப்போறதில்ல… எங்ககூட…நீ மட்டும்தான்..!!”

”ஏ..ஏன்..?”

”வேணான்டா தம்பு… நம்ம தகுதிக்கு..நாமளே போதும்..! நீ வேனா… உன் பிரெண்டு…கேர்ள் பிரெண்டெல்லாம் கூப்பிட்டுக்கோ..! பெரியவங்க யாரும் வேண்டாம்…சரியா..?”

”என்னக்கா… இப்படி..சொல்ற..?”

அவனைக் கட்டிப்பிடித்து..முத்தம் கொடுத்து விட்டுச் சொன்னாள்.
”புரிஞ்சுக்கோ…தம்பு..!!”

தலையை… மெதுவாக.. ஆட்டினான் தாமு.

☉ ☉ ☉

உமாவின் திருமணம்…!!
பக்கத்தில் இருந்த..மலைக்கோவிலில் மிக.. எளிமையாக நடந்தது..! அளவான நண்பர்கள் மட்டுமே.. கலந்து கொண்டார்கள்..!!

அன்றைய இரவு..சரவணனுடன் பாருக்குப் போனான் தாமு…!!
ஆளுக்கு ஒரு பீர்..!!

போதை ஏறிய பின்னர்தான் சொன்னான் தாமு.
”கீர்த்தனா.. என்னை.. லவ் பண்றாடா..”

சரவணன் வியந்தான்.
”என்னடா சொல்ற..?”

சந்தோசத்தில் சிரித்தான்.
”அவதான்டா… லவ் பண்றதா சொன்னா..”

”எப்ப..?”

” முந்தா நாள்டா…”

”ஹா..! இதப்பார்றா..! இதான்டா..மச்சம்ன்றது..!!’

”ஆனா… சரவணா…” தயங்கி ”என்னால… முழுசா.. அவள.. லவ் பண்ண முடியலடா..!” என்றான்.

திகைப்பாகப் பார்த்தான் சரவணன்.
”என்னடா…பேத்தற..?”

”ஆமா சரவணா..! வஞ்சனாவ என்னால மறக்கவே முடியல..!! இன்னுமே… ராத்திரில… தூங்கறதுக்கு முன்னால அவள நெனச்சா… அழுதுர்றேன்டா..!!”

”போடா..ங்க..!!”டென்ஷனான் சரவணன் ”நீயெல்லாம் ஒரு ஆம்பளைப் பையனாடா..? வஞ்சனாவ மறக்க முடியலியாம்..! எவடா..அவ..? திடிர்னு வந்தா… திடிர்னு போய்ட்டா…! அவ ஒரு நல்ல பிகருதான்… ஆனா அவதான் உன்ன லவ் பண்ண முடியாதுனு சொல்லிட்டா இல்ல..? அப்பறம் என்ன.. வஞ்சனா..? பெரிய மயிரு..! தா பாருடா மச்சான்.. கீர்த்தனா நல்ல பொண்ணுடா..! பேசாம அவள லவ் பண்ணு…!!”

”நா…நான்…அவள அப்படி நெனைக்கவே இல்லடா…”

”இப்ப நெனை…! இனிமே நெனை..!!கீர்த்தனாகிட்ட என்னடா கொறை..? என்ன அந்த வஞ்சனா மயிரு மாதிரி… அம்சமா…ஆட்டகாசமா இல்ல..! மாநிறம்தான்… கொஞ்சம் ஒல்லிதான்.. ஆனா நல்ல பொண்ணுடா அவ.! பின்னால நீ.. அவள கல்யாணம் பண்ணாலும் நல்லாருப்ப..!!” என்று கீர்த்தனாவுக்கு உத்திரவாதம் குடுத்தான் சரவணன்..!
பீரைக்காலி பண்ணிவிட்டு… சிகரெட் பற்ற வைத்தான்.

”அப்ப… கீர்த்தனாவையே.. லவ் பண்ணலாங்கற..?” என்றான் தாமு.

”பண்ணலாம் இல்ல… நீ பண்ற…”

”ம்ம்… சரிடா..!!”

”குட்…! இதான் பொழைக்கற புள்ளைக்கு அழகு..! நட போலாம்..!!” என்று எழுந்தான்.

” இன்னிககு நான்…உன்வீட்லதான்டா படுக்கனும்..”

”உங்கக்கா சொன்னா..! வா..!!”

”உங்கம்மா இருக்குமா..?”

” ம்கூம்..! நைட் டூட்டி..! இருந்தா மட்டும் என்ன…? வாடா..” என்று தன் வீட்டிற்கு அழைத்துப் போனான் சரவணன்.

கதவைத் தட்ட… லேசான தூக்கக்கலக்கத்துடன் வந்து கதவைத் திறந்தாள் சரண்யா.
”எங்கடா போனீங்க..?” என்று கேட்டாள்.
அவளது தலைமயிர் கலைந்து பூதம் போலிருந்தாள்.

”இன்னும் நீ.. தூங்கல..?” தாமு கேட்டான்.

”இப்பத்தான் படுத்தேன்..! இவ்ள நேரம் உங்களுக்காகத்தான் வெயாட் பண்ணிட்டிருந்தேன்.!!”

சரவணன் ”சரி.. நீ போய் படு..” என்றான்.