காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 10 47

இருந்தாலும் மனசு கேளாத வைஷாலி, நான் வேணா பாஸ்கிட்ட போயி சொல்லிட்டு வரட்டா என்று கிளம்பினாள்.

அவளைத் தடுத்த லாவண்யா, அவளிடம் கேட்டாள்.

உங்களுக்கு இந்த வேலை வேணாமா வைஷாலி?

எ… என்னச் சொல்றீங்க லாவண்யா?

இப்ப நீங்க போய் சொன்னீங்கன்னா, மதன் கோபத்துல, வேலையை விட்டே தூக்குனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. அதுனால நீங்களா போய் சொல்லாதீங்க.

ஒரு வேளை என்னிக்காவது மதனா வந்து கேட்டா, அன்னிக்கு உண்மையைச் சொல்லுங்க. அப்பக் கோபப்பட்டு ஏன் என்கிட்ட சொல்லலைன்னு கேட்டாலும், நாந்தான் அப்படி நடந்துக்கச் சொன்னேன்னு சொல்லுங்க. அவன் விட்டுடுவான்.

லா… லாவண்யா!

இது நீங்க தெரியாம செஞ்ச தப்புன்னாலும், இதோட இம்பாக்ட் உங்களுக்கு தெரியாது வைஷாலி. நான் மதன்கிட்ட பேசிக்கிறேன். மதன் கேட்டா மட்டும், நீங்க என் பேரை யூஸ் பண்ணுங்க என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

மதன் என்று கூப்பிட்ட முறையும் சரி, அவ்வப்போது அவன் இவன் என்றதும் சரி, அவளுடைய தன்னம்பிக்கையும் சரி, எல்லாமே, வைஷாலிக்கு, லாவண்யாவின் பவர் என்ன என்று சொல்லியது.

தவிர, அதன் பின் பல நேரங்களில், லாவண்யா மதனை எதிர் கொள்ளும் விதமும், மதன், லாவண்யா மேல் காட்டும் தனிப்பட்ட அக்கறையும், அவர்களுக்கிடையேயான உறவை இவளுக்கு தெளிவாகக் காட்டியது.

மனசு தாங்காமல், வைஷாலியே, என்னால, உங்களுக்குள்ள ஒரு பெரிய பிரிவு வந்திருச்சே. என்னை மன்னிச்சிருப்பா என்று புலம்பியிருந்திருக்கிறாள்.

லாவண்யாவோ, அவளை சமாதானப்படுத்தியிருக்கிறாள்.

யார் என்ன சொல்லியிருந்தாலும், அன்று, தான் அவனது அறைக்குள் சென்றிருந்தால், இந்தக் குழப்பமே இருந்திருக்காது. அவள் மேலும் தப்பு இருக்கையில், ஏற்கனவே வருத்தப்படுபவளை மீண்டும் வருத்த விரும்பவில்லை லாவண்யா! யாரென்ரு தெரியாதா போதே, மனமிரங்கி, பல முறை இவளுக்காக மதனிடம் பேசி திட்டு வாங்கியவளாயிற்றே!

Updated: December 11, 2021 — 7:56 am

7 Comments

  1. அருமையான காதல் கதை.sexஐ ஆபாசம் இல்லாமல், சுவையாக எடுத்துரைத்துள்ளீர்கள்.தொடருங்கள் இதுபோல்.

    1. Genuine comment

    2. Hi nama okkalama

  2. Very nice… another part please

  3. Super lovable story

  4. Genuine comment

Comments are closed.