கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 50 18

“இன்னைக்கு ராத்திரி என் அப்பாக்கிட்டே பேசறேன்… நாளைக்கு நீங்க என் வீட்டுக்கு வரும்போது ஒரு முடிவு எடுத்துடலாம்.” சுகன்யாவின் சூடான உதட்டில் அழுத்தமாக ஒரு முறை முத்தமிட்டான் செல்வா.

“தேங்க் யூ செல்வா…” சுகன்யாவின் வலது கரம் செல்வாவின் இடுப்பில் கிடந்தது. செல்வாவின் இடது கை அவள் கழுத்தில் கிடந்தது. இருட்டிலிருந்து வெளிச்சத்தை நோக்கி அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.

“சுகா…”

“ம்ம்ம்ம்…”

“உன் வீட்டிலேயும் இதைப்பத்தி இன்னைக்கு நைட்டே நீயும் இன்ஃபார்ம் பண்ணிடு…”

“சரி…”

தீடிரென கடற்கரை சாலையிலிருந்து விளக்குகள் அணைந்தன. பவர்கட் சனியன்… செல்வா முனகினான். சுகன்யாவுக்கு தீடிரென இனம் தெரியாத ஒரு பயம் அவள் உடலைத் தழுவியது.

“செல்வா… பிளீஸ்… கிஸ் மீ…” சுகன்யா சட்டென நின்று அவனை இறுகத் தழுவிக்கொண்டாள்.

அவர்கள் உதடுகளுக்கு இருட்டு சாதகமாகத்தான் இருந்தது. உதடுகளுக்கு இருட்டைப்பற்றியோ, வெளிச்சத்தைப்பற்றிய கவலையே இல்லை. நான்கு உதடுகள் ஒன்றை ஒன்று ஒட்டி உறவாடிக்கொண்டிருந்தன.

சுகன்யாவின் மனதில் எழுந்த பயம் மட்டும் முழுமையாக விலகவில்லை. செல்வா அவளை வீட்டில் ட்ராப் செய்தபின்னும் அவள் மனதில் அந்த பயம் அவளைத் தொடர்ந்தது.

ஹாலில் உட்க்கார்ந்து கொண்டு, தன் வீட்டில் தான் டெல்லிக்குப் போகவேண்டிய விஷயத்தை சொன்னபோதும், உடலில் சிறிய நடுக்கத்துடனேயே அவள் பேசினாள்.

பேத்தி பேசிக்கொண்டிருந்தது அனைத்தும், பக்கத்து ரூமில் படுத்திருந்த சிவதாணுவின் காதில் தெளிவாக விழுந்து கொண்டிருந்தது.

“சிவ… சிவா…” சிவதாணு மனதுக்குள் முனகிக்கொண்டார். பக்கத்தில் படுத்திருந்த தன் மனைவி கனகாவின் மெலிந்த கரத்தை தன் கைகளில் எடுத்துக்கொண்டார். அன்புடன் அவள் கரத்தை மெல்ல வருடினார்.

4 Comments

  1. Waste of time

    1. Waste of time

  2. Next part ku waiting, very eager. ?

  3. சூப்பர்.அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க.கொஞ்சம் கதையில கள்ளக்காதல் இருந்தா நல்லாருக்கும்.

Comments are closed.