மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 3 81

ஓகே சார் …

( இதையும் சொல்லிக்கிறேன் ஷாமும் கத்திரும் இப்ப என்னை மேடம்னு

சொல்றதில்லை ஆனா நான் ஷாம சார்னு தான் கூப்பிடுறேன் மத்தபடி கதிர்

வெறும் கதிர் ஆகிட்டாரு )

என்ன மல்லிகா நீங்க ஒன்னும் சொல்லலை …

என் ஹஸ்பெண்ட கேக்கணும் !

என்ன மல்லிகா நான் என்ன உங்களை ஊட்டிக்கு டூரா கூப்பிட்டேன் புருஷன்

கிட்ட பர்மிஷன் கேக்கனும்னு சொல்றீங்க …

ஜஸ்ட் சொல்லிட்டு வாங்க ….

சரி சார் சொல்லிட்டு சொல்றேன் !

ஓகே நாளைக்கு காலைல ஒரு பதினோரு மணிக்கு ஆபிஸ் வந்துடுங்க நான் உங்களை
கார்ல பிக் அப் பண்ணிக்கிறேன் !

அன்றிரவு என் புருஷன் வருவார்னு காத்திருந்தேன் !

வழக்கம் போல அவர் நைட்டு பத்து மணிக்கு வர …

சொல்லிடலாமான்னு யோசிச்சேன் …

இப்படி சொல்லலாமா ….நான் மெல்ல அவரிடம் விஷயத்தை ஆரம்பித்தேன் !

ஏன்னா இதுவரைக்கும் நான் அவர்கிட்ட இந்த மாதிரி எதுவுமே கேட்டதில்லை!!!

என்னங்க நாளைக்கு எங்க ஓனர் வீட்ல கிறிஸ்மஸ் கொண்டாடுறாங்க …

அதுக்கு என்னவாம் ?

அதுக்கு ஒரு சின்ன பார்ட்டி வைக்கிறாங்களாம் !

அதுக்கு நான் என் ஆபிஸ் பிரண்ட் ரெண்டு பேரும் போறோம்ங்க ….

என்னது பார்ட்டியா ஓனர் வீட்லையா அதுவும் ஆபிஸ் பிரண்ட் கூடவா என்ன
மல்லி ஒன்னும் புரியலையா ?

இல்லைங்க ஜஸ்ட் …

ஹே நிறுத்து நீ இனிமே வேலைக்கே போக வேணாம் !

அய்யோ அப்டிலாம் சொல்லிட்டா அவளோதான் அப்புறம் ஜென்மத்துக்கும் இந்த
வீட்லே இருக்க வேண்டியது தான் ! வேணாம் மல்லி இப்போதைக்கு பூசனிக்காய
சோத்துல மறைச்சிடு ….

நான் ஒரு முடிவுக்கு வந்தேன் ! இது தான் நான் சறுக்கிய முதல் இடம் !

புருஷன்கிட்ட சொல்லாம ஒரு இடத்துக்கு போனா … போன இடத்துல எதுனா
பிரச்சனை வந்தா எப்படி சமாளிப்ப … புருஷன் கேட்டா என்ன சொல்லுவ…
திடீர்னு ஒரு ஆபத்துன்னா எப்புடி புருஷன கூப்பிடுவ…

இது எதையுமே யோசிக்காம ஷாம் கூப்பிட்ட பார்ட்டிக்கு போகணும்னு
முடிவெடுத்தது தான் நான் சறுக்கிய இடம் !!!

ஷாம் முதல் முதலா கூப்பிட்ருக்கார் அதுக்கு போகாம இருக்கலாமா அதான்

மறைச்சிட்டேன்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன் !!!

அதான் அன்னைக்கு தமிழ் கூட அவரே அனுப்புனாரே !

அப்புறமும் என்ன ?

அது அவரோட ஃபிரண்டு இப்ப எதுக்கு தேவை இல்லாம பிரச்சனைய கிளப்பனும் ….

அதான் பாரட்டிய மறைத்துவிட்டேன் !

2 Comments

  1. Super story keep it up

Comments are closed.