காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 10 46

சிறிது நேரம் கழித்து கேட்டேன். உனக்கு எப்டி வைஷாலிகிட்ட கேக்கனும்னு தோணுச்சு?

ம்… உனக்கா அறிவு வர்ற மாதிரி தெரியலை. அந்த ரெண்டு நாளுக்கப்புறம், எனக்கு மனசு கேக்கலை. நீ வாய் விட்டு சொல்லலைன்னாலும், எப்ப உன்னையே என்கிட்ட கொடுக்க நினைச்சியோ, அப்பியே எனக்கு தெரிஞ்சிடுச்சி.

அதுனால, எப்டி இந்த பிரச்சினை வந்துதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.

உன்னை, உங்க வீட்ல ஏமாத்த நினைச்சப்ப, நீ என்கிட்டயோ இல்ல, அக்காகிட்டயோ கூட ஹெல்ப் கேக்காம இருந்திருக்க மாட்டியேன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அதுனால அக்காகிட்ட பேசுனேன்!

அவ சொன்னாளா? அவளை எதுவும் சொல்லாதேன்னு சொன்னேனே?

அறைஞ்சேன்னா? நீயும் சொல்ல மாட்ட, சொல்ல வர்றவங்களையும் தடுத்துடுவ? அப்புறம், நான் என்னதாண்டி பண்றது?

நான் அவகிட்ட கேட்டது ஒண்ணுதான், நீ, அந்த பிரச்சினை சமயத்துல, என்கிட்ட ஹெல்ப்புக்காக வந்தியா இல்லையா, ஜஸ்ட் யெஸ் ஆர் நோ மட்டும் சொல்லுன்னு கேட்டேன்.

அவ யெஸ்னு சொன்னா.

அப்புறம்தான், நானா, அந்த டைம்ல வைஷாலிதானே, எல்லாம் பாத்துகிட்டான்னு அவளைக் கேட்டேன். இப்ப அவளைக் கேட்டதுக்கப்புறம்தான் எல்லா விஷயத்தையும் சொன்னா. அதுக்கப்புறம் சொல்ல வந்தவளை, நீ தடுத்ததும் சொன்னா.

நீ ஏன்டி, அப்பவே என்கிட்ட வந்து சொல்லலை?

——-

சொல்லுடி!

எ… எந்த மூஞ்சியை வெச்சுகிட்டு வர்றது?

முதல்ல லவ்வைச் சொன்னப்பவும், முடியாதுன்னு சொல்லிட்டு, இப்ப இந்தச் சமயத்துலியும், தப்பே பண்ணாத உன்னை திட்டி, என்னை பாக்க வராதன்னு பேசிட்டு, இப்ப எல்லாம் தெரிஞ்ச பின்னாடி வந்தா அது, என் காதலுக்குதானே அசிங்கம்! எப்டி வர்றது?

உசிரா காதலிக்கிறவனை, நம்பாத நான்லாம் என்ன பொண்ணு? ம்ம்?

நான் இயல்பாக, எந்தளவு அவனைக் காதலிக்கிறேன் என்று சொன்னதும், இன்னும் என்னை அழுத்தமாக இறுக்கிக் கொண்டான். பின் சொன்னான்.

Updated: December 11, 2021 — 7:56 am

7 Comments

  1. அருமையான காதல் கதை.sexஐ ஆபாசம் இல்லாமல், சுவையாக எடுத்துரைத்துள்ளீர்கள்.தொடருங்கள் இதுபோல்.

    1. Genuine comment

    2. Hi nama okkalama

  2. Very nice… another part please

  3. Super lovable story

  4. Genuine comment

Comments are closed.