காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 1 85

நீ யாரைச் சொல்ற?

வேற யாரு?! என் சின்ன மாமனார்தான். எல்லாம் தெரிஞ்சும் சும்மா இருக்குறது என் சின்ன மாமியார்!

ஏய், என்ன சொல்ற? அவிங்களைப் பாத்தா நல்லவங்க மாதிரி இருந்துது. அவிங்க உன் கிட்ட கோபப்பட்டு கூட நான் பாத்ததில்லையே.

ஏளனமாகச் சிரித்தாள்… பொய்யா நடிக்கிறவன்தான், காரியம் முடியற வரைக்கும், சுயரூபத்தை வெளிய காட்டிக்கவே மாட்டான். உண்மையா இருக்குறவன், எல்லா உணர்ச்சியையும் காட்டுவான். அதான், அவிங்க என்கிட்ட கோவப்பட்டதில்லை.

கல்யாணம் ஆன உடனே, அவரு என்கிட்ட சொல்லிட்டாரு. அவிங்க அப்பா அம்மா போனதுக்கப்புறம், அவரை நல்லபடியா வளத்து, பாசமா பாத்துகிட்டவிங்க, அவரு சித்தப்பாவும், சித்தியுந்தானாம்.

அதுனால, அவிங்க, அப்பா, அம்மாவுக்கும் மேலியாம். அதுனால, அவிங்களைப் பத்தி சும்மாக் கூட தப்பா சொல்றது, தேவையில்லாம பேசுறது, கோள் மூட்டுறது, முக்கியமா அவிங்ககிட்ட இருந்து பிரிக்க நினைக்கிறது இதெல்லாம் பிடிக்காதுன்னு கண்டிஷனா சொல்லிட்டாரு!
நானும், அவ்ளோ நல்லவிங்களை என்னத்தை போயி சொல்லப் போறோம்னு கம்முனு இருந்துட்டேன். ஆனா, கொஞ்சம் கொஞ்சமாதான் அவிங்க சுயரூபம் தெரிஞ்சுது!

முதல்ல, நான் கொண்டு வந்த சீர் பத்தலைன்னு, என் மாமியார் மூலமா ஆரம்பிச்ச பிரச்சினை, கொஞ்சம் கொஞ்சமா வளந்து ரொம்பக் கேவலமான நிலைக்கு போயிருச்சி.

என்ன சீர் பத்தலையாம்? பயங்கர ஆடம்பரமாதானே கல்யாணம் நடந்துது? நான் அதுல எந்த பிரச்சினையும் பண்ணலியே?

கல்யாணத்துலல்லாம் திருப்திதான். அப்ப, அமைதியாத்தான் இருந்தாங்க என்று சொன்னவள் என்னையே பார்த்தாள்.

அப்பா, அம்மாவை, இந்த பிசினஸ், சொத்து இதுலெல்லாம் இருந்து தள்ளி வைக்க, என் கல்யாணம் முடியட்டும்னுதான் வெயிட் பண்ணியா?

நான் ஆச்சரியமானேன்! அது எப்படி உனக்கு தெரியும்?!

அவள் இகழ்ச்சியாக சிரித்தாள். நீ அப்பாவை பிசினஸ் பக்கம் வர வேண்டாம்னு சொன்னது, சொத்துல பங்கில்லை, வீட்டோட இருங்க, மாசா மாசம் காசு மட்டும் தரேன்னு சொன்னது, எல்லாம் அவங்களுக்கும் தெரியும். தெரிஞ்சதுக்கு அப்புறம்தான் அவிங்க ஆட்டம் ஆரம்பிச்சுது.

2 Comments

  1. Next part

  2. Super next part upload pannunga

Comments are closed.