என்ன பண்றது என் காதலனச்சே!! 2 153

சரி நான் ஒன்னும் பண்ணல, சும்மா உக்காந்து என் அண்ணி துணி துவைக்குற அழகை பாத்துகிட்டு இருக்கிறேன்.. இதை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க..

சரி என்னமோ பண்ணு.. என்று சொல்லிவிட்டு ஓரக்கண்ணால் அவனை பார்த்து ரசித்துக்கொண்டே துணிகளை துவைத்துக் கொண்டிருந்தாள்.

திடீரென வீட்டின் முன்பாக ஒரு கார் நிற்கும் சத்தம். அடுத்த நிமிடத்தில் கிஷோரின் அம்மா கொள்ளை புறத்துக்கு வந்து “கிஷோர், சௌமியா கொஞ்சம் வீட்டுக்குள்ள வாங்க. சீக்கிரம் வாங்க.. வீட்டுக்கு விருந்தாள் வந்துருக்காங்க..” என்று சொல்லிவிட்டு மறுபடியும் வேகமாக உள்ளே சென்றாள். அவள் முகத்தில் ஒரு சந்தோசம்..

கிஷோர் நீ உள்ள போ, நான் கை கால் கழுவிட்டு வரேன்.

கிஷோர் வீட்டிருக்குள்ளே வர, அங்கு ஹாலில் சோஃபாவில் தனது அப்பா அம்மா வயது மதிக்கத்தக்க தம்பதியினர் அமர்ந்திருந்தனர். கோல்ட் வாட்ச், இரண்டு கைகளில் மூன்று தங்க மோதிரம், கழுத்தில் பெரிய தங்க சங்கிலி, வெள்ளை வேஷ்டி சட்டை, தங்க வளையல்கள், கழுத்தில் இரண்டு தங்க சங்கிலி பட்டு சேலை என அவர்கள் தோரணையே பெரிய இடத்து மக்கள் என பறை சாற்றியது.. அவர்கள் அருகில் கணக்கு பிள்ளை தோரணத்தில் ஒருவர் நின்றிருந்தார். கிஷோருக்கு அவர்கள் யாரென்று கண்டறிய நொடி கூட தேவையில்லை.. இதான் என் அப்பா அம்மா என்று குறைந்தது நூறு முறையாவது, சோஃபாவில் அமர்ந்திருப்பவர்களின் முகத்தை மலர் தன் போனில் கிஷோருக்கு காட்டியிருக்கிறாள்.