நான் பண்றேன்.. நல்லாருக்கும்.. என்ஜாய் பண்ணு..! 72

நான் பட்டென்று சொல்லிவிட்டு அவளை நிமிர்ந்து பார்க்க, அவள் என் முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். ஓரிரு வினாடிகள். அப்புறம் மூக்கை ஒரு மாதிரி உறிஞ்சிக் கொண்டு, அந்த பாக்சை என்னிடம் நீட்டினாள்.

“திஸ் இஸ் ஃபார் யு..!!”

“என்ன இது..?”

“மை கிஃப்ட்..!!”

“என்ன இருக்கு இதுக்குள்ள..?”

“பிரிச்சு பாரு..!!”

நான் அவளுடைய முகத்தை பார்த்தவாறே அந்த பாக்சை பொறுமையாக பிரித்தேன். உள்ளே..!! அந்த சிலை இருந்தது..!! தாஜ்மஹால் சிலை..!! பளிங்கினால் செய்யப்பட்ட, அங்கங்கே கோல்ட் கலரில் பார்டரோடு..!! பளபளப்பாக ஜொலித்தது அந்த காதல் சின்னம்..!! அதை பார்த்ததுமே எனக்கு கண்ணில் நீர் வர ஆரம்பித்தது. நீர் வழியும் கண்களோடே, அவளை நிமிர்ந்து பார்க்க, அவள் காதலும், ஏக்கமும், பரிதாபமும் கலந்த குரலில் கேட்டாள்.

“இது இண்டியால இருக்குற ஒரு உலக அதிசயம்.. இல்லை அசோக்..? ஒரு காதலன் தன் காதலிக்கு கட்டுன சமாதி.. இல்லை அசோக்..? அதேமாதிரி.. நீயும் எனக்கு சமாதி கட்டிட்டு போற.. இல்லை அசோக்..?”

என்னால் அதற்குமேலும், பொங்கிவந்த என் காதலை கட்டுப்படுத்த முடியவில்லை. எமியை பட்டென்று இழுத்து, என் மார்போடு அணைத்துக் கொண்டேன். அவளும் அதற்காகத்தான் காத்திருந்தது போல, எனக்குள் புதைந்து கொண்டாள். எங்களுக்கு இடையில் காற்று கூட புகக்கூடாது, என்று நினைத்தாளோ என்னவோ..? அந்த அளவுக்கு நெருக்கமாக அணைத்துக் கொண்டாள்.

எமியின் மார்புப்பந்துகள் என் நெஞ்சில் அழுந்தி நசுங்கின. அவளுடைய கைகள் என் முதுகை அழுத்தி பிசைந்தன. அவள் விட்ட மூச்சுக்காற்று, என் கழுத்தில் அனலாக மோதியது. அவள் கண்களில் இருந்து வடிந்த நீர், சூடாக என் மார்பை நனைத்தது. எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும், எனது கண்களும் கண்ணீரை வடித்தன. ஒரு நிமிடத்துக்கும் மேலாக நாங்கள் எதுவுமே பேசாமல், அப்படியே அணைத்தபடி நின்றிருந்தோம். அப்புறம் நான் அவளுடைய முகத்தை மெல்ல நிமிர்த்தி, அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டுவிட்டு சொன்னேன்.

“என்ன வார்த்தை சொல்லிட்ட எமி..? நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு உனக்கு தெரியாது..!!”

“இல்லை.. தெரியும்..!!”

“எல்லாம்.. நீ கஷ்டப்படக் கூடாதுன்னுதான் எமி..!!”

“யா.. ஐ அண்டர்ஸ்டாண்ட்..!!”

“எத்தனை வருஷம் ஆனாலும்.. என்னாலயும் உன்னை மறக்க முடியாது எமி..!!”

நான் சொன்னதைக் கேட்டு எமியின் முகம் பரவசமானது. அழகாக ஒரு புன்னகை பூத்தாள். அவளுடைய கண்ணில் இருந்து முணுக்கென்று ஒரு துளி நீர் வந்து எட்டிப் பார்த்தது. உதடுகளை அழுத்தி கடித்துக் கொண்டாள். மீண்டும் என் மார்புக்குள் முகம் புதைத்துக் கொண்டாள். நானும் அவளை இன்னும் இறுக்கிக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டேன். சுகமாக இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து, எமி தன் முகத்தை நிமிர்த்தியவாறு என்னை அழைத்தாள்.

“அசோக்..!!”

“ம்ம்..”

“நான் ஒன்னு கேக்கலாமா..?”