நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 5 40

”சாப்பாடு…?”

”வேண்டாம்…!!”

”என்னடா…ரெண்டு மாப்பிளைகளும் குடிச்சிருக்கீங்களா..? இரு.. இரு…அம்மா வரட்டும்…!!” என்ற தன் தங்கையின் பொடனியில் ஒன்று போட்டான் சரவணன்.

”உங்கம்மாளே… மப்புலதான்டி இருப்பா..! மூடிட்டு போய் படு..!!”

!’பரதேசி..நாயி..!!” என்று திட்டிவிட்டு.. தாமுவைப் பார்த்து.. ”உனக்கு இருக்கு.. மாப்ள.. உங்கக்காகிட்ட சொல்றேன்… இரு..! இவன்கூட சேந்துட்டு… நீயும்… குட்டிச்செவுரு ஆகறியா..?” என்றாள்.

மறுபடி… அவளது பொடனியில் ஒன்று போட்டான் சரவணன்.

உடனே தாமு…”டே.. அவள ஏன்டா..இப்ப.. அடிக்கற..! அவ சொன்னா.. சொல்லிட்டு போறா..விடு..!” என்று சரவணனைதா தடுத்து விட்டு… சரண்யாவிடம் சொன்னான் ”தாராளமா சொல்லிக்க..!!”

”ஓ..! குளுரு.. உட்டுப்போச்சு…?”

”ஆமா..!” என்று சிரித்தான்.

சரவணன் போய்.. பாயை எடுத்து.. தரையில் விரித்தான்.
”அவ கெடக்கா..! வாடா மச்சான்..நாம.. தூங்கலாம்..!!”

சரண்யாவிடம் கேட்டான் தாமு.
”சாப்பிட்டியா… சரண்…?”

”பின்ன… உங்கள.. மாதிரி.. நாங்க என்ன குடிச்சிட்டு அலையறமா..?” என்று விட்டுப் போய் கட்டிலில் படுத்தாள்.

தாமு பாயில் படுக்க…
சரண்யாவிடமிருந்த.. டிவி ரிமோட்டைப் பிடுங்கினான் சரவணன்..!! மறுநாள் காலை..!!
சரவணன் குளித்துக் கொண்டிருந்தான்.!
நைட் டூட்டி முடிந்து வந்த.. அவன் அம்மா தூங்கிக்கொண்டிருந்தாள். சேரில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தான் தாமு.
டிவியில்…
”ஏம் பேரூ… மீனா குமாரீ…” பாட்டு ஓடிக்கொண்டிருந்தது.

”என்ன பாட்டு இது… கண்றாவி..” என்று குரல் கேட்டுப் பின்னால் திரும்பிப் பார்த்தான் தாமு.

சரண்யா.. பள்ளிச் சீருடையில் இருந்தாள். அவள் கையில் பூஸ்ட் டம்ளர்..! உள்ளே வந்து பக்கத்து சேரில் உட்கார்ந்தாள்.!
”பாக்கறத பாரு..!!” என்றாள்.

சிரித்தான் ”என்ன..?”

”ஜொள்ளு.. வழியுது..!!” பூஸ்ட் குடித்தாள் ”என்னை இல்ல… அவள..!!” என்று டிவியைச் சுட்டிக்காட்டினாள்.

”ச்ச..! பாட்டு நல்லாருநதுச்சு..!”

”பாட்டா..? இல்ல… குலுக்கலா..?”

”ரெண்டும்தான்..!!” சிரித்தான்.

”தூ..!”

சேனலை மாற்றினான்.

பூஸ்ட் குடித்த பின்.. ”தாமு..” என்றாள்.

அவளைப் பார்த்தான் ”என்ன..?”

” உன்கிட்ட… ஒரு… பிஃப்டி ருப்பீஸ் இருக்குமா…?” என்று கேட்டாள்.

”அம்பதா…எதுக்கு..?”

”வேனும்..! தாயேன்.. ப்ளீஸ்..!” முகத்தைக் கெஞ்சலாக மாற்றினாள்.

”எதுக்குனு சொல்லு..?”

”இன்னொரு நாள் சொல்றேன் குடு…” எழுந்து.. அவன் பக்கத்தில் வந்து..நின்று… அவன் தோளில் கை வைத்து.. ”காசு குடுத்தின்னா… நீ என்ன பண்ணாலும் உங்கக்காகிட்ட சொல்ல மாட்டேன்..!!” என்றாள்.

”என்ன பிளாக் மெயிலா.. நீ சொனனாலும்.. எனக்கு கவலை இல்ல..!” என்று சிரித்தான்.

”ப்ளீஸ்… குடு தாமு…” அவன் சட்டைப் பாக்கெட்டில் கைவிடப் போனாள்.

அவள் கையைத் தடுத்துப்பிடித்தான்.
”சொன்னாத்தான் தருவேன்..”

”நிஜமா…?”

”நிஜமா…!!”

” என் பிரெண்டு கூட.. ஒரு போட்டி வெச்சு..நான் தோத்துட்டேன்..! அதுக்கு ட்ரீட் தரனும்..!” என்றாள்.

” ஓ..! என்ன போட்டி..!!”

இரட்டைப் பினனலில் ஒன்றை எடுத்து முன்பக்கம் போட்டாள்.
”அ…அது.. உன்கிட்ட சொல்ல முடியாது…”

”ஏன்…?”

”எங்க.. பர்சனல்..” என்று..மறுபடி..அவன் பாக்கெட்டில் கை விட்டாள்.
அவனது கைபேசிதான் இருந்தது..!

”காசு எங்க..?”