என்ன பண்றது என் காதலனச்சே!! 2 153

கிஷோரின் அம்மாவும் அப்பாவும் வாயடைத்து போனார்கள், கிஷோருக்கு சொத்து பத்து இதையெல்லாம் தாண்டி மலர் தான் முக்கியமாக பட்டது, அவன் மனதில் இன்னும் மலர் மிகப்பெரிய இடத்தை பட்டா போட்டு வைத்திருந்தாள்..

சௌமியாவால் பதில் பேச முடியவில்லை, அவளுக்கு கிஷோரின் சிறப்பான வருங்காலத்திற்கு முட்டுக்கட்டை யாக இருந்து விடுவோமோ என்ற அச்சம் வந்தது..

சிங்காரம் அடுத்து ஒரு அதிர்ச்சியை தருவதற்கு மேலும் தொடர்ந்தார்.

மருமகன் மட்டும் நல்லா இருந்தா போதுமா, மருமகன் குடும்பம் நல்லா இருக்கணும் இல்லையா.. உன் மாப்ள சிவில் இன்ஜினியரிங் படிச்சுட்டு சின்னதா கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வச்சு நடத்துறாரு ல.. நல்ல வேலை தெரிஞ்சவர் தான்.. நல்ல விஷயம் தான் ஆனா கையில காசு சேர மாட்டிங்குதே..

கணக்குப்புள்ள என் சிநேகிதன் போன வாரம் ஏதோ சொன்னானே என்ன அது,

ஐயா, செந்தில் சாரை தான சொல்றீங்க.. புதுசா ரெஸ்டாரண்ட் கட்டணும் ன்னு சொல்லிட்டு இருந்தாரு..

ஆமா அது தான், அந்த காண்ட்ராக்ட் ஐ நம்ம கதிர் க்கு வாங்கி கொடுத்துருவோம்.. அந்த காண்ட்ராக்ட் மட்டும் முடிஞ்சதுன்னா இப்போ நீங்க இருக்குற மாதிரி நாலு வீடு கட்டலாம்.. அதே மாதிரி வரிசையா காண்ட்ராக்ட் நிறைய வாங்கி கொடுத்துருவோம். இதுக்கு பதிலா எனக்கு வேண்டியது ஒன்னே ஒன்னு தான்.. என் பொண்ணு முகத்துல சந்தோசம்..