அந்த வகையில், லாவண்யாவிற்க்கு இன்னொரு நல்ல நட்பு கிடைத்தது.
வைஷாலியிடம் பேசிவிட்டு வந்த அன்றுதான், லாவண்யா, மதியம் மிகவும் அப்செட்டாகக் காணப்பட்டிருக்கிறாள். மதனிடம் ஹாஃப் டே லீவ் எடுத்து விட்டுச் சென்றிருக்கிறாள்.
ஆரம்பத்தில் கடும் வருத்தத்தில் இருந்தவளுக்கு, பின் யோசிக்க யோசிக்க ஒன்று புரிந்தது. அது,
இது வருத்தப்பட வேண்டிய தருணமல்ல, உண்மையில் மிகவும் சந்தோஷப்பட வேண்டிய நேரம்!
தன்னுடைய உயிர்த் தோழி, இன்னமும் அதே அன்புடன் இருக்கிறாள் என்ற உண்மை!
இப்பொழுது கூடுதலாக, ஹாரீசின் மூலம் கிடைத்திருக்கும் அண்ணன் என்ற உறவு!
வைஷாலியின் நட்பு!
எல்லாவற்றுக்கும் மேலாக, தன் காதலன், என் மன்மதன் எந்தத் தருணத்திலும் என் மேலான காதலை நிறுத்தவில்லை!
இது எவ்வளவு பெரிய சந்தோஷம்? இதற்காக நான் பூரித்துதான் நிற்க வேண்டும்!
மனதில் ஏற்பட்ட தெளிவு, அடுத்த நாளிலிருந்து அவளை பழைய லாவண்யாவாக மாற்றியிருந்தது.
ஒரு வகையில் நடந்த நிகழ்வுகளை, மதனுடைய காதலை சரியான சமயத்தில் ஏற்காத தன்னுடைய முட்டாள்தனத்திற்கு, மனதிற்கு வேண்டியவற்களைப் பற்றி யோசிக்காமல், குறைகள் மட்டுமே சொல்லும் சமுதாயத்தைப் பற்றி நினைத்ததற்க்கான தண்டனை என்றே நினைத்தாள்.
அதற்குப் பின்பு அவளை வருத்திய ஒரே விஷயம், இதை எப்படி மதனுக்குச் சொல்வது, சொன்ன பின் அவனுடைய கோபத்தை எப்படி எதிர்கொள்ளுவது என்பது மட்டும்தான்!
அந்தச் சூழ்நிலையில்தான் இப்போது லாவண்யா இருக்கிறாள்!
நீ ஏண்டி அன்னைக்கு ரூமுக்குள்ள வரலை? உண்மை தெரிஞ்சும் இத்தனை நாளா, ஏன் என்கிட்ட பேசலை?
எல்லாவற்றுக்கும் நான் அமைதியாகவே இருந்ததில் கடும் கோபமடைந்தவன், என்ன நெருங்கி, என் தோள்களை அழுத்தமாக பிடித்து உலுக்கினான்.
அருமையான காதல் கதை.sexஐ ஆபாசம் இல்லாமல், சுவையாக எடுத்துரைத்துள்ளீர்கள்.தொடருங்கள் இதுபோல்.
Hi u interested sex
Genuine comment
Hi nama okkalama
Very nice… another part please
Super lovable story
Genuine comment