அவள் அமைதியாக இருந்தாலும், என் பேச்சு அவளைக் காயப்படுத்துவதை உணர முடிந்தது.
சரி, நீங்க தெரிஞ்சிட்டு வரேன்னு போனீங்களே, என்ன தெரிஞ்சுது?
——–
என்னமோ, என் வீடு, எல்லா முடிவும் என்னுதுன்னு சொன்னீங்க. இப்ப எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க.
இப்போது கோபமாக அவள் பேசினாள்.
நீ பேசாத. நீ எதையோ சொல்லி அவரை ப்ளாக்மெய்ல் பண்ற. இல்லாட்டி, என் பேச்சுக்கு பதில் பேச்சே கிடையாது. என்ன பண்ண அவரை? உனக்கு என்ன வேணும்?
இப்போது எனக்கு கோபம் வந்துது. லூசாடி நீ?
டி யா?
ஆமாண்டி! உனக்கு என்னடி மரியாதை? தன்மானம் இல்லாதவன்னு நினைச்சேன். அறிவும் இல்லாதவன்னு இப்பதான் புரியுது.
ஏய் மரியாதையா பேசு? இல்ல…
இல்லாட்டி என்னடி பண்ணுவ? என்னை வீட்டை விட்டு வெளிய அனுப்புவியா? எங்க போயி, உன் புருஷன்கிட்ட சொல்லி செஞ்சு காமி பாக்கலாம்?
என்னுடைய பதிலில் இருந்த உண்மையும், வயதில் பல வருடம் சின்னவனான் நான் ‘டி’ என்று அழைப்பதும், என்னை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையும் அவளது கண்ணில் கண்ணீரைக் கொண்டு வந்திருந்தது.
டக்கென்று ஞாபகம் வந்தவளாக சுற்றும் முற்றும் பார்த்தாள்.
என்ன பாக்குற? வேலைக்காரங்க இருக்காங்களான்னா? கவலைப்படாத. உனக்கே சொரணை இல்லைன்னாலும், எனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு. உனக்காக இல்லாட்டியும், எனக்காக, நான் உன்னை அவ்ளோ மரியாதைக் குறைவா மத்தவிங்க முன்னாடி நடத்த மாட்டேன்.
அந்த நேரத்தில், இடத்தில் நான் காட்டிய கருணை, அவளை இன்னும் அடித்தது. மெல்லிய விம்மலுடன் கேட்டாள்.
Next part upload pannunga