இந்த வீட்டின் உரிமையாளர் 2 144

அப்பா போன்ல பேசிக்கொண்டிருக்கும் போது வாசல் மணி அடிக்க அப்போவும் ஒரு அல்ப ஆசை அது நவீன் தான் என்று. போன் எடுத்து கொண்டே வாசல் கதவை திறக்க ரோஷன் நின்று கொண்டிருந்தான் அவன் ஏதாவது பேசி விட போறான்னு பேசாதேன்னு சைகை செய்து போனில் சரிப்பா நான் தனியா ஊருக்கு தானே வர கூடாது நான் வரல என் ப்ரெண்ட் வீட்டுக்கு போறேன் அவர் போன் செஞ்சா நீங்க சமாளிச்சுக்கோங்க என்று கட் செய்து போன் ஆப் செய்தேன். ரோஷன் வாசலில் நின்றப்படி நான் கடைசியாக பேசியதை கேட்டு விட்டு நித்தியா என்ன நவீன் மறுபடியும் தூங்க ஆரம்பிச்சுட்டானா என்று கேட்க (எனக்கு தெரியாது ரோஷன் நவீனிடம் பேசி அவன் ஆபிசில் இருப்பதை தெரிந்து கொண்டு தான் வந்து இருக்கிறான் என்ற விஷயம்).

ரோஷன் அவர் கிளம்பி ஆபிசுக்கு சென்று விட்டார் என்று சொல்ல ரோஷன் நித்தியா போகும் போது ஸ்டாடியாக இருந்தானா என்று கேட்க நான் அதெல்லாம் நல்லாத்தான் இருந்தார் என்னமா நடிச்சார் நேற்று நடந்தது ஒண்ணுமே தெரியாதது போல சரி அவரே சொல்லட்டும்னு நானும் பேசவில்லை நீங்க தான் உதவி செஞ்சீங்கனு தெரிஞ்சா அதை காரணம் காட்டி சண்டை போட்டாலும் போடுவார்னு சொல்லவில்லை சரி நான் ஊருக்கு போறேன் அவரை கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க என்றேன். ரோஷன் சாரி நித்தியா மத்தவங்க பேசறதை கேட்கறது தப்பு தான் ஆனா நீங்க நான் பக்கத்திலே இருக்கும் போது அவ்வளவு சத்தமா கோபமா பேசும் போது கேட்காமல் இருக்க முடியவில்லை. சரி எந்த ஊருக்கு எந்த ப்ரெண்ட் வீட்டிற்கு போறீங்க அட்லீஸ்ட் எனக்காவது சொல்லிவிட்டு போங்க எதாவது அவசரம்னா தகவல் சொல்ல வசதி படும் என்றான். இருவரும் பேசியபடி ஹாலுக்கு வர அவனை உட்கார சொல்லிவிட்டு ரோஷன் எங்க வீட்டிலேயும் சொல்லிட்டேன் நவீன் கிட்டேயும் சொல்லிட்டேன் ஆனா அப்படி எந்த ப்ரெண்ட் வீட்டிற்கும் சென்று தங்கியது இல்லை என்றேன். ரோஷன் ஹே என்ன சொல்லறீங்க நித்தியா அப்போ நீங்க எல்லாம் நாடகம் என்று தெரிந்தா நவீனுக்கு இன்னும் தைரியம் வந்து விடுமே என்று என்னை உசுப்பேத்தினான்.

அவன் எனக்கு ஆதரவா பேசுவதாக நினைத்து ஆமாம் ரோஷன் நீங்க சொல்லறதும் சரி தான் நான் ஒண்ணு செய்யறேன் தமிழ்ல காதல் அப்படின்னு ஒரு படம் வந்தது அதில் ரெண்டு லவர்ஸ் சென்னைக்கு ஓடி வந்துடுவாங்க ஆனா தங்க இடம் தெரியாது அதனால் நாள் முழுக்க சென்னையில் சுற்றி விட்டு இரவு ஒரு ஊருக்கு பஸ் எடுத்து பயணம் செய்து பிறகு அதே பஸ்ஸில் மீண்டும் வருவார்கள் அது போல செய்யறேன் என்றேன். அவன் உரிமையுடன் தலையில் தட்டி நித்தியா அது ஆண் பெண் ரெண்டு பேரும் பயணம் செஞ்சாங்க நீங்க பெண் தனியா பயணம் செய்யும் போது அதுவும் இரவில் தெரியாத இடத்தில் இறங்கி நின்றால் அங்கே இருக்கிற பொறுக்கி பசங்க சும்மா இருப்பாங்களா அதெல்லாம் வேண்டாம் என்றான். அவன் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை என்று அப்போதான் யோசித்தேன். ஆனால் ஒரு நாளாவது வெளியே போகணும் நவீன் என்னை தேடி அலையணும்னு வைராகியமும் ஏற்ப்பட்டது.