நான் பண்றேன்.. நல்லாருக்கும்.. என்ஜாய் பண்ணு..! 72

“இட்ஸ் ஓகே அசோக்..!!”

அதற்கப்புறமும் அது காதலில்லை என்று என்னை நானே எப்படி ஏமாற்றிக் கொள்ள முடியும்..? நீங்களே சொல்லுங்கள்..!! எனக்கு மனசுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது மாதிரி படபடவென இருந்தது. உண்மைதானா..? உண்மையிலேயே என்னை காதலிக்கிறாளா..? ஆனால் எனக்கு சந்தோஷத்தை விட, வேறு மாதிரியான சிந்தனைகள்தான் அதிகமாக இருந்தன. அந்த காதலுக்கு நான் தகுதியானவன்தானா என்ற கவலை ஒருபுறம் இருக்க, இந்த காதலினால் எமி எப்படி கஷ்டப்படுவாளோ என்ற வேதனைதான் அதிகமாக இருந்தது. என்ன கஷ்டப்படுவாள் என்று கேட்கிறீர்களா..? இன்று காஃபி ஷாப்பில் அதைப்பற்றித்தான் பேசப் போகிறோம்..!! வாருங்கள்..!!

எங்கள் ஆபீஸ் இருக்கும் பில்டிங்கின் கீழ்த்தளத்திலேயே ஒரு ஸ்டார்பக்ஸ் காஃபி ஹவுஸ் இருக்கிறது. வழக்கமாக அங்குதான் செல்லுவோம். இன்றும் அங்கேதான். ஆளுக்கொரு காஃபி வாங்கிகொண்டோம். அங்கே கிடந்த டேபிள் ஒன்றில் அமரப் போனோம்.

‘அவள் எனக்கு அருகே உட்காரக்கூடாது.. எதிரே உட்காரட்டும்..’ என்பதற்காகவே, இரண்டு பேர் அமரும் அந்த சீட்டில் சென்டராக, நான் சென்று அமர்ந்தேன். ஆனால் எமி என் எதிரே காலியாக கிடந்த சீட்டில் அமராமல், என்னை இடித்து நெருக்கிக்கொண்டு அமர்ந்தாள். வேறு வழியில்லாமல் நான் சுவரோரமாக நகர்ந்துகொள்ள, அவளும் வசதியாக உட்கார்ந்து கொண்டாள்.

கொஞ்ச நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. அமைதியாக காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தோம். சாலையில் செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்புறம் எமிதான் மெல்ல ஆரம்பித்தாள்.

“ஸோ.. நெக்ஸ்ட் வீக் இண்டியா போற..?”

“யா..!!”

“சந்தோஷமா இருக்கா..?”

“இல்லாம இருக்குமா..?”

நான் சொன்னதும் எமி பேசுவதை சற்று நிறுத்தினாள். முகத்தை திருப்பி, என் கண்களை கூர்மையாக பார்த்து கேட்டாள்.

“நான் எப்போ இண்டியா வரட்டும் அசோக்..?”

“நீ எப்போவேனா வரலாம் எமி.. அப்படி வந்தா.. கண்டிப்பா நீ என் வீட்லதான் தங்கணும்..!! நான் உனக்கு இந்தியாவை சுத்திக் காட்டுறேன்..!! ஓகேவா..?” நான் அப்படி கேஷுவலாக சொன்னதும் எமி எரிச்சலானாள்.

“வெளையாடாத அசோக், ப்ளீஸ்..!! நான் எந்த அர்த்தத்துல கேக்குறேன்னு உனக்கு புரியலையா..?”

“எ..எந்த அர்த்தத்துல..?” அர்த்தம் புரிந்தே நான் நடித்தேன்.

“நடிக்காத..!! ஓகே.. நீ இன்னும் எதுக்கு தயங்குறேன்னு எனக்கு புரியலை.. பட்.. எனக்கு எந்த தயக்கமும் இல்லை.. இதை சொல்றதுக்கு வெக்கமும் இல்லை..!! நானே சொல்றேன்..”

என்றவள், அவள் சொல்லிவிடக்கூடாது என்று நான் பதறிக்கொண்டு இருக்கும்போதே, என் கண்களை காதலாக பார்த்தபடி சொன்னாள்.

“ஐ லவ் யூ அசோக்.. ஐ லவ் யூ ஸோ மச்..!! ஐ வான்ட் டு பி வித் யூ..!! ஆல்வேஸ்..!!”

சொல்லியே விட்டாள்..!! அவள் சொன்னபோது எனக்கு அழுகை வரும்போல் இருந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன். இது நேரக்கூடாது என்பதற்காகத்தான் ஒருவாரமாக அவளை அவாய்ட் செய்துகொண்டே இருந்தேன். இன்று வசமாக சிக்கிக் கொண்டேன்.

“என்ன அசோக்.. எதுவுமே சொல்ல மாட்டேன்ற..?” எமி பொறுமை இல்லாமல் கேட்டாள்.

“எ..எனக்கு என்ன சொல்றதுன்னே தெ..தெரியலை எமி..”

“ஏதாவது சொல்லு.. என்னை புடிச்சிருக்கான்னு சொல்லு..”

“உன்னை புடிக்கலைன்னு ஏதாவது பைத்தியக்காரன்தான் சொல்லுவான்..!!”

நான் அப்படி சொன்னதும், இத்தனை நேரம் குழப்பமாய் இருந்த எமியின் முகம் பட்டென்று பிரகாசமானது. அவளுடைய வலது கையை நகர்த்தி, என் இடதுகை மீது வைத்துக் கொண்டாள். விரல்களை கோர்த்துக் கொண்டாள். லேசாக நெரித்தாள்.

“அப்புறம் என்ன அசோக்.. எனக்கு உன்னை புடிச்சிருக்கு.. உனக்கு என்னை புடிச்சிருக்கு.. அப்புறம் ஏன் தயங்குற..?”

அவள் ஆசையாக கேட்க, நான் என் கையை அவளுடைய கைக்குள் இருந்து உருவிக்கொண்டேன். மெல்லிய குரலில் சொன்னேன்.

“சொன்னா உனக்கு புரியாது எமி..”