காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 3 48

சொல்லுறேன்! அதுக்கு முதல்ல, நீங்க என்னை நம்பனும்? ஒழுங்கா நடந்துக்கனும்? காலையில மாதிரி திமிரா நடந்துக்கக் கூடாது. சரியா?

அவன் தயங்கித் தயங்கி ஒத்துக் கொண்டான். நம்புறேன், ஆனா, உன்னை எப்படி நம்புறது? என்ன இருந்தாலும், அவ உன் அக்கா? அக்கா கணவர் ஹரீஸ்! அவிங்களுக்கு எதிரா நீ எதுக்கு இருக்கனும்???

ஹா ஹா! நல்ல கேள்விதான். சொல்றேன்.

இங்க பாருங்க, எனக்கு அக்கான்னு யாரும் கிடையாது. ஏன், எனக்கு அப்பா, அம்மா கூட கிடையாது. எங்க அம்மாவை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டவர் எங்க அப்பா. அதுக்கு என் சித்தியும் உடந்தை. அதுனால அவிங்களை பழிவாங்குறதுக்கான சான்சை பாத்திட்டு இருந்தேன். எப்படி எங்க அம்மா வாழ்க்கையை கெடுத்தாங்களோ, அதே மாதிரி அவங்க கண்ணு முன்னாடி அவங்க பொண்ணு வாழ்க்கையை சிதைக்கப் போறேன். அதுதான் அவங்களுக்கான என் தண்டனை. அதுனாலத்தான் இந்த விஷயத்துல உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்தேன். இல்லாட்டி, உங்களைப் பத்தி நான் ஏன் கவலைப் படணும்?

யதேச்சையா, அவங்க மூணு பேரும் உங்களைப் பத்தி பேசிட்டிருந்ததை கேட்டேன். எப்படியாவது ஹரீஸ்கிட்ட சொல்லி, உங்களோட வண்டவாளத்தை எல்லாம் புரிய வெச்சதுக்கப்புறம், உங்களை தொரத்திட்டு, அவிங்களும் இங்க வர்ற மாதிரி ப்ளான் பண்ணியிருக்காங்க!

இப்பச் சொல்லுங்க, என்னை நம்புறீங்களா?

நான் சொல்லுவதில் பல விஷயம் அவன் ஏற்கனவே அறிந்திருந்ததுதான். தவிர, கல்யாணத்திற்குப் பின், நான், என் அப்பா அம்மாவை பிசினசில் இருந்து ஒதுக்கியதும் தெரியும். இவை எல்லாம் சேர்ந்து, அவனுக்கு என் மேல் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

இது ஒருவகையான டெக்னிக். எதிரியையும், துரோகியையும் வெல்ல, அவனை முதலில் நம்ப வைக்க வேண்டும். அவன் புத்திசாலி, தனக்கு அதிகம் லாபம் என்று எண்ணிக் கொள்ளும் தோற்றத்தைத் தர வேண்டும்! அதற்கு வெறும் பொய்கள் சொல்லக் கூடாது. உண்மையும், பொய்யையும் கலந்து சொல்ல வேண்டும். கொஞ்சம் குழப்பத்திலும், பதட்டத்திலும் வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாட்டிற்குள் வந்த பின், திருப்பி அடிக்க வேண்டும்! அப்படித்தான், மோகனும் என் கட்டுப்பாட்டிற்குள் வர ஆரம்பித்தான்.

ஒரு விதத்தில் இந்த சூழ்நிலையை நான் விரும்பினேன். எவ்வளவு திறமையானவனாக, சக்சஸ்ஃபுல் பிசினஸ்மேனாக நான் இருந்தாலும், பெற்ற தாய், தந்தை என முக்கிய உறவுகள் என்னை ஏமாற்றியதும், ஒரு பெண்ணாக இருந்தும் என் தாயை ஏமாற்ற என் சித்தி திட்டம் போட்டதும் என எல்லாம் சேர்ந்து எனக்கு உறவு சார்ந்த விஷயத்தில் ஒரு சில உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தியிருந்தது. ஒரு வேளை நான் எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல், கொஞ்சம் யாரிடமாவது ஷேர் பண்ணியிருந்தால், எனக்குள் இந்த உளவியல் சிக்கல் வராமல் இருந்திருக்குமோ என்னமோ?!

1 Comment

  1. Next part upload pannunga

Comments are closed.