நான் பண்றேன்.. நல்லாருக்கும்.. என்ஜாய் பண்ணு..! 73

அந்த பெரிய ஹாலில், சுற்றிலும் வெள்ளைக்காரர்கள். எல்லோருமே ஜோடியாகவோ, க்ரூப்பாகவோ நின்று, புரியாத ஸ்லாங்கில் பேசிக்கொண்டிருந்தார்கள். கையில் வைத்திருந்த தட்டில் ‘பஃபே’ ஐட்டங்களை அள்ளிப்போட்டுக்கொண்டு, அதை கடித்தவாறே, ஸ்டைலாக கதைத்துக் கொண்டிருந்தார்கள். என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை. அந்தக்கூட்டத்தில் நான் தனித்து விடப்பட்டதை தெளிவாக உணர்ந்தேன்.

‘உணவை எடுத்து சாப்பிடலாமா.. சாப்பிட்டால் யாராவது திட்டுவார்களோ..’ என நான் திருதிருவென விழித்தவாறு நின்றிருந்த போதுதான், தட்டு நிறைய உணவுப் பண்டங்களோடு அந்தக்கை என் முன் நீண்டது. என் எமியின் கை..!! திரும்பினால் முகம் நிறைய புன்னகையோடு, கவுன் அணிந்த தேவதையாக இவள் நின்றிருந்தாள்.

“ஹேவ் ஸம் புட்..!!”

என்று கன்னத்தில் குழி விழ அழகாக சிரித்தாள். நான் தயங்கி தயங்கி அந்த பிளேட்டை வாங்கிக் கொண்டேன். உடனே அவள் கொஞ்சமும் புன்னகை குறையாமல், தன் கையை நீட்டினாள்.

“ஐ ஆம் எமி..!! நீதான இன்டியால இருந்து.. புதுசா டீம்ல ஜாயின் பண்ணிருக்கிற அசோக்..?”

“எ..எஸ்..!!” என்றவாறு நானும் கை நீட்டி குலுக்கினேன்.

“நானும் உன் டீம்தான்.. நைஸ் டூ ஹேவ் யூ ஹியர்..!! வெல்கம் டூ யூ.எஸ்…!!”

“தே..தேங்க்ஸ்..!!”

“ரொம்ப நேரமா தனியா நின்னுட்டு இருந்த.. யூ வான்ட் எ கம்பெனி..?”

“யா..!!”

“ஓகே.. நான் கம்பெனி தர்றேன்.. சொல்லு..!! இன்டியால எந்த பார்ட் நீ..?”

“ஐ.. ஐ ஆம் ஃப்ரம் சென்னை..!!”

“ஓ..!! தி பாப்புலர் ரஜினிக்காந்த்.. அவர் ஊரா..?” என மிகவும் சகஜமாக கேட்டாள்.

அப்படித்தான் எமி எனக்கு அறிமுகம் ஆனாள். யாராவது ‘சாப்பிடுகிறாயா..?’ என்று ஒரு வார்த்தை கேட்க மாட்டார்களா என நான் தவித்துக் கொண்டிருந்தபோதுதான், சாப்பாடும் தந்து, பார்ட்டி முடியும் வரை, புன்னகை முகம் சிறிதும் மாறாமல், என்னுடன் பேசிக்கொண்டிருந்தாள். அடுத்த நாள் லஞ்ச் டைமில், என் இருக்கைக்கே வந்து, ‘யூ வான்ட் கம்பெனி..?’ என்று கன்னத்தில் குழி விழ கேட்டாள்.

எனக்கு பார்த்த மாத்திரத்திலேயே எமியை பிடித்து விட்டது. எந்த நேரமும் முகத்தில் சிரிப்போடு திரியும் அவளை, யாருக்குத்தான் பிடிக்காது..? பெண் என்றால் பெண்.. அவள் மாதிரி ஒரு பெண்ணை நான் பார்த்ததே இல்லை..!! அவளெல்லாம் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் பிறந்திருக்க வேண்டியவள். தாவணி அணிந்துகொண்டு, தலை குனிய நடந்து கொண்டு, கோவில், குளம் என்று திரிய வேண்டியவள். தவறிப்போய் அமெரிக்காவில் பிறந்து விட்டாள். என்ன ஒரு அடக்கம்.. என்ன ஒரு வெகுளித்தனம்.. என்ன ஒரு நல்ல உள்ளம்..? அமேசிங் கேரக்டர்..!!

