என்ன பண்றது என் காதலனச்சே!! 2 154

மன்னிச்சுருங்க அண்ணி, என்னால முடியல, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணி மனசு. மலரை விட்டுட்டு நான் எப்படி இருக்குறது ன்னு தெரியல.

“தம்பி!!!” என்று அழைத்தவாறே தன் பூ போன்ற உள்ளங்கைகளை அவன் இரு கன்னங்களிலும் மெதுவாக பதித்து அவன் முகத்தை அவளை பார்க்கும் படி உயர்த்தி, அவனருகே நெருங்கி அவனை ஒட்டி அமர்ந்தாள். ஒரு தாய்ப்பசு தன் கன்னுகுட்டியை முட்டுவது போல, தன் நெற்றியை அவன் நெற்றியில் மெதுவாக முட்டினாள்.

“அண்ணி நான் இருக்கும் போது நீ இப்படி கஷ்டப்படலாமா தம்பி” (என்றவள் அவன் கன்னங்களில் தன் உள்ளங்கையால் சற்று அழுத்தம் கொடுத்து) “இதுக்காக தான் டா அந்த கடவுள் என்னை உன் பக்கத்துல விட்டு போயிருக்கான்”

இருவர் நெற்றியும் முட்டி கொண்டிருக்க, அவர்கள் கண்கள் நேருக்கு நேராக பார்த்து கொண்டிருந்தது. கிஷோரின் கண்களில் கண்ணீர் மெல்ல தென்பட, தான் களங்குவதை அவளிடம் காட்ட கூடாது என்று நினைத்த கிஷோர், தன் முகத்தை அவள் நெற்றியில் இருந்தும், கைகளில் இருந்தும் சரித்து அவள் கழுத்துடன் சேர்த்து அவள் தோளில் முகம் புதைத்தான். அவன் உதடுகள் அவள் கழுத்தில் புதைந்து இருந்தது.

அவள் கழுத்தில் புதைந்திருந்த அவன் உதடு அசைந்தது. “அண்ணி!! நீங்க என்கூடவே இருக்கணும் போல இருக்கு. என்ன விட்டு போக மாட்டீங்கள்ல அண்ணி”

அவன் தலையை இரு கைகளால் பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்து அவன் தலையில் முத்தமிட்டாள். “நீயே போக சொன்னாலும் போக மாட்டேன் டா தம்பி”

அறைக்குள்ளே வந்த சௌமியாவின் கணவன் கதிர் அவர்களை பார்த்து விட்டு “அவன் என்ன பச்சை குழந்தையா டி, இப்டி கட்டி பிடிச்சு கொஞ்சிகிட்டு இருக்குற, ச்சீ எந்திச்சு வா” என்றான்.

“பாருடி அங்க!!! கிஷோர் வேகமா போறான், பின்னாடியே மூத்த மருமக சௌமியா உம் போறா. இங்க பெரியவங்க ரெண்டு பேர் இருக்கோமே ஏதாச்சும் மதிக்குறாங்களா ன்னு பாரு”