சரி… அப்ப நானும் வர்றேன். நீ போயி, நான் வர்றாம இருந்தா நல்லாயிருக்காது.
ஏன், யாராச்சும், ஏதாச்சும் சொல்லுவாங்களோன்னு ஃபீல் பண்றியா என்ன? அவன் குரலில் லேசான கோபம் இருந்தது.
எனக்கு சிரிப்பு வந்தது. அவனையேப் பார்த்து சொன்னேன். ரெஸ்ட் எடுக்க வேண்டிய நீயே, ரெஸ்ட் எடுக்காம போறப்ப எனக்கென்ன வந்தது? தவிர, நீயும் இல்லாம, எனக்கு இங்க போரடிக்கும் அதான் சொன்னேன்! ஓகேயா?
என் பதில் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
பரவாயில்லை. அவகிட்ட ஃபோன் பேசனும்னு ரெண்டு நாளா சொல்லிட்டிருந்தியே. அதைச் செய். கொஞ்சம் தூங்கி எந்திரி. நானும் ரொம்ப நேரம் இருக்கப் போறதில்லை. சீக்கிரம் வந்துடுவேன். சும்மா எட்டிப் பாக்கத்தான் போறேன்.
அப்புறம் நாம கண்டுக்கலைன்னு ஒரு எண்ணம் வந்துடக்கூடாது பாரு! அதான்.
சரி ஓகே!
அவன் சென்றவுடன், தனிமையில், அவனுடனான காதலை உள்ளுக்குள் ரசித்துக் கொண்டிருந்தேன்.
என் மனம் தாங்க முடியா மகிழ்ச்சியில் இருந்தது. சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது. அப்படியே உல்லாசமாக புல்வெளியில் சுற்றிக் கொண்டிருந்தேன்.
இன்று மாலை எப்படியும் அவனிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று உள்ளுக்குள் முடிவெடுத்திருந்தேன்.
5 மணிக்கு மேலாகியும் அவன் வரவில்லை.
இதான் போனவுடனே வர்றதா? இதான் லவ் பண்ர லட்சணமா? உன் லவ்வர் வெயிட் பண்ணிட்டிருக்கான்னு அறிவு வேணாம்? என்று உள்ளுக்குள் அவனை செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தேன்.
அவனுக்காக நான் தயாராகி இருந்த பின்பும் அவன் இன்னும் வரவில்லை!
போனவன் திரும்பி வரும் போது ஏறக்குறைய இரவு 8 ஆகியிருந்தது. உள்ளே வந்தவனைப் பார்த்து, நானே அதிர்ந்தேன்.
கண்கள் சிவந்து, உடை கொஞ்சம் கலைந்து, முகத்தில் பல்வேறு உணர்ச்சிகளுடன் அவனைப் பார்த்தவுடன் தெரிந்தது, ஏதோ சரியில்லை என்று.
அருமையான காதல் கதை.sexஐ ஆபாசம் இல்லாமல், சுவையாக எடுத்துரைத்துள்ளீர்கள்.தொடருங்கள் இதுபோல்.
Hi u interested sex
Genuine comment
Hi nama okkalama
Very nice… another part please
Super lovable story
Genuine comment