காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 10 47

கொஞ்ச சொத்தேனும் தனக்காக வைத்துக் கொள்ள, நேரடியாகப் போராடி, மிரட்டி, பின் கெஞ்சி, எதுவும் வேலைக்காகாமல், பின் தன் மனைவியை விட்டு அழ வைத்து, செண்டிமெண்ட்டலாக ஏதேனும் வாங்க எல்லா வழிகளையும் அவர் முயற்சி செய்த நேரம்.

அந்த சில்லறைத்தன முயற்சிகளைக் கண்டு கடுப்பான மதன், வீட்டிற்கு அதிகம் செல்லாமல், தெரியாதவர்களை உள்ளே விடாமல், தன் முயற்சியில் ஈடுப்பட்டிருந்த நேரம்.

அந்த நேரத்தில், லாவண்யா என்று சொன்னதை, அவன் செக்ரட்டரி சரண்யா என்று எடுத்துக் கொள்ள, மதன் அதை, தன் சித்தியின் முயற்சி என்று எடுத்துக் கொண்டான்.

அன்று, லாவண்யாவால், மதனின் அந்தப் பேச்சை ஜீரணிக்கவே முடியவில்லை. அவமானம் தாங்காமல், உடனே அங்கிருந்து வெளியேறி விட்டாள்.

என்னதான் மனம், உறுதியாக தன் மணாளனை நம்பினாலும், குழப்பத்திலும், நடக்கும் முயற்சிகளாலும், ஏற்கனவே மதனின் அக்காவின் பேச்சாலும், மனதளவில் மிகவும் தளர்ந்திருந்த லாவண்யாவிற்கு, இது பேரிடியாய் அமைந்தது.

அதே சமயம், இப்பொழுதும் அவள் நினைத்து வருத்தப்படும் ஒன்று, அவ்வளவு தூரம் சென்றவள், அவன் பேச்சைக் கேட்டவுடன், கோபமாக, ஏன் அவனது அறைக்குள் நுழையவில்லை என்பதுதான்!

குறைந்த பட்சம், அவனை திட்டவாவது உள்ளே நுழைந்திருந்தால்…. நிலையே வேறு!

அவன் பேச்சிலேயே மனம் உடைந்து, குழப்பத்தில் வெளியே வந்தவளை, அவளது அப்பாவே அழைத்து, நீ கல்யாணம் பண்ணிக்கல்லாம் வேணாம். இப்ப ஒரு பூஜைக்காக, குலதெய்வம் கோயிலுக்கு மட்டும் வந்துட்டு போ என்று அழைக்க, அவள் கோயிலுக்குச் சென்று, பூஜைக்கு அமர்ந்து, அமைதி தேடி, கண் மூடி, சாமி கும்பிடும் தருணத்தில், அவள் கழுத்தில் தாலி கட்டப்பட்டது.

இந்த உலகில், எல்லாரும் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்பது போல் உணர்ந்த லாவண்யா, வெகுண்டெழுந்து, நேரடியாக போலீசில் கம்ப்ளையிண்ட் செய்து விட்டாள். அவளது இந்த ஆக்ரோஷத்தை அவனது அப்பா மற்றும் சித்தியே எதிர்பார்க்கவில்லை.

இத்தனை நாட்கள் அமைதியாக, எதற்கும் எதிர்த்துப் பேசாதவள், இவ்வளவு கோபம் அடைவாள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவளை ஏமாற்றி தாலி கட்டியவனுக்கு கடும் பயம் வந்திருந்தது.

Updated: December 11, 2021 — 7:56 am

7 Comments

  1. அருமையான காதல் கதை.sexஐ ஆபாசம் இல்லாமல், சுவையாக எடுத்துரைத்துள்ளீர்கள்.தொடருங்கள் இதுபோல்.

    1. Genuine comment

    2. Hi nama okkalama

  2. Very nice… another part please

  3. Super lovable story

  4. Genuine comment

Comments are closed.