எமி இன்னும் எனக்கருகே காத்துக் கொண்டிருந்தாள். எனக்கும் ரொம்ப நேரம் மெயில் டைப் செய்வது மாதிரி நடிக்க முடியவில்லை. மெயிலை அனுப்பிவிட்டு, ஐந்து நிமிடத்திலேயே எழுந்து கொண்டேன். எமியிடம் திரும்பி கேட்டேன்.

“போலாமா எமி..?”

“ஓகே..!!”

அவளும் எழுந்துகொள்ள, இருவரும் எங்கள் கேபினை விட்டு வெளியே வந்தோம். ஆபீசின் ஒரு மூலையில் இருந்த லிஃப்ட்டை நோக்கி நடந்தோம். லிஃப்ட் பட்டனை அழுத்திவிட்டு, அது வருவதற்காக காத்திருந்தோம். நான் ஓரக்கண்ணால் எமியை பார்த்தேன். அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல், லிஃப்ட் இன்டிகேட்டரையே பார்த்துக் கொண்டிருந்தாள். வானத்தில் இருந்து குதித்த தேவதை மாதிரி இருக்கிறாள்..!! என்னைப் போய் காதலிக்கிறாளே..? அப்படி என்ன இருக்கிறது என்னிடம்..? என் மூளை தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தது..!!

அந்த முதல் அறிமுகத்துக்கு பிறகு, பார்க்கும்போதெல்லாம் எமி ‘ஹாய்..!!’ சொல்லி அழகாக சிரிப்பாள். காலை, மாலை எனஇருமுறை காஃபி.. மதியம் லஞ்ச்.. இருவரும் ஒன்றாகத்தான் செல்வோம். இந்தியாவை பற்றி, நம் பழக்க வழக்கங்கள் பற்றி மிக ஆர்வமாக கேட்டு தெரிந்து கொள்வாள். என்னைப் பற்றியும், என் குடும்பத்தை பற்றியும் வாஞ்சையாக விசாரிப்பாள். நான் அடிக்கும் சின்ன ஜோக்குக்கு கூட, எளிறுகள் தெரிய, கலகலவென சிரிப்பாள்.

எமியை பற்றியும் கொஞ்ச நாட்களிலேயே தெரிந்து கொள்ள முடிந்தது. எமிக்கு அம்மா மட்டும்தான். அப்பா டைவர்ஸ் வாங்கி பிரிந்து சென்று விட்டார். அம்மாவும் இப்போது அவளுடன் இல்லை. அவளுடைய அம்மா பாஸ்டனில் ஒரு லா ஃபர்மில் வேலை செய்கிறாள். இவள் இங்கே ந்யூயார்க்கில் சுயமாக சம்பாதிக்கிறாள். தனியாக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறாள். அவளுடைய அங்கிள் ஒருத்தர் இதே ந்யூயார்க்கில் இருப்பதாக சொன்னாள். அவரை மட்டும் அவ்வப்போது சென்று பார்த்து வருவாள். மற்றபடி யாருடனும் நெருக்கம் கிடையாது.

எனக்கும், எமிக்கும் ஒரு இனிய நட்பு மலர ஆரம்பித்து ஒரு மாதம் ஆன சமயத்தில்தான், அந்த சம்பவம் நடந்தது. எங்கள் நட்பு தடம் மாற ஆரம்பித்த சம்பவம். இன்று நான் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிப்பதற்கு பிள்ளையார் சுழி போட்ட அந்த சம்பவம்.

வழக்கமாக பதினோரு மணிக்கெல்லாம் நானும் எமியும் காஃபி சாப்பிட செல்வோம். அவளே என்னுடைய இருப்பிடத்துக்கு வந்து விடுவாள். அன்று அவள் வரவில்லை. மெசெஞ்சரில் பிங் செய்தபோது ரிப்ளை இல்லை. எனக்கு குழப்பமாக இருந்தது. நானே எழுந்து அவளுடைய கேபினுக்கு சென்றேன். உள்ளே எமி, தன் கம்ப்யூட்டர் டேபிளில் தலை கவிழ்த்து படுத்திருந்தாள். நான் பதறிப் போனேன்.