செரி நான் விட்டு விடுகிறேன், என் ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள், என்னுடைய குழந்தை உங்களிடம் இதே போல தான் கதறினாலா என்றேன், அமைதியாக ஆமாம் என்றார்கள். அந்த கதறலை காது கொடுத்து கேட்டிருந்தாள், நீங்கள் இப்பொழுது கதற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்காதே என்றேன்.
எங்களை மன்னிச்சுடுங்க என்றார்கள், உங்களை நான் மன்னித்ததால் தான் குறைந்தபட்ச தண்டனையை வழங்க இருக்கிறேன் என்று கூறினேன். அடுத்த 10 நிமிட இடைவெளியில் ஒருவர் மாற்றி ஒருவர் என, மீதி மூவருக்கும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தேன்.
அவர்கள் நால்வரின் ஆணுறுப்பையும் தீயில் போட்டு எரித்தேன். நால்வருக்கும் ட்ரிப்ஸ் போட்டுவிட்டு, நானும் சாப்பிட ஆரம்பித்தேன்.
மணி: 6:00
பொழுது: மாலை
காயங்கள் கொடிய வலியை கொடுக்கும் ஆதலால், இந்தமுறை 30எம்.ஜி அனஸ்தீஸியாவை அனைவர்க்கும் கொடுத்து மயக்கத்திலேயே வைத்தேன்,
எனக்கு தெரிந்த மருந்தகத்தில் வேலை செய்யும் ஒருவரை வைத்து இல்லீகளாக ஈஸ்ட்ரஜென் எனப்படும் சுரப்பியை வாங்கி வைத்துக்கொண்டேன். இரவானதும் என் வீட்டுக்கு போய் விட்டேன், எப்படியும் இவர்களுக்கு மயக்கம் தெளிய காலை 6 மணி ஆகிவிடும், அதனால் கிளம்பினேன்.
நான் செய்துகொண்டிருப்பது சரியா தவறா என்று தெரியாது, ஆனால் எனக்கு இது தான் நியாயம் என்று தோன்றியது, தூங்கி எழுந்தேன், காலை 5 மணிக்கே வந்தேன், அனைவரையும் செக் செய்தேன், காயம் ஓரளவு குணம் ஆகி இருந்தது, ரத்த கசிவும் கம்மியானது. கொஞ்ச நேரத்தில் அனைவரும் மயக்கத்தில் இருந்து எழுந்து, அவர்கள் நிலையை கண்டு அழுது, புலம்பினார்கள்.
நான் ஒரு ஓரமாக உட்கார்ந்து ரசித்தேன். இன்றே ஆரம்பித்து விடலாம் என்று, எல்லோருக்கும் 20எம்.ஜி. ஈஸ்ட்றஜென் ஹார்மோனை செலுத்தினேன், இப்படியே ஒருவாரம் போனது அவர்கள் உடம்பில் பல மாற்றங்களை கண்டேன், மார்பக வளர்ச்சி ஆரம்பித்தது, எனக்கு பெருமையாக இருந்தது, என்னுடைய பை ப்ராடக்ட் தான் இந்த மூவர் என்று.