நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – End 34

மாலையில் அவனுக்கு காபி கொடுத்தாள்.
ஒரு மிடறு விழுங்கியவன்..
”காபியா… இது..? தூ..!!” என்று துப்பினான்.

கொஞ்சம் முறைப்பாக அவனைக் கேட்டாள்.
”அப்றம் என்னவாம்..?”

முகம் சுளித்தான் ”கழுதை மல்லு மாதிரி இருக்கு..”

”ஓ…! அப்ப கழுத மல்லுகூட குடிச்சாச்சா…?” என்று கிண்டலாகச் சிரித்தாள்.

அடுத்த நொடி… பளாரென அவள் கன்னத்தில் விழுந்தது. ஒரு அறை..!!
இதை எதிர்பார்க்காத உமா கண்கள் வெறிக்க.. அவனை முறைத்தாள்.

”பல்ல பேத்துருவேன்..! கண்டாரவோலி…”

” நீதான சொன்ன.. கழுதை மல்லுனு..”

”பின்ன… காபியாடி.. அது..! தேவடியா…?” அவன் வார்த்தை தடிக்க…

5

அவளது ஆத்திரம்.. அதிகமானது.
”தேவடியானு தெரிஞ்சுதான.. வந்த. ..?” என்று சீறினாள்.

மறுபடி அறைந்தான். ”ரொம்பத்தான் வாய் நீளுது..! கொன்றுவேன்.. தேவடியாக்கண்டாரோலி..!!”

”கொல்லு.. கொல்லு…” ஹிஸ்டீரியா வந்தவள் போலானாள்.
வாய் சண்டை முற்றி… கைச்சண்டையானது..! நிறைய அடிவாங்கிய உமா.. சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து அழத்தொடங்கினாள்..!!

☉ ☉ ☉

தாமு வீடு வந்தபோது.. உமா மிகவும் கவலையாக இருந்தாள்.
”ஏன்க்கா.. ஒடம்பு சரியில்லயா..?” என்று கேட்டான்.

மறுத்து தலையசைத்தாள் உமா.

அவளருகே உட்கார்ந்தான்.
”அப்றம் ஏன் டல்லாருக்க..?”

மார்பகம் விம்மித் தணிய.. பெருமூச்சு விட்டாள்.
”எனக்கு கவலையா இருக்கடா..”

”என்ன கவலை..?”

”இந்தாளு.. என்னை விட்டு போயிடுவான் போலருக்கு..”

”ஏன்..?”

”இப்பெல்லாம் அடிக்கடி சண்டை வருது..” என்றாள்.

அவளையே பார்த்தான். அவளது தோற்றம் மாறியிருப்பது மிக நன்றாகவே தெரிந்தது..!
கண்களில் நீர் தழும்ப.. அவனைப் பார்த்தாள்.
”நான் என்னடா.. பண்ணுவேன்…?”

அவள் தோளில் கை வைத்தான்.
”இன்னிக்கும் சண்டையா..?”

”ம்…”

”தெரியாமத்தான் கேக்கறேன்.. அப்படி என்னதான் சண்டை போடுவீங்க..?”

”அந்தாளுதான்டா.. நான் .என்ன செஞ்சாலும் குத்தம் சொல்றான்..! அதனாலதான் சண்டையே வருது..”

”சரி.. நீதான் விட்டு குடுத்து போறது..?”

”நான் விட்டுக்குடுத்து தான்டா.. போறேன். ஆனா அப்பயும் சண்டை வருது.!!” என்று காபியால் வந்த சண்டையைச் சொன்னாள்.

அதைக்கேட்ட தாமு சிரித்து ”உனக்கு திமிருதான..?” என்றான்.

அவனைப் பார்த்தாள். ”என்ன..திமிரு..?”

தாமு ”கழுதை மல்லுன்னு ஒரு பேச்சுக்கு சொல்றதுதான்..! அதுக்காக.. நீ.. அப்படி கேட்டா.. கோபம் வராம.. என்ன பண்ணும்…?” என்றான்.

”இல்லடா.. அதெல்லாம் பெரிய.. காரணமில்ல..!!” என்றாள்.

”அப்றம் என்ன..?”

”அந்தாளுக்கு நான்.. அழுத்துப் போயிட்டேனு தோணுது..! அதுமில்லாம நான் மாசமா இருக்கறது.. அவனுக்கு புடிக்கவே இல்ல. கலச்சிருனு சொன்னான். நான்தான் முடியாதுனு புடிவாதமா இருந்தேன்..! அதான் என்னைக்கண்டாலே ஆகறதில்ல.. அவனுக்கு..”

அவனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

ஒரு பெருமூச்சு விட்டு.. அவளே சொன்னாள்.
”என் தலைல என்ன எழுதிருக்கோ.. அதுதான் நடக்கும்..!!”

எதுவும் பேசாமல்.. எழுந்து வெளியே போனான் தாமு.
நேராக கீர்த்தனா வீட்டுக்குத்தான் போனான்.
கதவைத் தட்டினான்.
கதவைத் திறந்த கீர்த்தனா கையில் காபியுடன் நின்றிருந்தாள். வீட்டுக்குள் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
”வா…வா. ” என்றாள்.

”என்னது கைல..?” என கேட்டுக்கொண்டே உள்ளே போனான். டிவி சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது. டிவியில்..
”அழகிய அசுரா.. அழகிய அசுரா.. அத்து மீற.. ஆசையில்லையா..?” பாடல் இறைச்சலாகப் பாடிக்கொண்டிருந்தது.

”காபி..” என்றாள். சேரை அவனிடம் நகர்த்திப் போட்டாள் ”உக்காரு..! காபி கொண்டு வரேன்..” என உள்ளே போனாள்.

ரிமோட்டை எடுத்து டிவி வால்யூமைக் குறைத்தான் தாமு.

காபியோடு வந்தாள் கீர்த்தனா.

1 Comment

  1. இன்பமும், வருத்தமுமான, எதார்த்தம் நிறைந்த கதை.. அருமை…

Comments are closed.