காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 3 48

உன் புருஷன் வந்தவுடனே, இப்பிடிச் சொன்னானா, ஏன் அப்படிச் சொன்னான்னுல்லாம் கேட்டு திரும்ப இன்னொரு முட்டாள் தனத்தை செய்ய மாட்டேன்னு நான் நம்புறேன். ஏன்னா, சண்டை போட்டாலும், இல்லன்னு மறுக்க அவனுக்கு நேரம் ஆகாது. ஏன் புதுசா ஏதோ உளற்றன்னுதான் கேப்பான்!

இல்ல, நான் சொன்னது எதுவுமே உண்மையில்லை, உன் புருஷன் ரொம்ப நல்லவன்னு நினைச்சாலும், இதே வாழ்க்கையை கண்டினியு பண்ணு. உன் இஷ்டம்தான்!

என்ன பண்ணனும்னு பொறுமையா யோசி. அப்புறமா முடிவெடு. புத்திசாலியா இருக்குறதும், முட்டாளா இருக்குறதும் உன் கையில இருக்கு,

சொல்லி விட்டு அவள் ரூமை விட்டு வெளியேறி விட்டேன்.

எனக்கு மிகவும் திருப்தியாயிருந்தது. எனது திட்டத்தில், அடுத்த படி தாண்டியாயிற்று.

கணவன், மனைவி இருவருமே இப்போது என் வலைக்குள். எதிர்பார்த்ததை விட, சீதாவை என் வலைக்குள் விழ வைப்பது மிக எளிதாய் இருந்தது.

மேனிபுலேஷன் என்று ஒன்று இருக்கிறது. மோகனிடம்னாச்சும் சில பல பொய்களைச் சொன்னேன். வாக்குறுதிகளைக் கொடுத்தேன். ஆனால் சீதாவிடம் இவை எதுவும் இல்லை.

அவளிடம் புதிதாய் எதுவும் சொல்லவில்லை. எல்லாமே அவளுக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால், பார்க்கும் பார்வையை மேனிபுலேட் செய்வதன் மூலம்தான் எவ்வளவு பெரிய சூழ்ச்சியையும் செய்து விட முடிகிறது?!

நேற்று வரை அவளை பாதிக்காத விஷயங்கள், இப்பொழுது முழுக்க குடைய ஆரம்பித்து விட்டனவே? இனி, கொஞ்சம் கொஞ்சமாக அவள் துருவ ஆரம்பிப்பாள். மிக முக்கியமாக, எல்லாவற்றையும் தவறான கோணத்திலேயே பார்க்க ஆரம்பிப்பாள். அதுதான் எனக்கும் வேண்டும்!

மகிழ்ச்சியுடன் எனது ரூமுக்கு சென்றேன்.

அடுத்த இரண்டு நாட்களும், அவளைக் கண்டு கொள்ளவேவில்லை. அதே சமயம், முன்பு போல் அலட்சியமாகவும் நடத்தவில்லை.

நான் எதிர்பார்த்தது போல், அவளும் மோகனிடம் சண்டை எதுவும் போடவில்லை. மிகவும் அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தாள். முகத்தில் குழப்பம் இருந்தது.

சரியாக இரண்டு நாள் கழித்து, மோகன் இல்லாத சமயத்தில் என்னைத் தேடி என் ரூமுக்கு வந்தாள். அவள் முகத்தில் இன்னமும் குழப்பம்.

1 Comment

  1. Next part upload pannunga

Comments are closed.