வாசமான ஜாதிமல்லி End 22

“அப்போது தான் என் மண்டைக்கு உரைக்கின்ற மாதிரிi சொன்னாள். இப்படி வெளிப்படையாக செய்ததும் கோபம் வருதே, நீங்க செஞ்சதுக்கு அவருக்கு என்ன வரணும் என்று கண்டபடி திட்டினாள்.”

“பிறகு தான் என் நடத்தையை பற்றி உண்மையில் யோசிக்க துவங்கினேன். என் அப்பாவிடம் அகப்பட்ட போது கூட என் வருத்தும், அகப்பட்டுட்டுமே என்று அதிகம் இருந்தது. குடும்பத்தில் வெறுப்பு விருப்படி நடந்துட்டும்மே என்று இருந்தது. உன்னிடம் மன்னிப்பை கேட்டால் கூட, நீ அனுபவித்த உண்மையான வேதனை எனக்கு புரியவில்லை. இப்போது நான் அதே வேதனை பெரும் போது தான் உன்னை எப்படி எல்லாம் கொடுமை படுத்திட்டேன் என்று புரிந்தது. இப்போது உண்மையிலயே உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்.”

“நடந்தது நடந்து போச்சி, இனி அதை கிலுருவதில் பயனில்லை, விட்டுடு,” என்றான் சரவணன்.

“உன் குடும்ப வாழ்க்கையை சீரழித்ததுக்கு எனக்கு மன்னிப்பே இல்லை, அனால் ஒன்னு, உன் குழந்தையை என் குழந்தை போல வளர்ப்பேன், இது சத்தியம்.”

பிரபுவும் கோமதியும் ஒரு மணி நேரம் அங்கேயே கழித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினர். சரவணனும் மீராவும் வீட்டு வாசலில் நின்று அவர்கள் விடைபெறுவதை பார்த்தபடி இருந்தார்கள். அந்த நேரத்தில் சரவணனின் கை தற்செயலாக மீராவின் கையைத் தொட்டது. மீரா வழக்கம்போல கையை நகர்த்தவில்லை. சரவணன் ஆச்சரியப்பட்டான். அவன் கையை மீண்டும் நகர்த்தினான், அவன் உள்ளங்கையின் பின்புறம் மீண்டும் அவள் உள்ளங்கையின் பின்புறத்தைத் தொட்டது. மீராவின் கை இன்னும் அப்படியே இருந்தது. சரவணன் மெதுவாக விரல்களை சற்றி அவள் விரல்களைப் பற்றிக்கொண்டான். மீராவின் சுவாசம் ஒரு கணம் நின்றுவிட்டது. அவள் தயங்கினாள் ஆனால் மெதுவாக அவன் விரல்களுடன் அவள் விரல்களை மூடினாள்.

சரவணனுக்கு மகிழ்ச்சி அவன் இதயத்தில் பொங்கியது. அவன் பழைய மீராவை மீட்டெடுப்பதற்கு எவ்வளவோ போராடி இருக்கான். அது மிகவும் கடினமான ஒரு பாதையாக இருந்தது. பல நாட்களில் மனம் தளர்ந்து போயிருக்கான். அது ஒரு நீண்ட கடினமான பயணமாக இருந்தது. முதல் முறையாக இருட்டில் ஒரு சிறிய வெளிச்சம் தெரிந்தது. இன்னும் மிக நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. பல தடைகள் கடந்து செல்ல வேண்டும். நாட்கள் கடினமாக இருக்கும், ஆனால் இப்போது அவன் அதை நம்பிக்கையுடன் எதிர்நோக்க முடிந்தது. இறுதியாக அவன் இழந்த இனிய குடும்ப வாழ்கை திரும்பப் பெற முடியும் என்று மனநிறைவுடன் இருந்தான்.

முற்றும்