காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 10 46

ஆனால், அவளுடைய மனதிலோ, இது எல்லாவற்றுக்கும் காரணம் மதன் என்று அவன் மேல் கடும் கோபம் வந்திருந்தது. காதலைச் சொன்னால் மட்டும் போதுமா? காதலியைக் காப்பாற்ற வேண்டாமா?

ஆனால் அவள் யோசிக்காத ஒரு விஷயம்,

தனக்கு மிக நெருக்கமான தன் தோழியிடம் கூட வராத கோபம், மதனின் மேல் ஏன் வருகிறது? இத்தனைக்கும், காதல் சொன்னவனை, வேண்டாம் என்று சொன்னவளே அவள்தானே? அப்படியிருக்கையில், காப்பாற்ற வேண்டிய தேவை அவனுக்கு என்ன இருக்கிறது?

யோசித்திருந்தால் அவளுக்குப் புரிந்திருக்கும்!

காதலை அவள் மறுத்தாலும், எப்பொழுதோ அவள் மதனை காதலிக்க மட்டுமல்ல, உள்ளுக்குள் அவனுடன் வாழவே ஆரம்பித்து விட்டாள் என்பதும், இப்போது அவள் காட்டுவதும் கோபமல்ல, உரிமையுள்ளவனிடம், அவள் காட்டும் வருத்தம், தன் சோகங்களை மறக்க, தன் காதலனிடம் தேடும் அடைக்கலம் என்றும் புரிந்திருக்கும்.

மதனின் அக்காவிடம், அவள் மனசு விட்டு பேசும் போதும், அவன் அக்காவும் அவளைத் திட்டியிருக்கிறாள்.

மதன், உன்னை அப்படி சொல்லுவானா? நீ எப்டிடீ அப்படி நினைச்ச?

எனக்கு மட்டும் ஆசையா என்ன? அவன் அப்படி சொல்ல மாட்டான்னு எனக்கும் தெரியும். ஆனா, அன்னைக்கு நாந்தானே கேட்டேன்?

ஆனா, அதுக்கப்புறமும், அடுத்த நாள், உன் மூலமா ட்ரை பண்ணலாம்னு நினைச்சேன். அப்டி டக்குன்னு இதை நான் நம்புற ஆளா?

என்னால எத்தனை குழப்பத்தைத்தான் தாங்க முடியும்? ஆனா, அதுக்குள்ள, என்னென்னமோ நடந்துடுச்சி என்று புலம்பியிருக்கிறாள்.

அவன் அக்காவோ, நீ என்ன சொன்னாலும், கண்டிப்பா இதுல ஏதோ குழப்பம் இருக்கு! முன்னன்னா கூட, நீ என்கூட வான்னு சொல்லியிருந்திருப்பேன். ஆனா, இப்ப, அதுவும் மதன் மேல இப்படி ஒரு குற்றச்சாட்டு இருக்குறப்ப, நான் உன்னைக் கூட்டிட்டு போக விரும்பலை. அதை முதல்ல க்ளாரிஃபை பண்ணு! வேணும்ன்னா சொல்லு, நான் இதைப் பத்தி அவன்கிட்ட கேக்குறேன்.

இல்லடி! இது, எங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம். அன்னிக்கு, நானா அவன் ரூமுக்குள்ள போகாதது, என் தப்புதான். அதுனால, நானே அவன்கிட்ட நேரா பேசிக்கிறேன்.

சொன்ன லாவண்யாவை இமைக்காமல் பார்த்தாள், மதனின் அக்கா!

எ… என்னடி?

அவனும், இதையேதாண்டி சொன்னான். இந்த விஷயத்தை அவனே பாத்துக்குறேன்னு. நீயும் அதான் சொல்ற! இப்படி, பல விஷயங்கள்ல, நீங்க ரெண்டு பேரும் செம மேட்சுடி!

Updated: December 11, 2021 — 7:56 am

7 Comments

  1. அருமையான காதல் கதை.sexஐ ஆபாசம் இல்லாமல், சுவையாக எடுத்துரைத்துள்ளீர்கள்.தொடருங்கள் இதுபோல்.

    1. Genuine comment

    2. Hi nama okkalama

  2. Very nice… another part please

  3. Super lovable story

  4. Genuine comment

Comments are closed.