கோபத்துடன் கேட்டான். ஏன்?
மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு!
எதுக்கு? என் கூட படுத்ததுக்கா?
இப்பொழுது எனக்கு கடும் கோபம் வந்தது. அதே கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தேன். ஆனால் அவனோ சிரித்துக் கொண்டிருந்தான். பட் பட்டென்று அவனது தோள்களில் சில அடிகள் வைத்து விட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தேன்.
ஏய், இப்ப சொல்றேன் கேட்டுக்கோ! இனி, நானும், இந்த உடம்பும், உனக்கு மட்டுந்தான் சொந்தம். நீ என்னை கல்யாணம் பண்ணிகிட்டாலும் சரி, இல்ல கடைசி வரை கல்யாணமே பண்ணிக்காட்டியும் சரி, எனக்குக் கவலையில்லை! புரியுதா? இனி இப்டி பேசுன…
கல்யாணமே பண்ணிக்காடியும் பரவாயில்லையா? அப்ப, ஊருக்காக வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிகிட்டு, உன்கிட்ட வந்தாலும் உனக்கு ஓகேயா?
நீ யாரைக் கல்யாணம் பண்ணிகிட்டாலும் எனக்கு கவலையில்லை. ஆனா, என்னைப் பொறுத்த வரை, நான் உனக்கு மட்டும்தான் சொந்தம்…… அதுதான் நான் என் தப்புக்கு செய்யுற பிராயிச்சித்தம்!
—————-
அப்படின்னு சினிமா டயலாக், பேசுவேன்னு நினைச்சியா? கொன்னுடுவேன் கொன்னு.
என் வாழ்க்கைல மட்டுமில்லை, உன் வாழ்க்கைலியும், இனி நான் மட்டுந்தான்.
அந்த வாழ்க்கையை, நீ கல்யாணம் பண்ணிட்டு வாழ்ந்தாலும் சரி, இல்லை பண்ணாம வாழ்ந்தாலும் சரி, எனக்கு கவலையில்லை. என் வாழ்க்கை உன்னோடத்தான். அதுக்கு இந்த சமூகம் என்ன பேரு வெச்சாலும் எனக்கு அதைப் பத்தி கவலையில்லை.
ஆனா, உனக்கு நான் மட்டும்தான். எனக்கும் நீ மட்டும்தான்! அப்பிடியிப்படி, இன்னொரு பொண்ணு பக்கம், பாக்கனும்னு நினைச்சாக் கூட, மவனே அடி பின்னுடுவேன். புரியுதா? உன்னை மட்டுமில்லை, அந்தப் பொண்ணையும் சேத்து!
நான் என்ன பேசினாலும், அவனது புன்னகை மட்டும் மாறவேயில்லை!
அப்புறம் என்னாத்துக்குடி, இன்னொருத்தன் கட்டுன தாலியை இன்னும் கட்டிட்டு இருக்க?
உனக்கு உறுத்தனும்னுதான்… உன் தாலி இருக்க வேண்டிய இடத்துல, எவனோ கட்டுன தாலி இருக்கேன்னு, உனக்கு உறுத்த வேணாம். அது எப்டி இன்னொருத்தன் கட்டலாம்னு, உனக்கு கோவம் வரவேணாம்? அந்தத் தாலி, ஏன் இன்னும் அங்க இருக்குன்னு, வெறி வரவேணாம்? அதுக்குதான் உன் கண் முன்னாடி போட்டிருக்கேன்?
அருமையான காதல் கதை.sexஐ ஆபாசம் இல்லாமல், சுவையாக எடுத்துரைத்துள்ளீர்கள்.தொடருங்கள் இதுபோல்.
Hi u interested sex
Genuine comment
Hi nama okkalama
Very nice… another part please
Super lovable story
Genuine comment