இந்த வீட்டின் உரிமையாளர் 2 145

நான் இப்போவே கிளம்பனும் என்று சொல்லிட்டு என் ஹண்ட்பாக் திறந்து எவ்வளவு பணம் இருக்கிறது என்று முதன்முதலாய் பார்த்தேன். மிஞ்சி போனா மூன்றாயிரம் இருக்கும் நவீன் அத்து ஆன் கிரெடிட் கார்டு என்ன பாலன்ஸ் தெரியாது, இதை வச்சுக்கிட்டு ஹோசூர் வரை கூட போக முடியாதுன்னு தெரியும் ரோஷனிடம் கேட்கலாம் என்றால் ஏற்கனவே என் கணவர் அவனிடம் பணம் வாங்கி கொண்டிருக்கிறார் இப்போ நானும் கேட்பது நல்லா இருக்காதுன்னு தெரிந்தது. அதற்குள் வெளியே சென்று வந்த ரோஷன் நித்தியா இப்போதான் என் கசின் சிஸ்டர் கிட்டே பேசினேன். அவ வீடு உனக்கு நந்தி ஹில்ஸ் தெரியுமா அங்கே தான் இருக்கு அவ பெங்களூருக்கு ஏதோ வேலையா வந்து இருக்கா நைட் வீட்டிற்கு வந்துடுவா நீ வேணும்னா அவங்கே தங்கலாமே செலவு இல்லை யாராலும் கண்டு பிடிக்க முடியாது நானும் பெங்களூரில் இருப்பது போல தெரிந்தால் நவீனுக்கு என் மேலே கொஞ்சமும் சந்தேகம் வராது உனக்கு துணையாக ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்ல நான் கொஞ்சமும் யோசிக்காமல் சரி என்றேன். வீட்டை பூட்டிவிட்டு பெட்டியுடன் ரோஷன் காரில் ஏறினேன். ரோஷன் வழியில் ஒரு ஹோட்டலில் நிறுத்தி சாப்பாடு வாங்கிகிட்டான் பிறகு எங்கும் நிற்காமல் நேராக நந்தி ஹில்ஸ் வரை காரை ஓட்டினான். கார் மலை பாதையில் வளைவுகளை மெதுவாக கடந்து இறுதியாக ஒரு பெரிய வீட்டின் முன் நின்றது வீட்டின் வெளியே அழகிய பூ செடிகள் இருந்தன. சுற்றிலும் மரங்கள் காரை விட்டு இறங்கியதும் ஜில்லென்ற காற்று உடம்பை ஏதோ செய்தது. ரோஷன் அங்கிருந்த தொட்ட காரனை கூப்பிட்டு சாவி எடுத்து வா என்றான். அவன் கொண்டு வந்து குடுக்க இருவரும் உள்ளே சென்றோம். நான்கைந்து படுக்கை அறைகள் இருந்ததன அவற்றில் ரெண்டை மட்டும் திறந்து காட்டினான். ஒன்றில் உள்ளே காட்டி இதில் நீங்க தங்கி கொள்ளுங்க நான் எதிர் அறையில் தங்கறேன் என்றான். நானும் தனிப்பறவையாக மனம் சிறகடிக்க படுக்கையில் சாய்ந்தேன்.

வீட்டில் இருந்து கிளம்பும் போதே மொபைல் ஆப் செய்யாமலே சிம் கார்ட் எடுத்து விட்டதால் யார் என் நம்பரை முயற்சித்தாலும் ஆட் ஆப் ரேன்ஜ் என்ற செய்தி தான் கிடைக்கும். கிடைத்த விடுதலையால் மனம் லேசாக பறந்து கொண்டிருந்தது. அறையின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்து சென்று கதவை திறந்து பார்த்தேன். ரோஷன் நின்று கொண்டிருந்தான் கையில் ஒரு கப்பில் தேநீர் நான் ரோஷன் உங்க கசின் வந்துட்டாங்களா என்னை கூப்பிட்டு இருந்தா நானே வந்து இருப்பேன் அவங்களை சந்தித்தும் இருப்பேன் என்று சொல்ல ரோஷன் ஐயோ நித்தியா இது நானே போட்ட தேநீர் அவங்க இன்னும் வரவில்லை என்றான். என் கைகடிகாரத்தில் நேரம் பார்க்க மணி ஆறு நான் தேநீர் பருகியப்படி அவங்க எப்போ வருவாங்க நான் வேணும்னா அவங்களுக்கும் சேர்த்து இரவு உணவு தயார் செய்யட்டுமா என்று கேட்க அவன் அதெல்லாம் வேண்டாம் இங்கே ஒரு சமையல்காரி இருக்காங்க அவங்க இரவுக்கு உணவு செஞ்சு வச்சுட்டு போய்ட்டாங்க சரி வாங்க எவ்வளவு நேரம் தான் அறைக்குள்ளேயே இருப்பீங்க என்றான். எனக்கும் அவன் சொன்னது சரியாகவே பட அவன் கூட ஹாலுக்கு சென்றேன்.