அவன் என்னைத் திரும்பிப் பார்த்து முறைத்தான்.
ஏன் நான் கொடுத்தா, வாங்கிக்க மாட்டியா?
அ… அப்டியில்லை, வேணாமே?!
என் கையைப் பிடித்து கொஞ்சம் தனியாகக் கூட்டி வந்தவன், கொஞ்சம் வருத்தத்தோடும் கோபத்தோடும் சொன்னான்.
கொல்லாதடி! டெய்லி ஒரே ஒரு செயினை மட்டும் போட்டுகிட்டு, சிம்ப்பிளா வர்றப்ப, எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?
நீ வீட்டை விட்டு வந்தப்ப, உன் நகை, பணம் எல்லாத்தையும், உன் அப்பாவும், சித்தியும் புடுங்கிகிட்டாங்கன்னு எனக்கு தெரியும்
நீ சிம்ப்பிளா இருந்தாலும் அழகா இருக்கிறங்கிறது உண்மைதான். ஆனா, எண்ணி 10 டிரஸ்ஸை மட்டும் வெச்சுகிட்டு, ஒத்தைச் செயினை மட்டும், திரும்பத் திரும்ப போட்டுக்கிட்டு வர்றப்ப, எனக்கு எப்டி இருக்கும்??? இப்பதான் திரும்ப சம்பாதிச்சு, கொஞ்சம் கொஞ்சமா உனக்குன்னு நீ வாங்க்கிக்குறன்னு எனக்கு நல்லாத் தெரியும்.
இப்ப கட்டியிருக்கிற காஸ்ட்லி புடவையே, என் அக்காவும், மாமாவும், நீ திரும்ப வீட்டுக்கு வந்தப்ப எடுத்துத் தந்ததுன்னு எனக்கு தெரியாதா?
டெய்லி ஆஃபிஸ்ல உன்னை இப்டி பாக்கவும் முடியாம, உனக்கு எதுவும் வாங்கியும் தரமுடியாம, எவ்ளோ ஃபீல் பண்ணேன்னு தெரியுமா?
எல்லாத்துக்கும் மேல, என் வாழ்க்கையிலியே இந்த மூணு நாள்தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்த நாட்கள். இந்த சந்தோஷத்தோட ஞாபகர்த்தமா, இங்க உனக்கு ஏதாவது பெருசா வாங்கனும்னு தோணுது! அதனாலத்தான் சொல்றேன், ப்ளீஸ் வாங்கிக்கோ லாவி!
நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவன் என்னை இந்தளவு கவனித்திருப்பதும், புரிந்து வைத்திருப்பதும், இந்த நாட்களை வாழ்வின் பொக்கிஷம் என்று சொன்னதும், அவன் மேல் அளப்பரியக் காதலைக் கொண்டு வந்தது.
எனக்கும் அப்படித்தானே? என் வாழ்விலும், இவைதானே பொக்கிஷமான நாட்கள்?! இந்த ஊட்டி ட்ரிப்பை என் வாழ்நாளில் மறக்க முடியுமா என்ன?
அருமையான காதல் கதை.sexஐ ஆபாசம் இல்லாமல், சுவையாக எடுத்துரைத்துள்ளீர்கள்.தொடருங்கள் இதுபோல்.
Hi u interested sex
Genuine comment
Hi nama okkalama
Very nice… another part please
Super lovable story
Genuine comment