அது உனக்கே தெரியும்.
அது தெரியலைன்னுதானே உங்ககிட்ட கேக்குறேன்.
நீ என்னை விட வயசுல சின்னவன். பத்தாதக்கு உன் அக்கா இந்த வீட்டுக்கு வாழ வந்தவ. என்கிட்ட நீ மரியாதையா நடந்துக்க வேணாம்?
எதுக்கு நடந்துக்கனும்?
மதன்…
பாருடா கோபம் கூட வருது! இதெல்லாம் உங்களுக்கு வருமா?
அவளுக்கு கோபம் அதிகமாகியது. கூடவே கொஞ்சம் குழப்பமும்.
நான் இன்னமும் சொன்னேன். என் மேல இருக்கிற கோவத்தை, என் அக்கா மேல காமிக்கப் போறீங்களா? காட்டிக்கோங்க, எனக்கென்ன வந்தது?
மோகன் என் விஷயம் முழுமையாகச் சொல்லாவிட்டாலும், ஏற்கனவே, நான் அவர்களுடன் அதிக டச்சில் இல்லாததும், என் அக்காவிடம் எனக்கு பெரிய நெருக்கம் இல்லாததும் சொல்லியிருந்தான். ஆகவே, இதைச் சொன்னதும், அவளுக்கு கடுப்பானது! அதனால் சொன்னாள்.
உன் அக்காவைப் பத்தி நீ கவலைப் பட மாட்ட. ஆனா, நீ இருக்கிறது எங்க வீட்ல. நீ பணக்காரனா இருந்தா எனக்கென்ன வந்தது? என் வீட்லியே தங்கி என்னை மதிக்காம நடந்தா என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியாது!
ஹா ஹா ஹா!
அவளின் கோபத்தையும், பேச்சையும் கண்டு, ஏதாவது விளக்கம் கொடுப்பேன் என்று நினைத்திருந்தால், என்னுடைய சிரிப்பு பொய்யாக்கியது, அது இன்னமும் கடுப்பேற்றியது!
எதுக்கு சிரிக்கிற?
ஹா ஹா ஹா… நான் இன்னமும் சிரித்துக் கொண்டிருந்தேன்.
மதன்… சொல்லிட்டு சிரி.
இல்ல, பணக்காரன்னா கவலையில்லை. ஆனா எனக்கு மரியாதைதான் முக்கியம்னு அடிச்சு விட்டீங்களே. அதைக் கேட்டுதான் சிரிச்சேன்.
Next part upload pannunga