எழுந்து நின்று.. பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்தான்.
வாங்கியவள்.. ”தேங்க்ஸ்..! எங்கண்ணங்கிட்ட சொல்லிராத…” என்று விட்டு வெளியே போனாள்..!!
மாலையில் வேலை முடிந்து வந்த தாமு வீட்டுக்குப் போனபோது உமா மட்டும்தான் இருந்தாள். நீலநிறப் புடவை.உடுத்தியிருந்தாள். தலை நிறைய பூ..! கழுத்தில் தடிமனான புது தாலிக்கயிறு..! நடக்கும்போது… ஜல்ஜல்.. புதுக்கொழுசு..! கால் விரல்களில் மெட்டி..!! ஒருவன் மனைவியாக அங்கீகரிக்கப்பட்டு விட்டு பூரிப்பு.. அவள் முகத்தில் தெரிந்தது..!!
8
தாமுவுக்கு காபி கலந்து கொடுத்தாள்.
”அவரு எங்க…?” அவளது முகத்தைப் பார்த்துக் கேட்டான்.
”வெளில போயிருக்காரு..” என்றாள்.
அவளையே சிறிது நேரம் பார்த்தான்.
”என்னடா.. அப்படி பாக்ற..?” சிரித்துக் கேட்டாள்.
”ரொம்ப சந்தோசமா இருக்க போலருக்கு..?”
”என்னடா கேள்வி…இது..? நேத்துதான் கல்யாணமாகியிருக்கு..?”
”ஓ..! இதான் கல்யாணக்கலையா..?” என்றான்.
”அப்பறம் நைட்டு.. பீரு குடிச்சியாடா..?”
”பீரா..ஏன்…?”
” மூக்க உறிஞ்சற… சளி புடிச்சிருச்சா..?”
சிரித்தான் ” ம்ம்..!!”
அவன் தலையில் கொட்டினாள் ”சரவணன் வீட்ல… படுக்கறதுல..ஒன்னும்.. உனக்கு சங்கட்டம் இல்லியே..?”
”ம்கூம்..! பிரெண்டு வீடுதான..?” என்றான்.
காபி குடித்த பின் கேட்டான்.
”சாபபாடு செஞ்சுட்டியா..?”
” ஆயிட்டிருக்கு.! இந்தா கடைக்குப் போயி… ஒரு பத்து முட்டை வாங்கிட்டு வா..” எனத் தன் முந்தானையை ஒதுக்கி.. ரவிக்கைக்குள் விரல்விட்டு… குட்டி பர்ஸ் ஒன்றை எடுத்து.
.. பணம் எடுத்துக் கொடுத்தாள்.
”உனக்கு ஏதாவது வேனுமா..?”
”ம்கூம்…!!” என்று எழுந்து கடைக்குப் போனான்.
முட்டை வாங்கி வந்து கொடுத்து விட்டு டிவி முன்னால் உட்கார்ந்து கொண்டான்.
உணவு தயாரானதும்… அவனுக்கு உணவைப் போட்டுக் கொடுத்தாள்.
அவன் சாப்பிடும் போது கேட்டாள் உமா.
”மாணிக்கத்த.. உனக்கு.. புடிச்சிருக்காடா..?”
தலை நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
”ஏன்..?”
”மாணிக்கம் நல்ல மாதிரிடா..! அதான் கல்யாணம் பண்ணிட்டேன்..!! நல்ல ஆளுதான்டா..!! இனி… அந்தாளுதான்டா… நமக்கு சொந்தம்..!!”
அவன் ஒன்றும் பேசவில்லை. அமைதியாகச் சாப்பிட்டான்.
அவன் சாப்பிட்டு முடித்து கை கழுவினான்.
சிறிது நேரம் கழித்துக் கேட்டாள் ”இன்னிக்கு என்னடா.. பண்ற..?”
புரியாமல் அவளைப் பார்த்தான்.
”இன்னிக்கும் சரவணன் வீட்லயே படுத்துக்கறியா..?”
அவனுக்குள் என்னவோ நிகழ்ந்தது.
உமா ”இன்னிக்கு ஒரு நாள்தான்..! நாளைலேர்ந்து.. உன்னை வெளில தங்கச் சொல்ல மாட்டேன்..! ம்ம்..?” அவனை அணைத்து ”என் தம்பு நான் சொன்னா கேப்பான் இல்ல..?” என்று முத்தம் கொடுத்தாள்.
ஒரு கணம் அன்னியப்பெண்ணாகத் தோண்றினாள் உமா.!
இதுவரை அவன் பார்த்த உமாவல்ல.. இவள்..!! இவள் வேறு..! இவள் உமா…! மாணிக்கம் என்பவன் மனைவி..!!
ஒருவிதமான கணத்த மனநிலையில்தான் வீட்டிலிருந்து வெளியேறினான் தாமு. வழியில் கீர்த்தனா எதிர்ப்பட்டாள். அவளுடன்.. அவளது தங்கையும் இருந்தாள்.
”எங்க இந்த நேரத்துல…?” என்று கீர்த்தனா கேட்டாள்.
”சரவணன் வீட்டுக்கு..” என்றான் ” நீ..?”
”கடைலருந்து வர்றோம்..! அப்பறம்.. உங்கக்கா என்ன பண்றாங்க..?”
”ம்ம்..! அவளுக்கென்ன..?”
”ஹனிமூன் அனுப்பலையா..?” என்று சிரித்துக் கொண்டு கேட்டாள் சைலா.!
”க்கும…!” சிரித்தான் ”அது ஒன்னுதான் குறை..?”
”எப்படியோ… உங்கக்காளுக்கும் கல்யாணமாகிருச்சு…!!” என்றாள் கீர்த்தனா.