காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 3 48

கேட்ட அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

என் பார்வையைத் தாங்க முடியாமல், தலையைக் கீழே போட்டாள்.

பின் அவளிடம் மெதுவாகச் சொன்னேன், கேவலம் ப்ராஸ்டியூட்டுகிட்ட போனா கூட, காசு கொடுத்தாதான் அவளைத் தொட முடியும். அதுக்கும், ஒவ்வொரு முறையும் அவளுக்கு காசு கொடுக்கனும். அதிலியும் அவளுக்கு இஷ்டமில்லாததை செய்யக் கூடாது.

உன் புருஷன், உன் கூடயும் சந்தோஷமா இருந்துட்டு, வெளிலயும் கனெக்‌ஷன் வெச்சிருந்தாக் கூட, அட்லீஸ்ட் வேற மாதிரி நினைச்சிக்கலாம். ஆனா…

இந்த மாதிரியெல்லாம் அவள் யோசிக்கவே இல்லை. இதைத் தாங்கவும் முடியவில்லை. ஆனால், இன்னும் இருக்கிறது என்பது போல் இழுத்ததில் முழுதாக தெரிந்து கொள்ள நினைத்தாள்.

ஆனா? இன்னும் என்ன பாக்கியிருக்கு? மெல்லிய கண்ணீரோடு கேட்டாள்!

ஆனா, உன் புருஷன், உன்னைத் தொடாம இருக்குறதுக்கு உனக்கு காசு கொடுத்திட்டுருக்கான்னா, என்ன அர்த்தம்? நீ, ப்ராஸ்ட்டியூட் அளவுக்கு கூட ஒர்த் இல்லைன்னு அர்த்தம். அந்த மரியாதைதான் உனக்கு!

அவ்ளோதான். அவளை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து செருப்பால் அடித்தது போல் இருந்தது அவளுக்கு. கண்களில் மட மடவென கண்ணீர். இவ்வளவு உச்ச கட்ட அவமரியாதையை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

அப்படியே சிலை போல் அழுகையுடன் அமர்ந்திருந்தாள்.

பின் நான் அறையை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்தேன். கதவைத் திறக்கும் முன், சிறிது நின்று திரும்பி சொன்னேன்.

எனக்கு உன் மேல ஓரளவு மரியாதை இருந்துது. அதை கெடுத்துகிட்டதுக்கு காரணம் உன் முட்டாள்தனமும், உன் புருஷனை கண்ணை மூடிகிட்டு நம்புனதும்தான். இல்லாட்டி, இதெல்லாம் எனக்கு எப்டி தெரிஞ்சிருக்கும். இதெல்லாம் நான் சொல்ல ஆரம்பிச்சப்ப, நீ என்னை நம்பலை. உன் புருஷனுக்காக பேசுன. ஆனா, அந்தாளு, எடுத்த எடுப்புலியே, நீ எதுக்கும் தகுதி இல்லைன்னு என்கிட்ட பேசுறான்.

நான் இந்த வீட்டுக்கு வந்து ஒரு வாரம்தான் இருக்கும். என்கிட்டயே, உன்னப் பத்தி இவ்ளோ மோசமா சொல்லியிருக்கிற ஆளு, வெளில எப்டி சொல்லி இருப்பான்? என்னென்னால்லாம் சொல்லியிருப்பான்? ம்ம்ம்?

1 Comment

  1. Next part upload pannunga

Comments are closed.