ஓ… எதுவும் சொல்லாம, செய்யாம இருந்தாலே பாசிடிவ்னு அர்த்தமா?
ஆமா! அப்டித்தான் என்று கடுப்பில் சொன்னேன்.
பின், மெல்ல காதருகே குனிந்து கேட்டான்!
அப்ப, முத தடவை, உன்னைத் தொட்டப்ப, எதுவும் சொல்லாம, செய்யாம இருந்தியே? அதுவும் உன்னோட பாசிடிவ் சிக்னல்னு நான் எடுத்துக்கலாமா?? ம்ம்?
நான் அவனையே ஆசையாகப் பார்த்தேன். திருடன்… எல்லாம் தெரிஞ்சிகிட்டே கேட்டிருக்கான்!
பதில் சொல்ல முடியாமல் என்னை தவிக்க வைத்தவன், இன்னும் சீண்ட ஆரம்பித்தான்.
லாவி…
ம்ம்ம்!
என்ன இருந்தாலும் நான் சின்னப்பையன்னு நீயே சொல்ற! நீயும், என்னை விட வயசுல பெரியவ!
அதுனால?
அதுனால, நீதான் அடுத்து என்ன பண்ணனும்னு எனக்குச் சொல்லித்தரனும்! ஏன்னா, நான் சின்னப் பையனில்லை! எனக்குதான் எதுவும் தெரியாதில்ல?
உனக்காடா தெரியாது?!
ஒரு முறை தெரியாமல் சொன்னதை வைத்து என்னை பயங்கரமாக சீண்டிக் கொண்டு இருந்தான். அவனையே கண்கள் விரியப் பார்த்துக் கோண்டிருந்தேன். அவனோ, முகத்தை பாவமாக வைத்து, பேசிக் கோண்டிருந்தான்.
அமைதியா இருந்தாலே பாசிடிவ் சிக்னல்னு. உனக்கு தெரிஞ்சிருக்கு. அதுனால, நீதான் சொல்லித்தரனும் லாவி!
எனக்கு கோபம் வந்திருந்தது. நானே எடுத்துக்கோன்னு சொல்லியும், இன்னும் பேசிட்டிருக்கானே இந்த மடையன் என்று கடுப்பானேன்.
அதே கடுப்பில்,
அதெல்லாம் சொல்ல முடியாது, போடா என்று அவனிடம் இருந்து விலகி வெளியே ஓட ஆரம்பித்தேன்.
ஏய், எங்கடி போற? என்று என்னைப் பிடிக்க, பின்னாடியே துரத்து வந்தான்.
அருமையான காதல் கதை.sexஐ ஆபாசம் இல்லாமல், சுவையாக எடுத்துரைத்துள்ளீர்கள்.தொடருங்கள் இதுபோல்.
Hi u interested sex
Genuine comment
Hi nama okkalama
Very nice… another part please
Super lovable story
Genuine comment