தயங்கியவாறே, ஸ்விம்மிங் பூலில் இறங்கிவிளையாடிக் கொண்டிருக்கும் போது, திடீரென என்னைப் பார்த்து கேட்டான்!
ஏன் லாவி, அப்ப மத்தவிங்க முன்னாடி இருக்குறதுதான் உனக்கு பிடிக்காது. என் முன்னாடி இருக்கிறது உனக்கு பிரச்சினை இல்லை! அப்டித்தானே?
திருடன்! எல்லாம் தெரிஞ்சிகிட்டே கேக்குறான் பாரு? என்னைச் சீண்டுறதுல உனக்கு அவ்ளோ சுகமாடா?
தவிப்போடும், வெட்கத்தோடும் பார்த்த என்னை அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான். அவனிடம் பீரியட்ஸ், இனி உண்மை தெரிந்த பின் தான் அவனுடன் சேருவது என்ற என் முடிவுகளையெல்லாம் தூக்கி தூர எறிந்து விட்டு, அவனை ஆசையாகத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று என் உள்ளம் துடித்தது!
மதனுக்கும் கூட உள்ளுக்குள் அப்படித்தான் உணர்ந்தான். வாய் விட்டு பேசாதவள், இப்பொழுது கண்களாலேயே பேசும் அளவிற்கு மாறியிருக்கிறாள்.
சிணுங்கி, வெட்கப்படும் போதுதான் இவள் எவ்வளவு அழகாயிருக்கிறாள்?! சில நாட்களுக்கு முன்பு, அருகில் வந்தாளே முறைத்தவள், இப்பொழுது கண்களாலேயே தூண்டில் போடுவதென்ன? என்னை அழைப்பதென்ன?
இப்படி புத்தம் புது மலரைப் போல், இவ்ளோ ஃப்ரெஸ்ஸா, அழகா, இப்படி என் முன்னாடி வெட்கப்பட்டா, என்னால கையை வெச்சுகிட்டு எப்டி சும்மா இருக்க முடியும்?
உண்மையில், ஒரு ஆணுக்கு பெருத்த போதையைத் தருவது, பெண்ணின் நிர்வாணம் அல்ல. எந்த ஆணைக் கண்டு மட்டும் பெண்ணின் உள்ளம் வெட்கப் பூக்களை பூக்கிறதோ, எவனிடம், அவளது கன்னங்கள் சிவக்கிறதோ, அதுவே அந்த ஆணுக்கு பெரிய போதை.
அந்தப் போதையைத்தான் லாவண்யா, மதனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அந்தத் தருணத்தில் மதன் முடிவு செய்தான். இந்தப் பிரச்சினைக்கு சீக்கிரம், முடிந்தால் இன்றே முடிவு கட்டி விட வேண்டும் என்று!
அருமையான காதல் கதை.sexஐ ஆபாசம் இல்லாமல், சுவையாக எடுத்துரைத்துள்ளீர்கள்.தொடருங்கள் இதுபோல்.
Hi u interested sex
Genuine comment
Hi nama okkalama
Very nice… another part please
Super lovable story
Genuine comment