காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 1 85

நான் சொல்லி முடித்ததும் அங்கு பலத்த அமைதி. என் தாத்தாவிற்க்கோ, இந்த வயதில் எனக்கு இருந்த தீர்க்கமான அறிவையும், தன்னம்பிக்கையையும் கண்டு பெருத்த ஆனந்தம்.

அவ்வளவு நேரம் என்னைத் திட்டிய, என் அக்காவோ, என் முடியை கோதி கொடுத்து, ஆல் தி பெஸ்ட் டா, நீ நல்லா வருவடா என்றூ மனமாரச் சொன்னாள்.
அவள் என்னிடம் எவ்வளவு பாசம் காட்டினாலும், நான் அவளிடம் என்றுமே பாசம் காட்டியதில்லை. அதற்காக அவளும் தன்னை மாற்றிக் கொண்டதில்லை.

அதே சமயம், அவளை எனக்கு பிடிக்கும் என்பது, அவளுக்கும் தெரியும். தாத்தா கூட சில சமயம் மனமுருகிச் சொல்லியிருக்கிறார், எனக்கப்புறம், இவனுக்குன்னு யாரிருப்பாங்கன்னு ஃபீல் பண்ணியிருக்கேன், நீ வந்ததுக்கப்புறம் எனக்கு நிம்மதியா இருக்கு, இனி நான் செத்தாலும் கவலையில்லை என்று.

அவளோ தாத்தாவின் கையை பிடித்துக் கொண்டு, சும்மா கண்டதையும் போட்டு கொழப்பிக்காதீங்க. அதெல்லாம், சார் நல்ல படியா இருப்பாரு. அவருதான், என்னை மட்டுமில்லாம, இன்னும் எத்தனை பேர் இருந்தாலும் பாத்துக்குவாரு என்று நம்பிக்கையூட்டினாள்.

இப்படியே எங்களுடைய உறவு தொடர்ந்தது. இடையே நான் பிஈ முடித்து, சொன்ன படியே ஐஐஎம் மில் MBA முடித்தேன். எங்கள் பிசினசையும் முழுக்க என் கையில் கொண்டு வந்தேன். அது இப்போது பன்மடங்கு விரிந்து நின்றது. என் தந்தையின் அதிகாரம் முழுக்க பிடுங்கப் பட்டது. அவர் ஒரு பொம்மை எம் டி யாக மட்டுமே இருந்தார். அவரையோ, அவரது முதல் மனைவியையோ நான் கண்டு கொள்வது கிடையாது.

பணத்திற்க்காக, என் தந்தை என் மேல் காட்ட முயன்ற போலி பாசத்தை, என் பார்வையிலேயே கிள்ளி எறிந்தேன்.

இடையே அவளும் இஞ்சினியரிங் முடித்து, ஒரு ஐடி கம்பெனியில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். தாத்தா எவ்வளவு வற்புறுத்தியும், எங்கள் நிறுவனத்தில் ஒரு பொறூப்பை எடுத்துக் கொள்ள அவள் சம்மதிக்கவில்லை. அதில் அவள் மிகப் பிடிவாதமாக இருந்தாள். இது எனக்கு அவள் மேலிருந்த மரியாதையை அதிகப்படுத்தியது.

அவளுக்கு கல்யாண வயது வருகையில், தாத்தாதான் அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார். என் தாத்தாவிற்கும், அவளுக்கும் இருந்த பாசத்தை உணர்ந்த அவள் பெற்றோர்களும், தாத்தாவே செய்தாலே மிகச் சிறப்பாகச் செய்வார் என்று அவர் போக்கில் விட்டனர்.

2 Comments

  1. Next part

  2. Super next part upload pannunga

Comments are closed.