என்ன பண்றது என் காதலனச்சே!! 2 153

இன்று காலை வீட்டில் நடந்த சண்டைக்கு பிறகு, கிஷோர் மேல் சௌமியா காட்டும் அன்பு பலமடங்கு அதிகரித்து இருந்ததை மற்றவர்கள் கவனிக்க தவறவில்லை.

கிஷோர் சாப்பிட்டு முடித்து விட்டு கிச்சனுக்கு சென்று கையை கழுவி விட்டு திரும்ப சௌமியா அவன் முன் முந்தானையை நீட்டிய படி நின்றாள். அவளை பார்த்து மகழ்ச்சியாக சிரித்துவிட்டு முந்தானையால் கையை துடைத்து விட்டு வாயையும் துடைத்து விட்டு நகர்ந்து செல்ல.

“டேய், நில்லுடா”

“என்ன அண்ணி?”

“நல்ல மூக்கு முட்ட சாப்பிட்டயே, உனக்காக தான் மாங்கு மாங்கு ன்னு சமைச்சேன். நல்லா இருக்கு ன்னு ஒரு வார்த்தை கூட சொல்லாம போற”

“அது இல்ல அண்ணி, எனக்கு இன்னும்” என்று அதற்கு மேல் சொல்லாமல் தலையை திருப்பி கொண்டான்.

“என்னடா!!! இன்னும் மலர் நினைப்பு போக மாட்டீங்குதா?”

“ஆமா அண்ணி”

“சரிடா!! உன்னையே நினச்சு பாசத்த காட்டுற என்னை நீ மதிக்காம அவளையே நினைச்சுட்டு இரு” என்று கோவமாக சொல்லிவிட்டு அவனை கடந்து சென்றாள்.

“நில்லுங்க அண்ணி” என்று அவள் கையை பிடித்து இழுத்தான்.

அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது வந்து மோதினாள். தன் மீது வந்தவள் மீண்டும் செல்லாதவாறு அவள் வெற்று இடுப்பில் கையை வைத்து பிடித்து கொண்டான்.

“விடுடா என்னை, நீ அவளை அழுதுட்டு இரு போ”

“சாரி அண்ணி”