கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 50 18

மீனாவின் மெல்லிய மூங்கில் போன்ற கைக்கு ஏற்ற மாதிரி அழகான வாட்ச் ஒன்றை வாங்கிக்கொண்டார்கள். காலியாக இருந்த பேமிலி ரூமில் உட்க்கார்ந்து காஃபி குடித்தார்கள். பேரர் வருவதற்குள் ஒருவரை ஒருவர் வெறியுடன் முத்தமிட்டுக்கொண்டார்கள்.

ஒரு வாரத்திய மனஇறுக்கம் குறைந்தவர்களாக எதிரில் வருபவர்கள் முகம் தெரியாத இருட்டில் சுகன்யாவைத் தழுவியபடி கடற்கரை மணலில், கால்கள் பதிய பதிய நடந்தான் செல்வா.

***

“சுகு… சொல்லும்மா… என்ன பேசணும் உனக்கு..?”

சுகன்யா பதில் பேசாமல் அவனை இழுத்து தன் மடியில் கிடத்திக்கொண்டாள். அவன் கழுத்துக்கு கீழ் தன் கையை கொடுத்து தன் மார்பில் அவன் முகத்தை புதைத்துக்கொண்டு விசும்ப ஆரம்பித்தாள். செல்வா விக்கித்துப்போனான்.

“என்னம்மா சுகு… எதுக்கு இப்ப அழுவறே நீ?”

“எப்ப என் கழுத்துல தாலிக்கட்டப்போறே நீ?” சுகன்யாவின் சூடான கண்ணீர் அவன் கன்னத்தில் விழுந்தது.

செல்வா விருட்டென சுகன்யாவின் மடியிலிருந்து எழுந்தான். அவளைத் தன் மடியில் கிடத்தி அவள் உதடுகளைக் கவ்விக்கொண்டான். அவள் உதடுகள் அவன் வாய்க்குள் மெல்லத் துடித்துக்கொண்டிருந்தன. அவளுடைய இதழ்களின் துடிப்பு அடங்கும் வரை அவன் தன் உதடுகளின் அழுத்தத்தை குறைக்காமலிருந்தான்.

“சுகா.. என்னம்மா இது குழந்தை மாதிரி பிஹேவ் பண்றே?”

“என்னால முழுசா ஒரு வாரம் உன்கிட்ட பேசாம இருக்க முடியலே. நீ சீட்லே இருந்துகிட்டே இல்லேன்னு சொல்லி என்னை சாவடிச்சு சுண்ணாம்பா ஆக்கறே.”

“முடிஞ்சக்கதையை திரும்பவும் பேசாதேன்னு நான் சொல்றேன்..”

“சரி… நடக்க வேண்டியக் கதையை நான் சொல்றேன். இன்னும் இருபது நாள்லே உன்னை விட்டுட்டு நான் இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரம் போயே ஆகணும். இந்த நெனைப்பையே என்னாலத் தாங்கிக்க முடியலேடா.” சுகன்யா தன் கண்களைத் துடைத்துக்கொண்டு பேசினாள்.

“எங்கே போகப்போறே நீ…?”

செல்வாவின் குரலில் அவன் திடுக்கிட்டது தெளிவாகத் தெரிந்தது. தன்னை விட்டு அவள் தூரமாகப் போகவேண்டும் என்று சொன்னதுமே அவன் கரங்களின் இறுக்கம் சுகன்யாவின் முதுகில் அதிகமாகியது. அவளுக்கு மூச்சுத் திணறியது.

“இப்டியே என்னை இறுக்கி கட்டி, என் கழுத்தை அழுத்தி ஒரே தரமா கொன்னு அந்தக் கடல்லே தூக்கிப் போட்டுட்டு, ஒரு தரம் என் பேரைச்சொல்லி, உன் தலையை முழுகிடு… எனக்கு நிம்மதியாப் போயிடும்…” சுகன்யா முனகினாள்.

“ஏய்.. வாயை மூடுடி சனியனே… இந்த மாதிரி எதாவது இன்னொரு தரம் பேசினே… உன் பல்லுமேலேயே ஓங்கிப் போடுவேன்.. மேட்டரைச் சொல்லுடின்னா… இப்பல்லாம் பேசி பேசியே என்னைக் கொல்றே நீ..” செல்வா தன் பற்களை கடித்தான்.

“நான் டில்லிக்கு போயே ஆகணும்.. ஒரு மாசம் ட்ரெய்னிங் ப்ரீயட் இப்ப மூணு மாசமா ஆயிடிச்சி…” சுகன்யாவின் குரல் நடுக்கத்துடன் வந்தது.

“ஓ மை காட்…” செல்வா முணுமுணுத்தான்.

“மே மாசம் ஃப்ர்ஸ்ட் வீக்ல நான் அங்கே இருந்தாகணும்.. இன்னும் இருபது நாள்தான் பாக்கி இருக்கு… அதுக்குள்ள என் கழுத்துல நீ தாலியைக் கட்டிடு… எனக்கு அது போதும்… அந்த தாலியைப் பாத்துக்கிட்டேன் நான் பொழுதை ஓட்டிடுவேன்.” சுகன்யா அவன் கன்னத்தில் வெறியுடன் முத்தமிட ஆரம்பித்தாள்.

4 Comments

  1. Waste of time

    1. Waste of time

  2. Next part ku waiting, very eager. ?

  3. சூப்பர்.அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க.கொஞ்சம் கதையில கள்ளக்காதல் இருந்தா நல்லாருக்கும்.

Comments are closed.