என்ன பண்றது என் காதலனச்சே!! 2 154

அம்மாவிடம் சரி என்று சொல்லிவிட்டு கிஷோரின் அறையை திறந்த கதிர் அவர்களை பார்த்து விட்டு “அவன் என்ன பச்சை குழந்தையா டி, இப்டி கட்டி பிடிச்சு கொஞ்சிகிட்டு இருக்குற, ச்சீ எந்திச்சு வா” என்றான்.

ஏற்கனவே மலரிடம் அவன் வழிந்ததை கண்டு கோபத்தில் அவன் நெற்றியை பழுக்க வைத்தாலும் அவள் கோபம் குறையாமல் தான் இருந்தது. கதிரின் இந்த வார்த்தைகள் அவள் கோபத்தை இன்னும் மூட்டி விட்டது.

கிஷோரை கட்டி பிடித்தவாறே, பக்கத்தில் டேபிளில் இருந்து கண்ணாடி உருண்டையை எடுத்து கையில் உருட்டி கொண்டே “என்ன சொன்னிங்க திரும்ப சொல்லுங்க”

“அ.. அது.. பசிக்குது ம்மா, சாப்பிட ஏதாச்சும் வேணும்”

“போங்க.. வந்து வைக்குறேன்”

தன் கழுத்தில் புதைந்து இருந்த அவன் முகத்தை உயர்த்தி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். “தம்பி!! அண்ணி போய் சமைக்கிறேன், இன்னைக்கு உனக்கு ஏதாச்சும் ஸ்பெஷல் ஆ வேணுமா”

“உங்க பாசம் மட்டுமே போதும் அண்ணி”

அவனுடைய இன்னொரு கன்னத்திலும் முத்தம் கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

ஒரு மணி நேரம் மற்றும் முப்பது நிமிடங்கள் கடந்து செல்ல, சாப்பாடு தயார் ஆகி அனைவரும் ஹாலில் வந்து அமர்ந்தனர். என்னதான் கிஷோர் எதுவும் வேண்டாம் என்று சொன்னாலும், அவள் ஸ்பெஷல் ஆக கமகமவென மணக்க பிரியாணி செய்து அதனுடன் அதிரசம், லட்டு சில வகையான பலகாரங்கள் செய்து அசத்தி விட்டிருந்தாள்.

பேருக்கென ஆளுக்கொன்று வைத்து விட்டு மீதமுள்ள அனைத்தும் கிஷோரின் தட்டுக்கே சென்றது. இன்னும் வேண்டுமென்று கிஷோரின் தட்டில் இருந்து எடுக்க சென்ற கதிர், சௌமியா வின் கோவ பார்வைக்கு அஞ்சி கையை எடுத்துக் கொண்டான்.